Monday, March 17, 2014

கர்நாடகப் பயணம் - இரயில் பயணம் செய்த நாங்கள்----

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி காலையில் கண்மலர்ந்த போதே நாலாம் தேதி மங்களூர் போவது பற்றிய சிந்தனை வந்து ஒட்டி விட்டது. முன் பதிவு செய்த காத்திருப்போர் வரிசைப் பட்டியல் என்னவானது.... அவர்களுக்கு இருக்கை-படுக்கை வசதி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?

அது எப்படியும் கன்பர்ம் ஆயிரும் கவலை வேண்டாம்.... ஆர் எ சி கிடைத்தால் போரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடலாம்..... டிக்கட் நெட்டில் எடுத்து வெயிட்டிங்க் லிஸ்டில் இருந்தால் கான்சலாயிரும்.... ஆனா இந்த டிக்கட் கவுண்டர்லதானே டிக்கட் எடுத்திருக்காங்க... ஆதலால் அதை வைத்து பயணம் செய்யலாம்.... இல்லை ரிஸ்க் எடுக்கக்கூடாது.... தட்கல் டிக்கட் எடுத்திரலாம்.... இப்படி ஆளாளுக்கு தெரிந்தோ தெரியாமலோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பியென்னார் தெரிந்தால் நாம் நெட்டில் பாத்துரலாமே என்ற எண்ணம் என்னை சாமியிடம் அதனைக் கேட்கத் தூண்டியது....கேட்டேன்.... மிகக் குறுகிய நேரத்தில் எவ்வித மறுப்போ சலிப்போ இல்லாமல் அது டிக்கட்டின் நகலாய் என்னிடம் வந்தது....

பார்த்தேன்..கணினியின் வாயிலாக.... பகீர் என்றது பார்த்ததும்.... சாலையில் அசையாமல் நிற்கும் கனரக வாகனம் தரும் அதிர்ச்சி போல் இருந்தது எனக்கு. அந்த டிக்கட்டின் வரிசை எண் அன்றும் காத்திருக்கவே சொல்லிக் கொண்டிருந்தது.... ஈக்யூ மூலம் முயற்சிக்கலாம்....ஒரு நண்பரிடம் சொல்லலாம்... ஆனால் இரண்டு வாரத்துக்கு முன்னால் மூன்று பேருக்கு அவர் முயற்சியில் தான் குஜராத் செல்ல வழி பிறந்தது....இப்போ நான் சொன்னால் இந்த ஆளுக்கு வேறே ந்துவேலையே இல்லையா.... என்று சொன்னால் கூட பரவாயில்ல.... ஒன்றுமே செய்யாம இருந்தா என்ன செய்வது..... சரி இன்னொரு நண்பரிடம் சொல்வோம் என நினைத்தால் அதுவும் நடக்காது.... என் பேரன் குஜராத் செல்ல உதவியது அவரல்லவா ! நான் சொன்னால் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிவிடும்.... என்ன செய்ய.....நாந்தானே அவர்களிடம் கேட்கக்கூடாது....மனம் மிக வேகமாய் செயல் பட்டது.... எனது அத்தானிடம் விசயத்தைச் சொன்னேன்.... அவர் மூலம் தகவல் சொல்லி முயற்சி செய்ததில் பலன் கிடைத்தது.... மூன்றாம் தேதி கணினி இன்னொரு கோச்சில் இரண்டு பெர்த் கிடைத்தது பற்றிய தகவல் தந்தது....

தகவல் சாமிக்குப் போனது.... அவர் என்னிடம் சொன்னார்...“ அவர்கள் உங்கள் பக்கமே இருந்தும் தூங்கியும் வரட்டும்.... அந்த இரண்டு பெர்த்திலும் ஆல்வாயில் இருந்து வரும் சசியும் அவரது மனைவியும் இருந்து கொள்வார்கள்.....”

ஒருவழியாய் இறையருளால் பயணம் செய்பவர்கள் மனது போல் இனிமையாய் இடம் கிடைத்தது...பயணம் தொடங்கும் நாள் மார்ச்சு மாதம் நான்காம் தேதி,செவ்வாய்கிழமை.......

