Thursday, October 24, 2013

அன்பு சோறு போடுமா ?........

சார்....எப்படி இருக்கீங்க ?  நான் என்னெதிரே வந்தவரிடம் கேட்டேன்.

நல்லா இருக்கேன் ..... உங்க பிள்ளைகள் எப்படி இருக்காங்க.... முருகன் எம்மீ முடிச்சுட்டானா.... தினேஷ் எப்பம் வாறான்.... மகள் பெங்களூர்லதானே...... கேட்டுக்கொண்டே இருந்தார்.

நானும் அவரிடம் அவர் பிள்ளைகளைப் பற்றியும் கேட்டேன்.

”பையன் யூஎஸ்ல ஃபேமிலியோட இருக்கான். பொண்ணு பீ இ படிச்சு வேலை பாத்தா..... வேலையை விட்டுட்டு இப்ப  வீட்ல இருக்கா. அலயன்ஸ் பாத்துக்கிட்டு இருக்கேன்.. ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்கு.”அவர் சொன்னார்.

ஏன் சார் வேலையை விட்டா..... ?

பொண்ணு பாக்க வந்தவங்க பொண்ணு வேலை பாத்தா எப்படி பிள்ள குட்டிகள பாக்கமுடியும் என்று சொல்லவே , அவள் வேலையை விட சொன்னேன்.

வேலை இல்லாமல் இருக்கா... இப்ப வர்றவங்க , “ பொண்ணும் வேலை பாத்தாதானே இரண்டு பேர் சம்பாதிக்கும் பணம் தான் குடும்பம் நடத்த வசதியாய் இருக்கும்.

 இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொண்ணா சொல்றத கேட்டு மனதுக்கு,நான் மகளை வேலையை விட்டுட்டு வரச் சொன்னது தப்பாய்ப் போச்சோ என்று மனம் பதை பதைக்கிறது ..... வீட்ல நான் இருக்கும் போதும் அவளப் பாக்கும்போதும் என் நெஞ்சே அடைக்குது.....அவ வயசும் கூடிற்றுப் போகுது. எனக்கும் வயசாச்சுல்லா..... நொந்து பேசினார்.

நான் உங்க மகள் அழகா இருக்கா... நல்ல அன்பான பொண்ணு..... நிச்சயம் நல்ல பையன் கிடைப்பான் என்றேன்.

”அன்பும் அழகும் சோறு போடுமா சார்.... அதெல்லாம் அந்தக் காலம் சார்.” என்று சொல்லவே  எல்லாம் கடவுள் நல்லதே செய்வார் எனச் சொல்லி நகர்ந்தேன்.

இரண்டு பேர் வேலை செய்யும்போது கிடைக்கும் அனுபவம் எல்லோருக்கும் ஒன்று போல் இல்லை. தன்மானம் (EGO) மேலே வராமல் தன்மனம் தனது கட்டுப்பாட்டில் இருக்கணும். அன்பும் வேணும். அறிவு பணிவோடு இருக்கணும்... அறிவை அலுவலகத்தில் Use பண்ணணும்.. அன்பை வீட்டில் காட்டணும்.... நிச்சயம் அன்பு சோறு போடும்.
நான் சாப்பிடும் சாப்பாடு என் அறிவால் என்னருகே வந்ததில்லை. அவள் அன்பால் நான் இருக்கும் இடம் தேடி வருகுது....

No comments:

Post a Comment