Monday, January 21, 2013

நான் எழுதிய பதில் கடிதம்.......


அன்பு மிகு அண்ணன்,
நலம்.நலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி.
உங்கள் அன்புக் கடிதம்(9-11-12)  கிடைத்தது. எதிர் பாராமல் உங்கள் மதிப்பு மிகு வரிகள் பாராட்டும் வரிகளாகக் கண்ணில் பட்டதும் நான் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. மேலும் நன்றாக எதையாவது எழுத வேண்டும்; நீங்கள் பார்த்துப் படித்துப் புகழும்படியாக எழுதுவது அமைய வேண்டும்; ஒரு பேராசையும் உத்வேகமும் மனதில் எழுகின்றன.

மலர்க் குழுவில் நானும் ஒருவன் – இது நான் பெற்ற வரம்.
என் கட்டுரை மலரில் இடம் பெறுவதற்குக் காரணம் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. பெ.ஆறுமுகம்பிள்ளை.

எல்லாப் புகழும் எம் தலைவருக்கே.

 ‘எங்கள் உரை ‘ படித்தீர்களா ? நன்றாக இருந்ததா ? அதை எழுதியதும் நான் என்பதால் அதற்கு எத்தனை மதிப்பெண் என்று அறிய விரும்பும் மாணவன் போல் கேட்கிறேன்.
ஒவ்வொரு தடவையும் தந்தை போல் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. கரம் கூப்பி வணங்குகிறேன்.
வீட்டில் அனைவரையும் அன்பாய் விசாரித்து எழுதியதையும் கூற வேண்டுகிறேன்.
இப்படிக்கு 
தம்பி தங்கப்பன்.
நாகர்கோவில்
15-12-2012


No comments:

Post a Comment