Sunday, May 10, 2015

அம்மா........தெய்வம்

மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம்.....

இருக்கின்ற நாளில் இமையாய் இருப்பவள்


இல்லாத நாளில் இறையாய் இருப்பவள்


உருவாகும் போதுத் தங்கிட தன்னையே தருபவள்


உதிரத்தை உணவாய் தருபவள்


ஆல்போல் தழைத்திட அருகாய் அணைப்பவள்


ஊண் உறக்கமின்றி உறங்க வைப்பவள்


எருவாய் இருந்து உருவாக்குபவள்


ஏணியாய் உயர்த்துபவள்


உருவாக்கித் தருவாக்க ஓடாய் உழைப்பவள்


அன்பும் அரவணைப்பும் தருபவள்


ஒருத்தியாய் மட்டுமே இருப்பவள்


அவள் மட்டுமே அம்மா…..


அவள் மட்டுமே அன்னை….


தந்தையாய் இருப்பவள் அவள்….


அவளில்லாமல் எவனுமில்லை..


அணுவைத் கருவாய்த் தாங்கி


ஊனாய் அகிலம் காண தன்னைத் தந்த

தாயிற் சிறந்த இறையும் இல்லை……. 

No comments:

Post a Comment