(அடுத்த பிளாக்.....பார்க்கலாமே....)

Sunday, March 16, 2014

கர்நாடகப் பயணம்............

நவம்பர் மாதம் நானும் குவைத் சாமியும் பேசிக்கொண்டிருக்கும்போது கர்நாடகத்தில் உள்ள கோவில்கள் ,அங்குள்ள சிறப்புக்கள் , உடுப்பி கோவிலுக்கு போய் வந்தது பற்றி நான் குறிப்பிட்டேன். அப்போ அவர், “ நீங்கள் தர்மசாலா வுக்குப் போயிருக்கிறீர்களா என்று கேட்டார்.

திருப்பதியில் மகா அன்னதானத்தைப் பற்றிதான் கேட்கிறார் என மனதில் நினைத்துக் கொண்டு நானும், ஆமாம் போயிருக்கேனே.... நான் சாப்பிட்டிருக்கேன்.....திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டு வெளியே வரும் போது டோக்கன் தந்தார்கள்.........என்றெல்லாம் கூறும்போதே அவர் என்னிடம், “ நான் சொன்னது கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலம்...” என்றார்.

போனதில்லை என்று சொன்னேன்.

“மார்ச் மாதம் போலாமா, வாருங்கோ உடுப்பி, மூகாம்பிகை, எல்லாம் போய் வரலாம் என்றார். எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கோ....நாலாம் தேதி போணும் . ஒம்பதாம் தேதி வந்துரலாம்”

போனவருடம் 2013-ல் அவர் மகன் திருமணத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். எல்லா முக்கிய இடங்களுக்கும் போய் வந்தோம். திரும்பவும் போகவா என்ற மனக் குழப்பம் என் மனதில் தோன்றியதால் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்து விட்டேன்.

நாட்கள் சில கடந்தன.... சாமி வந்து, “ வருபவர்களின் பெயரும் அவர்களது வயதையும் எழுதித் தரும்படி” கேட்டார்.

என் உறவினர்கள் வருவார்கள். நான் கேட்டு சொல்கிறேன். ஆனால் நாங்கள் வரவில்லை என்றேன்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கண்டிப்பாய் வந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்.

நாங்கள் எட்டு பேர் வருவதாகச் சொல்லி பெயர் கொடுத்தேன். டிசம்பரில் முன் பதிவு செய்தார். நாட்கள் கடந்தன.... பெப்ருவரி மாதம் பதினேழாம் தேதி என் மனைவி என்னிடம், “ நம்ம கூட வருவதற்கு இரண்டு பேர் ஆசைப் படுகிறாங்க... டிக்கட் அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.... சாமிட்ட கேட்டுப் பாருங்களேன்...”

சாமியின் மகனிடம் இந்த விசயத்தைக் கூறினேன். பிரச்சினை ஒன்றும் இல்லை. மங்களூரில் இருந்து பஸ்ஸில் அல்லது வேனில்தான் போகணும். அதில் இடம் இருக்காண்ணு  கேட்கணும் என்று சொல்ல........ நான் சொன்னேன், “ நாம் பஸ்ல அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கலாம்...”.....

சாமிக்கு ஈ-மெயில் அனுப்பினேன். அனுப்பி பத்து நிமிடம் கூட ஆயிருக்காது...
சாமி அவரது மகனுக்கு போனில் தகவல் கொடுத்து செய்ய வேண்டியதைச் செய்யும்படி சொல்லவே..... எல்லாம் முறைப்படி நடந்தது.... ருபாய் வாங்கவில்லை..... இரயில் டிக்கட் வெயிட்டிங் லிஸ்டில் முன் பதிவு செய்யப்பட்டது...... இப்போ நாங்கள் பத்து பேர்....... சாமியின் குடும்பத்தில் நால்வர், அவர் டிரைவர் சுதாகர், ஹோட்டல் ஊழியர் நாராயணன், குவைத்தில் பணியாற்றிய ஒருவரும் அவர் மனைவி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் குடும்பம்( நால்வர்)...... மொத்தம் இருபத்து இரண்டு பேர்....

மார்ச் மாதம் நான்காம் தேதி காந்திதாம் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் ஆனோம்.

