Monday, February 25, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்.....1


  சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்.....1                (1 முதல் 17 வரை )
1)   சாதனா என்பது அஸ்திவாரம்அஸ்திவாரமின்றி  வீடில்லை
2)   மாற்றம் என்பது முன்னேற்றத்திற்கு  உதவிடும் உபகரணம்.
3)   ஒழுங்குமுறையோடு வாழும் வாழ்க்கையையே, ஒழுக்கமாகும்.
4)   மாஸ்டரை நம்முடையவர் என எடுத்துக் கொண்டு அவரை நம்முடைய இதயத்தோடும், ஆன்மாவோடும் முழுக்க நேசிக்கும் போது தான்  நிலையான நினைவு சாத்தியமாகிறது.
5)   நீ உருவாக்கியது  உன்னிடம் இருந்து அகலும்போது அவர் உருவாக்கியது உன்னை வந்தடையும்..
6)   மாஸ்டரிடம் காட்டும் பக்தி என்பதும், அன்பு என்பதும் ஒரு குழந்தை தன் தாயின் அரவணப்பைத் தவிர வேறு எதனையும் விரும்பாததுக்கு ஒப்பாகும்.
7)   அனைத்தையும் உள்வாங்கி, எதனையும் வெளிப்படுத்தாதவர் தான் காணமுடியாத கடவுள்.
8)   தெய்வீகம் எதுவோ அதனை உணர்வதுதான் பரிணாம வளர்ச்சி.
9)   தமது வாழ்க்கையை எவர் ஒருவர் தியாகம் செய்திடத் தயாராக இருக்கிறாரோ அவரே மாஸ்டரை நேசிப்பதாக சொந்தம் கொண்டாடமுடியும்.
10)  ஒரே ஒரு இலக்கினைக் கொண்டிருப்பவருக்கு அதை அடைவது ஒன்றே பிரச்சினையாக இருக்கும் . ஆனால் பொதுவாக மக்கள் நிறைய இலக்கினைக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன.
11)  சுயநலத்தோடு எழுப்பப்படும் ஒவ்வொரு வேண்டுகோளும், விண்ணப்பமும்,பிரார்த்தனையும் நமக்காக கடவுள்அருள்பாவித்து வேலை செய்வதை தடை செய்கிறது.
12)  ஒவ்வொருவர்  இதயத்திலும் அத்தியாவசியமாக இருக்க வேண்டியது துணிவு மட்டுமே..
13)  அன்புடனும் நல்லநோக்குடனும் செயல்படுபவர் எவரோ அவரே மாஸ்டர் விரும்பிய வண்ணம் ஆகின்றார்.
14)  கடவுளால் உதவி செய்ய முடியாத சூழ்நிலைகளில் கூட குருவினால் உதவிடமுடியும்
15)  சரணாகதியடையும்போது ,நாம் எதில் சரணாகதி அடைகின்றோமோ அதுவாக ஆகின்றோம்.
16)  மாஸ்டரிடத்து வளரும் பற்று ,உலகப்பற்றிலிருந்து நம்மை விடுவிக்கும் தீர்வாக அமைகின்றது.
              
       17)   ன்னை      நீ மாற்றும்  போது இந்த உலகம் மாறுகிறது.பிரபஞ்சம்     
மாறுவதின் இரகசியம் உன்னை மாற்றுவதில் தான் இருக்கிறது.


        மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166

          

No comments:

Post a Comment