Sunday, January 26, 2014

என் மனதை நனைத்த அனந்தாவின் அற்புதமான வரிகள்


Ananda Padmakumar தமது முகநூலில் பதிவு செய்தது........

10 January


என் ரெயில் பயணங்கள்
சின்னஞ்சிறு வயதில் ரெயில் கடப்பதற்காக
காத்திருக்கும் தருணங்களும் பேரின்பம். புகை கக்கும் வண்டி
அடுக்கி வைக்கப்பட்ட தொடர் பெட்டிகள் அது எழுப்பி செல்லும்
ஒலி இவை யாவும் மன அடுக்குகளின் மகிழ்ச்சி பக்கங்கள்.
ரெயில்வே கேட் மூடி இருக்க வேண்டும் என்ற
சிறு பிள்ளை வேண்டுதலை ஏற்கும் கடவுள் மற்றவர்களின் சலிப்பை
ஒரு நாளும் கண்டு கொள்வதில்லை
கடைசி பெட்டி கண்ணை விட்டு அகலும் வரை இமை மூடாது
வியந்த நாட்கள் அன்று.கடைசி பெட்டி வந்தவுடனே சீறும் வண்டிகளில் நாம் இன்று.
கடக்கும் ரயில்களில் பலவித உணர்வுடன்
பயணிக்கும் மனிதர்களின் உருவம் சின்ன மனதில் தேவ தூதர்களை
பார்த்த வியப்பு மேலிடும்.
அந்த பயணத்தின் முடிவில் அவர்கள் அடையும் இடம் பற்றிய
பெருங்கனவு பல நாள் இரவுகளை நிறைத்திருந்தது
காத்திருந்த தருணங்கள் முடிந்து பயணப்பட்ட நாட்களை அதில்
கண்ட மனிதர்களை மனம் எண்ண தொடங்குகிறது.
unreserved இல் அத்தான் விரித்து தந்த தினசரிகளுள் படுத்த போதும்
தூக்கம் கண்களை நிறைத்திருந்தது.கழிவறையில் இருக்கும்
wash basin கள் புதுமையாய் இருந்தது.
இளைஞர் பருவம் அடைந்த போதினில் பயணங்கள் வெவ்வெறு
கோணங்களை அடைந்ததை மடை மாற்றம் என்று சொல்லலாமா ?
அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் மொட்டை தலையுடன் வந்த இன்னொரு இளைஞன் என் வகுப்பு தோழன் என்பதுவும்
அவனது தந்தைக்கு இறுதி சடங்கு முடிந்து பணி நிமித்தமாக பயணம் செய்யும்
தகவலும் தடக் தடக்கென ஒலிக்கும் ரயில் வண்டியின் ஓசையோடு
அவனது அழுகுரல்கள் அமுங்கி போனதுவும் மனதை தழு தழுக்க வைத்த நிகழ்வுகள்.
வாழ்வெனும் பெரும் கடலில் நாம் எதிர் பாராமல் சந்தித்த நல்ல மனிதர்கள் நம்
தவப்பலனோ? "தீதும் நன்றும் பிறர் தர வாரா".
இந்த ஆண்டின் முதல் நாளே இன்னொரு ரயில் பயண வாய்ப்பு கிடைத்தது
இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் என் மனைவி யும் வண்ண கனவுகளோடு என் மகனும் பயணப்பட்ட நாள்.
சூச்சு போகணும் சூச்சு போகணும் ன்னு சொல்லி நாலஞ்சு தடவை toilet யை வேடிக்கை பார்த்ததை
ஒரு நாள் என் மகனும் அந்த பயணம் ஏற்படுத்திய பரவசங்களாய் பகிரக்கூடும்.
தட்காலில் பதிவு செய்த போது இரண்டு படுக்கையும் மேல் அடுக்கிலே கிடைத்திருந்தது
கணினிக்கு புரிய வைக்க முடியாத சூழல்.
அருகாமையில் ஒரு முதிய தம்பதி தன் பேரப்பிள்ளைகளுடன் வந்து உட்கார்ந்தனர்
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் கழிந்து புறப்பட்டிருக்க கூடும்.
மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் என் இல்லாள் கீழ் படுக்கையின் தேவை அவர்களை பொருத்தவரையில்
மிக முக்கியமானது அவர்கள் வயதின் காரணமாக.இருப்பினும் என்னவள் கருவுற்றிருப்பதை அறிவித்த
அடுத்த நொடியில் அவர்கள் மனம் கனிந்தது கண்டிப்பாக மகளே உனக்கு ஒரு கீழ் படுக்கை(lower) தருவோம்
என்றனர்.அவர்களது ஒரு மேல் படுக்கை (upper) அடுத்த இரண்டு,மூன்று அடுக்குகள் தாண்டி (34) இருந்தது அதில் என்னை
படுத்து கொள்ள சொன்னனர்.முதிர்ந்த அந்த மனிதர் மேலும் சொன்னார் அடுத்த இரயில் நிலையத்தில் ஏறும்
ஒற்றை மனிதரை அந்த படுக்கைக்கு செல்ல வேண்டலாம் அப்பம் நாம் ஒரு குடும்பமாய் ஒரே பகுதியில் சிதறாமல்
பயணிக்கலாம் என்றார்.பயணித்த அந்த அரை மணி நேரத்திலேயே சக மனிதனின் உணர்வை புரியும் மனதும்
தாயினும் சாலப்பரிவும் மனதை கரைத்திருந்தது.அவரது எண்ணம் போன்றே நிகழ்ந்தது அடுத்த இரயில் நிலையத்தில்
