Wednesday, August 31, 2011

கடுக்கரையும் ட்யூசன் வாத்தியார்களும்

நான் சிறுவனாக இருந்தபோது கீழத்தெரு என் மாமா திரவியம்பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
ஆவ்லோடு விளையாடப்போன நான் ஒரு பள்ளிக்கூடமே நடந்தது கொண்டிருப்பதைப் பார்த்து அதிசயத்து நின்றேன்

அந்த வீட்டின் மங்களாவில் வட்ட மேசை. அதன் முன்னே உள்ள செயரில் ஒருவர் இருந்தார். அவர் சொல்லிக் கொடுக்க அவர் முன்னால் நின்ற இருந்த பலர் படித்துக் கொண்டும் எழுதிகொண்டும் இருந்தனர்.

அவர் தான் சேகரன் வாத்தியார். அவரது அப்பா சங்கர வைத்தியர்.சேகரன் சாருக்கு ஹோமியோவைத்தியமும் தெரியும் .அவர்கள் இருந்தது நாணுபிள்ளை என்பவரது வீட்டில். நாணுபிள்ளையின் மகன் தான் மலையாளி ராகவன் பிள்ளை.

இதுபோல் பலர் கடுக்கரையில் இருந்தார்கள். எனக்கு தெரிந்தவர்கள் சிலர்:....

வடக்குத்தெருவில் தேவர் வாத்தியார் ஒருவர் உண்டு. அவர் பெயர் தெரியவில்லை.

புதுகுணத்தான் என்று இரத்தின புரத்தில் இருந்து ஒருவர் ட்யூசன் எடுத்தார். அவர் பெயின்றில் அழகாக எழுதுவார். ஸ்கெயிலில் பெயரை எழுதித் தருவார். அதற்கு கட்டணம் வசூலித்து விடுவார்.

சுந்தரம் குரு என்று ஒருவர் உண்டு.அவர் மன்ணினால் பொம்மைகள் செய்வார்.நான் அவரிடம் சில நாட்கள் படித்திருக்கிறேன்.

அதன் பிறகு தனபாலன், சுவாமிதாஸ் என்று பலர் ட்யூசன் எடுத்தார்கள்

No comments:

Post a Comment