Friday, October 14, 2016

கடுக்கரை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் கண்ணாரக் கண்டு களித்தேன்.
எம்பெருமான் எமக்களித்த வரமல்லவா
நம்மை வாழ்வித்த இறையல்லவா
அம்மா போல் அரவணைத்த ஆதியும்
அந்தமும் இல்லா பரம்பொருளல்லவா
எந்தன் மனம் துள்ளுது சொற்கள் வந்து விழுகிறது
கருடவாகனமுடைய  எம்பிரானே
ஊர் வாழ உங்கள் பிள்ளைகள் நாங்கள் வாழ்ந்திட
காத்தருளிய கடுகைப் பெருமாளே ..... வணங்குகிறேன்

தோன்றியது மனதில் எழுதுகிறேன் அதனால் ......
கசடறக் கற்ற மொழியின் வளத்தை தந்தருள்வாய் பெருமாளே....


திருவேங்கடப்பெருமாள் நம்மூரில் நமக்காக நம்மைக் காக்கவே
எழுந்தருளினார் ………..இன்றிருக்கும் எவரும் பிறக்கு முன்னே…….
இன்றிருப்போர் யாரும் அறிந்திலர் அவர் கடுகையுறைத் திருநாளை
ஊர்கூடித் தேர் இழுக்க  அவருக்கோர் தேர் இல்லை வீதியிலாக் காரணத்தால்
வானுக்கு எல்லை இல்லை …  வானுயர் கோபுரம் இரண்டினை
தைத்திருவிழா காணும் ஏழுமலையான் கண்டான் இத்”தை” ஏழாம் நாளிலே….
ஊர் கூடி உயர்த்தியதால் எல்லோர் மனமும் பாரினில் உயர்ந்ததே
கிட்டாத பாக்கியம் கிட்டியது போல் கோபுரம்கண்ட எல்லோர் மனமும்                  குளிர்ந்ததே.
மட்டிலா மகிழ்ச்சியால் துள்ளாத மனங்களெல்லாம் துள்ளியதே….

குறைந்த நாட்களில் செயற்கரியதோர் செயல்தனை நிறைவாய் முடித்த
பொறுப்பாளர் அனையோர் பெயர்களும் ஊர் உள்ளவரை எல்லோர்
உள்ளங்களிலும் நிறைந்திருக்கும்……..
எல்லாப் புகழும் நயினார் திருவேங்கடப்பெருமாளுக்கே

------------------------------------**********************************************************----------------------------------------
  இறைவா  எல்லோரும் இன்புற்றிருக்க அருள் புரிவாயே......
-------------------------------------___________________________________________------------------------------------ 

     கல்லூரியில் நண்பர் ஒருவர் நான் எழியப் பிவு ஒன்றினப் பைப் பித்ேன் என்றார் வாய் மொழியால்..... ன்றாக இரந்தாகும்ொன்னார் உடல் மொழியால்..... 

  என் விகள் புக்காக்கப்பேண்டும்  ோன்ிில்....ால்.... எனு பப் பிவுகில் இவ்விும் இடம் பெறட்டுமே........
எனை கருவாக உருவாக்கிய என் தாய் தந்தையில்லை என்ற குறையறியாமல் இன்றும் எனை வாழ்வித்துக் கொண்டிருக்கும் என் உயிர் அவள். அவள் இருக்கும் வரை நானும் அவளுக்கு ஒரு பிள்ளையே....அவள் இருக்கையில் நான் மறைய வேண்டும்... நான் அவள் இல்லாமல் வெறும் பூஜ்யம் என்பதை உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறதே... உன்மை....உளறு மொழியல்ல.....இந்த வயதிலும் இதனைச் சொல்லாவிட்டால் இனிமேல் எந்த வயதிலும் சொல்ல முடியாதோ.....மனிதம் இல்லா மானுடன் என்ற கூற்றுக்கு ஆளாகிவிடுவேனோ.... இறைவா என் இல்லாளை இன்று போல் என்றும் காப்பாற்று என வேண்டுகிறேன்..... இன்று......நானும் அவளை வாழ்த்துகிறேன்.... இன்று அவள் பிறந்த நட்சத்திரம் “ தை கார்த்திகை “
_________________________________________________________________________________