Thursday, March 13, 2014

நாங்கள் இருபது பேர் ஐந்து நாட்கள் கர்நாடகக் கோவிகளுக்குச் சென்று வந்தோம்.....

ஒரு நாள் காலை பத்து மணியளவில் என் வீட்டுத் தொலை பேசி சிணுங்கிக் கொண்டே இருந்தது. பொதுவாக அதனை அதிகம் பயன்படுத்துவது என் வீட்டுத் தலைவிதான்.அதனால் நான் அதன் பக்கமே போவதில்லை.
நேரம் போனது... மணியோசை நின்று விட்டது.... அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது வீட்டில் அந்த சமயத்தில் இருப்பது நான் மட்டுமே என்பது.
அய்யய்யோ ...... நான் பேசாமல் இருந்து விட்டேனே.... வெளியே சென்ற அவள் கூட எதற்காகவோ அழைத்திருப்பாளோ !.......

மறுபடியும் மணியோசை கேட்க நான் ரிசீவரை எடுத்து காதருகே கொண்டு போனேன்......
ஹலோ.....என்று நான் சொல்லவும் என் காதில் கேட்டகுரலை வைத்தே மறுமுனையில் பேசுவது என் நண்பர் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன்.
“என்னடே ! இரண்டு மூன்று தினங்களாக உன்னைத்தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.... என்ன ஆச்சு உனக்கு.... மொபைல் இருக்கா உன்னிடம்..?”

நான் மங்களூர் போயிருந்தேன்......சொல்லி முடிக்கவில்லை.

அதற்குள் ,“ பெங்களூர் மகள் வீட்டுக்கா...”

நான், “ இல்லயில்ல.... மங்களூருக்குப் போய் உடுப்பி, மூகாம்பிகை, தர்மஸ்தலம், நந்திகூர் கோவில்......போய் நேற்று இரவு தான் வந்தோம்.” என்றேன்.

எப்படி போனீங்க .... பஸ்ஸிலா... ரயிலா... எத்தனை பேர்......

“நாங்கள் இருபதுபேர் இரயிலில் போனோம் இரயிலில் வந்தோம். இந்தமாசம் நாலாம் தேதி செவ்வாய் கிழமை மத்தியானம் கோட்டார் ரயில்வே நிலையத்தில் இருந்து இரண்டு மணியளவில் காந்திதாம் (குஜராத்) எக்ஸ்பிரஸ்ல புறப்பட்டுப் போனோம். காலையில் சூரத்கல்லில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு வேனில் முல்கி என்ற இடத்தில் லாட்ஜில் தங்கினோம். மறுநாள் காலையில் உடுப்பி கிருஷ்ணன் கோவில், மூகாம்பிகை கோவில்..... வியாழன் காலையில் குக்கீ சுப்ரமணிய கோவிலுக்கும், தர்மஸ்தலம்,கட்டீல் துர்கா பரமேஷ்வரி அம்மன் கோவில்......வெள்ளிகிழமை காலையில் நந்திகூர் துர்காபரமேஷ்வரிஅம்மன் கோவில்,மூடிபத்ரி,.....சனிக்கிழமை காலையில் நந்திகூர் கோவிலிலில் திருவிழா முதல் நாள் , மாலையில் சங்கரன் நம்பூதரியின் வாய்ப்பாட்டுக் கச்சேரி..... ஞாயிறு காலையில் மூகாம்பிகையில் இருந்து ஹாப்பா எக்ஸ்ப்ரஸ்ஸில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தோம்... (இந்த ரயில் நாகர்கோவில் ட்வுண் (பள்ளிவிழை) ஸ்டேசன் வழியாக திருநெல்வேலி செல்லும்)”

ஒரு ஆளுக்கு எத்தனை ருபா ஆச்சு ?

எங்களுக்கு ஒரு செலவும் இல்லை. எங்களை அழைத்துச் சென்றது வடசேரி உடுப்பி ஹோட்டல் நிறுவனர் திரு வெங்கட்ராமன் போற்றி.

மிகவும் வித்தியாசமான ஒர் அனுபவம்.... மறக்க முடியாத ஆன்மீக ,புன்ணிய யாத்திரை......

எல்லாம் இறையருளே.......