Monday, May 9, 2011

என் முதல் மகனின் மகன்

இனிய என் பேரனே......


இன்று காலை மணி ௪.௨௯ (4 .29 )
இனிமையான நேரம். கைகள் கணினியை
இயக்கின .கூகிளில் கடிதங்களை பார்த்தேன் .
இன்பமாய் இருந்தது கண்களுக்கா ......
இல்லை காதுகளுக்கா.........
இரண்டுக்கும்தான் .இருப்பினும் அதிகமாக ஆனந்தப்பட்டது
இதயமே என் மூன்றாம் பேரனின் முதல்
இ-மெயில் எனக்கே எனக்கல்லவா .எங்கள்
இதயங்களை சோதித்து வந்தவனல்லவா நீ
இருவரல்ல ஒருவரே என்று வாழும் உன் தாய் தந்தைக்கு
இன்மகனாய் வந்த என் பேரன் நீயல்லவா .
இதை நீ படித்து பார்ப்பாய் ஒருநாள் .
இறை அருள் அறுபத்து நான்கு வயது தாத்தா எனக்கு
இருப்பின் நான் அன்றும் மகிழ்வேன்
இன்று போல்.
தாத்தா தங்கப்பன்
ஆச்சி சுப்பம்மாள்
௨௫-௧௨- ௨௦௧௦(25 -12 -2010 )

No comments:

Post a Comment