வாழ்க்கை......வேடிக்கை.....ஒருவரின் வாழ்க்கை போல் இன்னொருவனின் வாழ்க்கை அமைவதில்லை.  தேடி உனையடைந்த வசந்தத்தை  வசமாக்கப் பழகிக்கொள்.  மானுடத்தை நெஞ்சினில் வைத்திரு.  பணிப்பெருமையை தலையில்   சுமையாய்  வைக்காதிரு. எந்த இடத்தினால் நிம்மதி கிடைக்குதோ அந்த இடத்தை நேசித்திரு. அடங்கிப் போவது அவமானமெனக் கருதாதிரு.. கண்ணியமாக இருப்பதும்  கட்டுப்பாடுடன் கடமையாற்றுவதும் சாலச் சிறந்தது என்பதை மறவாதிரு.  சமுதாயம் தந்த வாழ்வுக்கு நன்றிக் கடனாக திருப்பி ஏதாவது செய்யக் காத்திரு.. வாழ்வதும் தாழ்வதும் நம் கையில் இல்லை  என்பதனை உணர்ந்திரு . இருக்கின்ற நாளில் இனிமையாகப் பழகு எளியோரிடம்..... அவன் சிரிக்க நீ பேசு... இயன்றதைக் கொடு அவன் பசியாற... இறைவனை எங்கும் தேட வேண்டாம். அவன் சிந்தும் கண்ணீர் மறைந்து  சிரிப்பானே..... அந்தச் சிரிப்பில் இறைவனைக் காணலாம்....


Sunday, January 3, 2016

2015 ...வான் மழை பொழிந்தது......மனிதம் மெய்ப்பட்டது.....மாநிலத் தலைநகரம் சென்னை கண்ட உணர்வுகள்...

