Sunday, March 16, 2014

கர்நாடகப் பயணம்............

நவம்பர் மாதம் நானும் குவைத் சாமியும் பேசிக்கொண்டிருக்கும்போது கர்நாடகத்தில் உள்ள கோவில்கள் ,அங்குள்ள சிறப்புக்கள் , உடுப்பி கோவிலுக்கு போய் வந்தது பற்றி நான் குறிப்பிட்டேன். அப்போ அவர், “ நீங்கள் தர்மசாலா வுக்குப் போயிருக்கிறீர்களா என்று கேட்டார்.

திருப்பதியில் மகா அன்னதானத்தைப் பற்றிதான் கேட்கிறார் என மனதில் நினைத்துக் கொண்டு நானும், ஆமாம் போயிருக்கேனே.... நான் சாப்பிட்டிருக்கேன்.....திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டு வெளியே வரும் போது டோக்கன் தந்தார்கள்.........என்றெல்லாம் கூறும்போதே அவர் என்னிடம், “ நான் சொன்னது கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலம்...” என்றார்.

போனதில்லை என்று சொன்னேன்.

“மார்ச் மாதம் போலாமா, வாருங்கோ உடுப்பி, மூகாம்பிகை, எல்லாம் போய் வரலாம் என்றார். எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கோ....நாலாம் தேதி போணும் . ஒம்பதாம் தேதி வந்துரலாம்”

போனவருடம் 2013-ல் அவர் மகன் திருமணத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். எல்லா முக்கிய இடங்களுக்கும் போய் வந்தோம். திரும்பவும் போகவா என்ற மனக் குழப்பம் என் மனதில் தோன்றியதால் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்து விட்டேன்.

நாட்கள் சில கடந்தன.... சாமி வந்து, “ வருபவர்களின் பெயரும் அவர்களது வயதையும் எழுதித் தரும்படி” கேட்டார்.

என் உறவினர்கள் வருவார்கள். நான் கேட்டு சொல்கிறேன். ஆனால் நாங்கள் வரவில்லை என்றேன்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கண்டிப்பாய் வந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்.

நாங்கள் எட்டு பேர் வருவதாகச் சொல்லி பெயர் கொடுத்தேன். டிசம்பரில் முன் பதிவு செய்தார். நாட்கள் கடந்தன.... பெப்ருவரி மாதம் பதினேழாம் தேதி என் மனைவி என்னிடம், “ நம்ம கூட வருவதற்கு இரண்டு பேர் ஆசைப் படுகிறாங்க... டிக்கட் அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.... சாமிட்ட கேட்டுப் பாருங்களேன்...”

சாமியின் மகனிடம் இந்த விசயத்தைக் கூறினேன். பிரச்சினை ஒன்றும் இல்லை. மங்களூரில் இருந்து பஸ்ஸில் அல்லது வேனில்தான் போகணும். அதில் இடம் இருக்காண்ணு  கேட்கணும் என்று சொல்ல........ நான் சொன்னேன், “ நாம் பஸ்ல அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கலாம்...”.....

சாமிக்கு ஈ-மெயில் அனுப்பினேன். அனுப்பி பத்து நிமிடம் கூட ஆயிருக்காது...
சாமி அவரது மகனுக்கு போனில் தகவல் கொடுத்து செய்ய வேண்டியதைச் செய்யும்படி சொல்லவே..... எல்லாம் முறைப்படி நடந்தது.... ருபாய் வாங்கவில்லை..... இரயில் டிக்கட் வெயிட்டிங் லிஸ்டில் முன் பதிவு செய்யப்பட்டது...... இப்போ நாங்கள் பத்து பேர்....... சாமியின் குடும்பத்தில் நால்வர், அவர் டிரைவர் சுதாகர், ஹோட்டல் ஊழியர் நாராயணன், குவைத்தில் பணியாற்றிய ஒருவரும் அவர் மனைவி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் குடும்பம்( நால்வர்)...... மொத்தம் இருபத்து இரண்டு பேர்....

மார்ச் மாதம் நான்காம் தேதி காந்திதாம் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் ஆனோம்.

No comments:

Post a Comment