Thursday, November 3, 2011

விடை பெறுகிறோம்

நான் இந்தியாவில் இருந்து வந்தது என் பொன்னு பேரனைக் காண.
நாள் நெருங்குகிறது இந்நாட்டை விட்டுப் போக. இன்னமும் நாலு
நாளே உள்ளன...வெகு வேகமாக சுற்றுதோ பூமி.
நாளும் அதனால் வேகமாய் போனது.திருவோண தினத்தில் வந்த
நான் பேரன் பிறந்தநாள் விருந்துண்டு பேருவகை அடந்தேன்.தீபாவளித் திரு
நாள் வந்த புதனில் புத்தாடை உடுத்து மக்களுடன் இருந்தேன்.ஏளாம்
நாள் நவம்பர் மாதத் திங்கள் மாலை வரை குவைத்தில்.மறு
நாள் செவ்வாய் காலையில் இந்தியாவினில் என் வீட்டில்

நான் சுமந்து செல்வது நல்ல உள்ளங்களின் அன்பை
என் மனதினில் உள்ள பசுமையான நினைவுகளில்
வானுயர் கட்டிடங்களோ ஊசிக்கோபுரமோ இல்லை;இங்குளோர்
அன்பை குழைத்து எம்மீது பூசிய அழகை சுமந்து செல்கிறோம்.
தாயிடம் தந்தையிடம் அண்ணனிடம் தோழனிடம்
அன்பைப் பொழிவது போல் அதுக்கு எள்ளளவும் குறையாமல்
எங்களையும் வீட்டுக்கழைத்து விருந்தளித்த பாங்கினை
வானில் பறக்கும் போதும் வீட்டினில் உறங்கும் போதும்
நினைவில் கொள்வோம்.போய் வருகிறோம்....

இந்து திருநாளாம் திருவோண நாளில் இந்தியாவில் இருந்து புறப்பட்டோம்.
இஸ்லாம் திருநாளாம் பக்ரீத்பெருநாளில் இங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறோம்

No comments:

Post a Comment