நான்  முக நூலில் எழுதியதைப் பதிவு செய்யுமுன்  ஒரு சில எண்ணங்களை....... கூடுதலாக  பதிவு  செய்ய விரும்பினேன் . 
 நட்பும் உறவும் இன்று இக்கட்டான சூழ்நிலையில் உதவாது  என்று  நினைத்திருந்தேன் .  மரத்துப்போன மனமும்,  சுயநல.... மதிமயக்க.... மனமும்  கொழுந்து  விட்டெரியும் தார்மீகமறியா அரக்க மனம் வென்றிடுமோ ...... 
அன்புக்கும்  தாழிட்டு விடுமோ இந்த சமூகம், நம் பாரம்பரிய  கலாச்சாரத்தை அழித்தொழித்து விடுமோ ..... அஞ்சினேன். 
இல்லை ...அழியாது அது.... கவலைப் படாமல் இரு .... அறிவுறுத்தவே பொழிந்து தள்ளியது சென்னை மழை.....
 2015 இறு தியில்  வான் மழைப் பொழிவதிகமானதால்  சென்னை மாநகரம் தன் பொலிவையும் வலிமையயும் இழந்து நின்ற  போது ஜாதி,மதம் பாராத ஓர் புதிய ம(னி)தம் உதயமாகி ,புதுப்புனல் பாய்ந்தோடியதைக் கண்டோம்..... நானும் கண்டேன் ....
வான் செய்த பிழையால் மானுடம் வென்ற நிலை கண்டோம்
 இவ்வாண்டில் இளைஞர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக..... வாழும் காலங்களில் வளர்ந்து வரும் நம் நாட்டினைப் பாதுகாத்திட .... ஒரு பெரும் ஆக்க சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
 சுய எண்ணம் கொண்ட இளைஞர்களை , தீரமும் விவேகத்துடன் கூடிய வீரமும் கொண்ட களப்பணியாற்றிய மனிதர்களைக் கண்டு அதிசயித்துப் போனேன்... விவேகானந்தர் விரும்பிய இளைஞர்கள் இவர்கள் தானே ........   
இனி அஞ்சத்தேவையில்லை ........  மானுடம்
வாழும்  இம்மனிதம் வாழும் நாள் வரை.....   
என் மார்க்கம்... என் வாழ்வுப்பாதை....என் தந்தை ,தாய் காட்டியபாதை.
 அது இந்துமதம் சார்ந்த கலாச்சாரம்... 
என்னை படிக்க ஆற்றுப்படுத்தியவர் ஒரு முஸ்லீம் பெருமகனார்... என்னை ஒருநாள் கூட அவர் மதத்தைப் புகழ்ந்து பேசி என் மார்க்கத்தை மாற்ற முயன்றிடவே இல்லை. இன்றும் அவர் என் தந்தையின் நண்பராக என் நெஞ்சில்புன்னகை புத்துக் கொண்டிருக்கிறார் . எந்த எதிர் பார்ப்பும் இல்லா அன்பு அது.
 மூன்றாண்டு பட்டப் படிப்பும் கிறிஸ்தவமதம் சார்ந்த பாளைச் சவேரியார் கல்லூரியில் தான்..  அங்கிருந்த பலர் அன்பாகவே இருந்தார்கள்..... யாரும் என்னை என் மார்க்கத்தை மாற்ற முயலவில்லை.... அச்சுறுத்தவும் இல்லை....
நான் ஒரு இந்துக்கல்லூரி ஆசிரியன். அங்கே படிப்பவர்கள்பல மார்க்கத்தை பின் பற்றுபவர்கள். வெவ்வேறு மதம்..... வெவ்வேறு இனம்... அனைவரும் எனக்கு , என் மனதுக்கு     மாணவர்கள் என்பது மட்டுமே....
நானும் யாரையும் கெஞ்சிப் பேசியோ,மிரட்டியோ என் மார்க்கத்தைதான் கடை பிடிக்க வேண்டும் என்று  வற்புறுத்திச் சொன்னதும் இல்லை; மனதால் கூட நினைத்ததும்  இல்லை.... 
தன்னம்பிக்கை உள்ளவன் தானே வாழ்வில் வெல்ல முடியும். தன்  மார்க்கத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்தத்  தனி ஒருவனுக்குத் தானே...... மாற்ற முயல்வது பேதமை......
மதம் நல்லது தான் எல்லோருக்குமே......  மனிதனை மதம் பிடித்த யானையாக மாற்றாதவரை. ..        உண்மையில் எல்லாமே ஒன்றுதான்... ஓரு மதம்.... அவரவருக்கு ஒரு மதம்.... போதுமே ஒரு மதம் ... ஒரு தாய் போல. 
இயல்பாக செல்லும் நீரோடையை ..... அதன் அழகை ரசிக்க வேண்டும்.... மகிழ வேண்டும் .....அதன் பாதையை மற்றிப் பார்த்து ,கெடுக்க  முயலவே கூடாது.... முயன்றால் அழகு மறைந்துவிடும்....

அழகாகவே பாய்ந்து செல்லட்டும் நீரோடை.....மனமும் அழகாகட்டும்....


2015 .....20.....டிசம்பர் ...... எண்ணிக் கொண்டிருக்கிறோம்....11 நாட்களே உள்ளன.....2016-க் காண.....எண்ணிப் பார்க்கிறேன் எண்களையல்ல.... நினைத்துப் பார்க்கிறேன் முன் நினைவுப் பதிவுகளை.....   வெகு  சில மனதை நோகடித்திருக்கிறது சில மனமுதிர்ச்சி அடையாதவர்களால்.....

 மிகப் பல என் மனதையும் நெஞ்சையும் மகிழவும் நெகிழவும் செய்திருக்கிறது....   பாழும் மனம் எதனை நினைத்து மகிழவேண்டுமோ அதனை தவிர்த்து...கழைய வேண்டியதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு கலங்குகிறது....

