Monday, March 17, 2014

கர்நாடகப் பயணம் - இரயில் பயணம் செய்த நாங்கள்----

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி காலையில் கண்மலர்ந்த போதே நாலாம் தேதி மங்களூர் போவது பற்றிய சிந்தனை வந்து ஒட்டி விட்டது. முன் பதிவு செய்த காத்திருப்போர் வரிசைப் பட்டியல் என்னவானது.... அவர்களுக்கு இருக்கை-படுக்கை வசதி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?

அது எப்படியும் கன்பர்ம் ஆயிரும் கவலை வேண்டாம்.... ஆர் எ சி கிடைத்தால் போரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடலாம்..... டிக்கட் நெட்டில் எடுத்து வெயிட்டிங்க் லிஸ்டில் இருந்தால் கான்சலாயிரும்.... ஆனா இந்த டிக்கட் கவுண்டர்லதானே டிக்கட் எடுத்திருக்காங்க... ஆதலால் அதை வைத்து பயணம் செய்யலாம்.... இல்லை ரிஸ்க் எடுக்கக்கூடாது.... தட்கல் டிக்கட் எடுத்திரலாம்.... இப்படி ஆளாளுக்கு தெரிந்தோ தெரியாமலோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பியென்னார் தெரிந்தால் நாம் நெட்டில் பாத்துரலாமே என்ற எண்ணம் என்னை சாமியிடம் அதனைக் கேட்கத் தூண்டியது....கேட்டேன்.... மிகக் குறுகிய நேரத்தில் எவ்வித மறுப்போ சலிப்போ இல்லாமல் அது டிக்கட்டின் நகலாய் என்னிடம் வந்தது....

பார்த்தேன்..கணினியின் வாயிலாக.... பகீர் என்றது பார்த்ததும்.... சாலையில் அசையாமல் நிற்கும் கனரக வாகனம் தரும் அதிர்ச்சி போல் இருந்தது எனக்கு. அந்த டிக்கட்டின் வரிசை எண் அன்றும் காத்திருக்கவே சொல்லிக் கொண்டிருந்தது.... ஈக்யூ மூலம் முயற்சிக்கலாம்....ஒரு நண்பரிடம் சொல்லலாம்... ஆனால் இரண்டு வாரத்துக்கு முன்னால் மூன்று பேருக்கு அவர் முயற்சியில் தான் குஜராத் செல்ல வழி பிறந்தது....இப்போ நான் சொன்னால் இந்த ஆளுக்கு வேறே ந்துவேலையே இல்லையா.... என்று சொன்னால் கூட பரவாயில்ல.... ஒன்றுமே செய்யாம இருந்தா என்ன செய்வது..... சரி இன்னொரு நண்பரிடம் சொல்வோம் என நினைத்தால் அதுவும் நடக்காது.... என் பேரன் குஜராத் செல்ல உதவியது அவரல்லவா ! நான் சொன்னால் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிவிடும்.... என்ன செய்ய.....நாந்தானே அவர்களிடம் கேட்கக்கூடாது....மனம் மிக வேகமாய் செயல் பட்டது.... எனது அத்தானிடம் விசயத்தைச் சொன்னேன்.... அவர் மூலம் தகவல் சொல்லி முயற்சி செய்ததில் பலன் கிடைத்தது.... மூன்றாம் தேதி கணினி இன்னொரு கோச்சில் இரண்டு பெர்த் கிடைத்தது பற்றிய தகவல் தந்தது....

தகவல் சாமிக்குப் போனது.... அவர் என்னிடம் சொன்னார்...“ அவர்கள் உங்கள் பக்கமே இருந்தும் தூங்கியும் வரட்டும்.... அந்த இரண்டு பெர்த்திலும் ஆல்வாயில் இருந்து வரும் சசியும் அவரது மனைவியும் இருந்து கொள்வார்கள்.....”

ஒருவழியாய் இறையருளால் பயணம் செய்பவர்கள் மனது போல் இனிமையாய் இடம் கிடைத்தது...பயணம் தொடங்கும் நாள் மார்ச்சு மாதம் நான்காம் தேதி,செவ்வாய்கிழமை.......

(அடுத்த பிளாக்.....பார்க்கலாமே....)

No comments:

Post a Comment