Tuesday, February 21, 2012

நான் மனத்திரையில் பார்த்த காட்சி படமாய் .......

நான் கன்னியாகுமரி ஊரின் தெருக்களைத் தேடினேன் . மூன்று நாட்கள் தங்கி பார்த்துப் பரவசம் அடைந்த கடற்கரையைத் தேடினேன் . காந்தி மண்டபம்  மாத்திரமே இருந்த அந்த அழகு எங்கே ?

அனாதை ஆஸ்ரமம் நடந்த சத்திரம் போன்ற கட்டிடத்தில் இன்றைய நிலை ...........?
அகலமான தெருவை இன்று காண முடியுமா...!

விவேகானந்தா நூல் நிலையம் .....எங்கே ?

இதோ இந்தப்படத்தில் காணும் அம்மன் கோவிலை ,இன்று இது போல்  ஒரு படம் எடுக்க முடியுமா ?

யாரைக் குறை  சொல்ல ?

நான் சில நாட்களுக்கு முன்னால் என் மாணவனைத் தேடினேன் . 32 வருடங்களுக்குப் பின் சந்தித்தேன் . அவன் முகம் அன்று போல் இல்லை,,,,,!

அதுபோல் தான் கன்னியாகுமரியும்., அன்று போல் இன்றில்லை... ......

 அந்த மாணவன்  முருகேசனைப் பார்த்ததில்,அகம் மாறாத புது முகம்   தனை கண்டேன். என் மனம் மகிழ்ந்தது.

 ஆனால் கன்னியாகுமரி ஊரைப் பார்க்கும் போதெல்லாம்  அதன் அழகு போய்,  இன்றிருக்கும்   புது  முகம் மகிழ்ச்சியைத்  தரவில்லையே !.

கன்னியாகுமரிக்குப் போகும்போதெல்லாம்  ,.........மனசினை என்னவோ செய்கிறது ......

வெள்ளை சேலையில் அழகாய்த் தெரிந்த என் பாட்டிக்கு பட்டு கட்டினால் நல்லாவா இருக்கும். 

நான் தேடிய குமரித் தெருவினை இன்று முகநூலில் படமாய்க் கண்டேன் .

நன்றி முகம் அறியா நண்பர்  மதுரக்காரன்  கார்த்திகேயன் - அவர்களுக்கு .


நான் மனத்திரையில் பார்த்த காட்சி படமாய் .......
Posted by Picasa

No comments:

Post a Comment