Friday, August 26, 2011

கடுக்கரையும் இந்துக் கல்லூரியும்

கடுக்கரையில் பிறந்தவர்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்து இன்று காலையில் பெங்களூரில் எனது மருமகன் லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டிருந்த வேளையில் சரியாக 11 மணிக்கு எனக்கு நாகர்கோவிலில் இருந்து சதா போண் பண்ணிப் பேசினார். “இந்துக்கல்லூரிசங்க தேர்தலுக்கு கடுக்கரை ஆறுமுகம் பிள்ளை தலைமைக்கு போட்டி இல்லை”என்ற மகிழ்ச்சியான செய்தியை அவர் சொன்னார். உடனே நான் கடுக்கரைக்கும் இந்துக் கல்லூரிக்கும் உள்ள தொடர்பினை எழுத நினைத்தேன்..... எழுதுகிறேன்...

1952-ம் ஆண்டு இந்துக் கல்லூரி உதயமானது. உதயமான முதல் ஆண்டில் இன்றெர்மிடியேட் வகுப்பில் கடுக்கரையில் இருந்து படித்த மாணவர் பிள்ளையார்கோயில் தெரு கட்டியாபிள்ளையின் மகன் செல்லப்பன்.ஆரம்ப காலங்களில் படித்த மாணவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் கீழத்தெரு ராசப்பன்(ஆறுமுகம் பிள்ளை) ,சொர்ணப்பன்(ஈஸ்வரபிள்ளை),தெக்குத்தெரு வேலாயுதம்பிள்ளை (குமரி),தாமோதரன்பிள்ளை(சுப்பிரமணியபிள்ளை),சுப்புக்குட்டியாபிள்ளையின் மகன் நாகேந்திரபிள்ளை(தம்புரான்).இவர்களில் இந்துக் கல்லூரியின் உயர்ந்த பதவிகளைப் பெற்றவர்ஆறுமுகம்பிள்ளை.கல்லூரி ஆட்சிக்குழுவின் செயலாளாராக திறம்பட பணியாற்றியபின் 2002-ல் இருந்து இன்று வரை கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலவராக இருக்கிறார்.1996-ல் இவர் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.பொன்விழா ஆண்டின் போது தலைமையேற்று நடத்திய இவரது தலைமையில் தான் வைரவிழாவும் நடை பெறப்போகிறது என்பது பெருமையான விசயம்.

கடுக்கரையில் தெற்குத்தெரு பேச்சினாதபிள்ளை வேதியல்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வட்க்குத்தெரு மாதேவன்பிள்ளை,ஆறுமுகம் பிள்ளை(ராஜேந்திரன்),நான் உட்பட இந்துக் கல்லூரியில் படித்தோம்.பின் அதே கல்லூரியில் வெவ்வேறுதுறைகளில் ஆசிரியராகப் பணியாற்றினோம்.நான் கணிதத்துறையில் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வடக்குத்தெரு தாணப்பன்(நீ.தா.கிருஷ்ணன்) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பெரியவீட்டு நாகேந்திரனும் சாஸ்தாங்குட்டியும் கல்லூரியில் உதவியாளர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்கள்..நான் ஓய்வு பெற்றபின் ஆட்சி மன்றக் குழுவில் இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்..

நம் ஊரில் இருந்து பலர் படித்து பட்டம் பெற்று பல ஊர்களிலும்,நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். தெக்குத்தெரு ஈ.பி-ல் வேலை பார்த்த முருகனின் மகள் ஆறுமுகம் அம்மாள் M.Sc;Mathematics -ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே முதல் ரேங்க் பெற்றது கல்லூரிக்கும் கடுக்கரைக்கும் பெருமை சேர்த்தது.பெருமாள் கோவில் திருவிழாவில் கணிதத்துறைத் தலவர் தலைமையில் பாராட்டுக்கூட்டமும் நடந்தது.

இந்துகல்லூரி உதயமாக ஒத்துழைத்த பெரியவர்களுக்கு கடுக்கரை கீழத்தெரு திரவியம்பிள்ளை
( பெருமாள் பிள்ளை),எனது அப்பா ஆறுமுகம்பிள்ளை மற்றும் சிலர் முழு ஒத்துழைப்பு கொடுததார்கள்.நமது ஊரில் உள்ள பெருமாள் கோவில் ,வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்றஸ்டும் சேர்ந்து 1952-ல் 5000/- ருபாய் கொடுத்து ‘ஏ-கிளாஸ்’ Share holder -ஐ பெற்றது,

திரவியம் பிள்ளையும்,ஆறுமுகம் பிள்ளையும் ‘பி-கிளாஸ்’ பங்குத் தொகையாக 1000/-அளித்து பெற்றனர்.மேலும் கே.எம்.மகாதேவன்பிள்ளை,கே.எம்.அணஞ்சபெருமாள் பிள்ளை,கே.பி.அனந்தபத்மனாப பிள்ளை,ம.மாதேவன் பிள்ளை,ம.வேலப்பன்,தி.மாதேவன் பிள்ளை பங்கு தாரர்கள்.எனது அப்பா ஆட்சிகுழுவில் உதவித்தலைவராகவும் பொருளாளராகவும் பணியாற்றினார்கள்.கே.எம்.மகாதேவன்பிள்ளை,ம.மாதேவன் பிள்ளை,ம.வேலப்பன் இயக்குனர்களாக இருந்தனர். இப்பொழுது ம.மாதேவன்பிள்ளையின் மகன் சதா (மகராஜ பிள்ளை) பொருளாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடுக்கரை ஊர் மாணவர்கள் மட்டுமல்ல....நாஞ்சில் நாட்டு மாணவர்களுக்கும் கல்வியைக் கொடுத்த இந்துக் கல்லூரி வைர விழாவினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளிவிழா,கோல்டன் ஜூப்லி சமயத்தில் நானும் பணியில் இருந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடுக்கரையில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து வெளியூரில் படித்துப் பட்டமும் பெற்று இந்துக்கல்லுரியின் தலைமைப் பீடத்தை அலங்கரித்த மறைந்த டாகடர் சொ.பேச்சிநாதபிள்ளையையும்,இன்றும் ஒரு சிறந்த நிர்வாகத்தலைவர் என்ற பெயருடன் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இஞ்சினியர் ஆறுமுகம் பிள்ளையையும் கடுக்கரை என்றும் நினைவில் வைத்திருக்கும் .கடுக்கரை உயர்கல்விக்கு அளித்த பங்கு மிகவும் மகத்தானது.

இன்று கல்லூரியில் கடுக்கரை ஊர் பங்கு தாரர்கள்;-

பெருமாள் கோயில் ,வடக்கு வாச்செல்லி அம்மன் கோயில் ட்றஸ்றிகள்

பெ.மெய்க்கும்பெருமாள் பிள்ளை(காந்தி)
பெ.ஆறுமுகம் பிள்ளை(ராசப்பன்)
ம.மகாரஜபிள்ளை(சதா)
ஆ.பொன்னப்ப பிள்ளை(தங்கப்பன்)
த.மகராஜபிள்ளை(ம.வேலப்பன்-ன் மகன், மோகன்)
மா.திருச்சித்தம்பலம் பிள்ளை.

1 comment:

  1. I'm very proud of my sister Amutha ( Arumugammal). Thanks for posting sir.

    ReplyDelete