ஏறியவருக்கு 35,36 மற்றும் 1 ம் படுக்கை கொடுத்திருந்தார்கள் அவருக்கும் 34 வது படுக்கை தேவையாய் இருந்தது.
மேலும் பேச்சை தொடர்ந்தோம்.திடகாத்திரமான அவரது உடலும்
அவரது பேச்சும் அவரது வயதை 50ற்குள் இருக்கும் என்று எண்ண தோன்றியது எனினும் அவரது வயது 66 என்றார்.
உடற்பயிற்சியின் மிதான தீராத அவரது ஆர்வம் அவரது பேச்சில் கொப்பளித்தது.Thumbles,pull worker என்று அவர் தற்போதும்
உபயோகபடுத்தும் கருவிகளின் பெயர்கள் என் ஈரக்குலையை பதற செய்தது.
திருநெல்வேலியில் உள்ள ஹோட்டல் களை பட்டியல் இட்டு ஒவ்வொன்றின் தனித்தன்மைகளை விளக்கினார்
பிரபு ஹோட்டல் - முன்னாடி நல்லா இருந்தது எங்க சாதி தான் அனா இப்பம் சரியில்லன்னார்
சகுந்தலா ஹோட்டல் நல்லா இருக்கும் அனால் நான் மற்றும் என் நண்பர் ஒருவரும் வந்து ஒரு நாள் சாப்பிட்ட அடுத்த நாளிலிருந்து
இவர்களை கண்டால் அந்த ஹோட்டல் மேலாளர் பதருவாராம் இப்படி "இவனுகெளுக்கு உடம்பு முழுக்க வயறு கடைய இழுத்து முடுங்க்கெடே"
அன்ன பூரணா ஹோட்டல் அஞ்சாறு வருசம் முன்னாடி முஸ்லிம் கைல மாறிடுச்சி ஆனாலும் உங்க இந்து கடவுள் படங்களும்
பட்டையோடு கல்லாப்பட்டியில் நிற்கும் கந்த சாமி மாட சாமிகளும் மாறவில்லை என்றார் .
பேச்சு வெவ்வெறு தளங்களை தொட்டது தான் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் எனினும் ரிஷி கேஸ் வரை சென்றிருக்கிறேன் என்றார்
ஆனாலும் ஊர் கோவில் போல் சிற்ப வேலைப்பாடு கொண்ட கோவில்கள் அபூர்வம் என்றார்
ராமனும் கிருஸ்ணனும் இந்த தேசத்தின் வெவ்வெறு பகுதிகளை ஆண்ட மன்னர் என்றும் அவர்கள் தாங்கள் வாழ்ந்த பெரும் வாழ்வால் கடவுளாக ஏற்று கொள்ளப்பட்டவர் என்று கூறினார்.எங்கள் ஏசுவும் ஒரு மனிதரே இடையில் வந்தவர்கள் அவரை
கடவுளாக்கி பின்னர் மதமாக்கி விட்டனர் என்றார்.ஏசுவும் ஒரு கலகக்காரர் தான் யூத குருமார்களின் தவறுகளை சுட்டிக்காட்டி
அவர்களை துரத்தியதால் சிலுவையில் அறைந்ததாய் கூறினார்.
சைவமும் வைணவமும் இணைந்தது போன்ற பறந்த மனது வரும் போது
எல்லா மதமும் இணையும் என்றார். இந்து மத இளைஞர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாதலால் அவர்களால் பைபிளையும் படிக்க முடிகிறது குரானையும் உணர முடிகிறது ஆனால் எங்கள் மதத்திலும், இஸ்லாமிய மார்கத்திலும் அந்த வழிகள்
அடைக்கபட்டிருப்பதாக சுட்டிக்காட்டி வருந்தினார்.மதம் நம்மை எப்படி துண்டாடி கொண்டுருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்
தன் ஊரில் 90 வயதிற்கு மேலான முதியவரை பார்க்கும் போது 100 வயதை தொட வேண்டும் என்று கூறுவாராம் கிறிஸ்து மனது வைத்தால் என்பாராம் அந்த முதியவர். சீனா வில் தான் 20,000 துக்கும் மேலான 100 வயதை தொடும் மனிதர்கள் இருக்கிறார்கள்
அவர்களை என்ன கிறிஸ்துவா காப்பாற்றினார் அவர்களது வாழ்க்கை முறை தான் அவர்களை காப்பாற்றியது என்றார்.
TTR வந்த போது எங்கள் உரையாடல் முடிந்தது.படுக்கைக்கு போன போது அவரது உரையாடல்கள் என் மன இடுக்குகளில்
படிந்திருந்தது.மேல் படுக்கைக்கு போகும் முன்னர் அவரது வலது கால்களில் களிம்பிட்டார் என்ன என்று கேட்டேன்
தகரம் அவரது கால்களை கிழித்திருந்ததை அப்போதுதான் சொன்னார் திடுக்கிட்டேன் மேலே ஏற சிரமமாய் இருக்குமே என்றேன்
ஒரு சிரமும் இல்லை தம்பி நான் பார்த்து கொள்கிறேன் என்றார் காலையில் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது தானாகவே விழித்தெழுந்தார் என் பெட்டி மற்றும் அனைத்து பொருட்களையும் ஒற்றை மனிதராய் எடுத்து தந்து God bless you என்றார்.
முன்னிரவில் அவர் எனக்கு சொன்ன கடவுள் பற்றிய கோட்பாடுகள் புரிந்திருந்தது.மத எல்லைகளற்ற அந்த கடவுள் பற்றிய புதிய
கோணங்களை என்னுள் விதைத்து விட்டு அவர் விடை பெற்றிருந்தார்.”