அள்ளி அணைத்த கைகளை ஊனமாக்கி மகிழும் கிள்ளைகள் சிறகினை ஒடித்திட தளர்வறியாத் தந்தை-தாய் மனங்கொண்டஎவனுமே முனைவதில்லை.


தவமாய் தவமிருந்து கருவறை அளித்த என் அன்னையும் பிதாவும் எனக்கு இன்றும் தெய்வமாய் வழிகாட்டுகிறார்கள்.... நான் என் தந்தையை என்றும் நிந்தித்தது இல்லை....இந்நினைவு ஒன்றே போதும் எஞ்சிய நாட்களை நகர்த்திட.... தந்தை தாயைப் பேணுங்கள்.......

1967-ல் என்னுடன் படித்த கல்லூரிதோழன் மகராஜனை 48 வருடங்களுக்குப் பின்னால் சந்தித்தேன். அதே நாளில் என் ஆசிரியர் பெனடிக்ட் அவர்களை வீடு தேடி சென்று காலில் விழுந்து ஆசிபெற்று வந்தேன்.

சென்னையில் சங்கமமான இருமனம் இணைந்த திருமணநாளில் .......வயதில் முதியவன் எனை அன்போடு வரவேற்றார்கள்.... அன்பு மழையில் நனைந்தேன் ....மணமகன் பெற்றோர், அந்தப்பெற்றோரின் பெற்றோர்கள்....மணமகனின் சின்னம்மை, சித்தப்பா....என் தாயின் அன்புக்கு நிகரான எனது பெரிய மதினி,...அந்த வீட்டு லெட்சுமணண்ணன்..... இப்படியொரு வரவேற்பினை எங்கும் கண்டதில்லை..... வந்த அனைவருமே அன்பை நெஞ்சிலே சுமந்து சென்றார்கள்......

என் நண்பர் பத்மானபன் மிகவும் மகிழ்ந்து் , நெகிழ்ந்ததைக் கண்டேன்.... 51 வருடங்களுக்குப் பின், என்னொடு ஒரே பெஞ்சில்
அமர்ந்து இந்துக் கல்லூரியில் படித்த சென்னையில் இருக்கும் பழனியாபிள்ளையைக் கண்டேன்....

மிகவும் மகிழ்ச்சியாக.......... அன்புகளை பகிர்ந்து கொண்டோம்.....
அன்புத்தோட்டம்......பல நல்ல மணம் வீசும் மலர்களின் நறுமணம் இன்றும் என் மனதில் இருக்கிறது... வண்டுகள் ரீங்காரமிட்டு இசைபாடிக் கொண்டிருக்கின்றன.... என்னினிய உறவுகளின் உள்ளங்களும் அதே இசையையே ரசித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் யாருக்கு நன்றி கூற வேண்டும்.....
இறைவனுக்கு நன்றி...
டாக்டர் ஈஸ்வரபிள்ளை, பொன்னம்மாள், அய்யாவு, பிச்சை , மீனாட்சிபாஸ்கரன்..... இவர்களுக்கு என் அன்பும் மதிப்பும் மரியாதையும் கலந்த நன்றி.... இறுதியான டிசம்பர் 2015 அன்பு மாதம்.........ஒரு இன்பச்சூழல் தந்த மாதம்.
இறைவா! நல்லபுத்தியை மட்டுமே என்றும் தந்திடுவாயே...
இனிவரும் வருடங்களிலும் இறையருளால் எல்லோருக்கும் நல்லதே நடக்க அருள் புரிவாயே
வருக ...... வருக புது வருடமே வருக.........புதுப்புனல் பாயட்டும்.. செல்வம் பெருகட்டும்...மகிழ்ச்சி பொங்கட்டும்....

Thankappan Arumugaperumal
Thankappan Arumugaperumal's photo.