Thursday, March 13, 2014

நாங்கள் இருபது பேர் ஐந்து நாட்கள் கர்நாடகக் கோவிகளுக்குச் சென்று வந்தோம்.....

ஒரு நாள் காலை பத்து மணியளவில் என் வீட்டுத் தொலை பேசி சிணுங்கிக் கொண்டே இருந்தது. பொதுவாக அதனை அதிகம் பயன்படுத்துவது என் வீட்டுத் தலைவிதான்.அதனால் நான் அதன் பக்கமே போவதில்லை.
நேரம் போனது... மணியோசை நின்று விட்டது.... அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது வீட்டில் அந்த சமயத்தில் இருப்பது நான் மட்டுமே என்பது.
அய்யய்யோ ...... நான் பேசாமல் இருந்து விட்டேனே.... வெளியே சென்ற அவள் கூட எதற்காகவோ அழைத்திருப்பாளோ !.......

மறுபடியும் மணியோசை கேட்க நான் ரிசீவரை எடுத்து காதருகே கொண்டு போனேன்......
ஹலோ.....என்று நான் சொல்லவும் என் காதில் கேட்டகுரலை வைத்தே மறுமுனையில் பேசுவது என் நண்பர் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன்.
“என்னடே ! இரண்டு மூன்று தினங்களாக உன்னைத்தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.... என்ன ஆச்சு உனக்கு.... மொபைல் இருக்கா உன்னிடம்..?”

நான் மங்களூர் போயிருந்தேன்......சொல்லி முடிக்கவில்லை.

அதற்குள் ,“ பெங்களூர் மகள் வீட்டுக்கா...”

நான், “ இல்லயில்ல.... மங்களூருக்குப் போய் உடுப்பி, மூகாம்பிகை, தர்மஸ்தலம், நந்திகூர் கோவில்......போய் நேற்று இரவு தான் வந்தோம்.” என்றேன்.

எப்படி போனீங்க .... பஸ்ஸிலா... ரயிலா... எத்தனை பேர்......

“நாங்கள் இருபதுபேர் இரயிலில் போனோம் இரயிலில் வந்தோம். இந்தமாசம் நாலாம் தேதி செவ்வாய் கிழமை மத்தியானம் கோட்டார் ரயில்வே நிலையத்தில் இருந்து இரண்டு மணியளவில் காந்திதாம் (குஜராத்) எக்ஸ்பிரஸ்ல புறப்பட்டுப் போனோம். காலையில் சூரத்கல்லில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு வேனில் முல்கி என்ற இடத்தில் லாட்ஜில் தங்கினோம். மறுநாள் காலையில் உடுப்பி கிருஷ்ணன் கோவில், மூகாம்பிகை கோவில்..... வியாழன் காலையில் குக்கீ சுப்ரமணிய கோவிலுக்கும், தர்மஸ்தலம்,கட்டீல் துர்கா பரமேஷ்வரி அம்மன் கோவில்......வெள்ளிகிழமை காலையில் நந்திகூர் துர்காபரமேஷ்வரிஅம்மன் கோவில்,மூடிபத்ரி,.....சனிக்கிழமை காலையில் நந்திகூர் கோவிலிலில் திருவிழா முதல் நாள் , மாலையில் சங்கரன் நம்பூதரியின் வாய்ப்பாட்டுக் கச்சேரி..... ஞாயிறு காலையில் மூகாம்பிகையில் இருந்து ஹாப்பா எக்ஸ்ப்ரஸ்ஸில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தோம்... (இந்த ரயில் நாகர்கோவில் ட்வுண் (பள்ளிவிழை) ஸ்டேசன் வழியாக திருநெல்வேலி செல்லும்)”

ஒரு ஆளுக்கு எத்தனை ருபா ஆச்சு ?

எங்களுக்கு ஒரு செலவும் இல்லை. எங்களை அழைத்துச் சென்றது வடசேரி உடுப்பி ஹோட்டல் நிறுவனர் திரு வெங்கட்ராமன் போற்றி.

மிகவும் வித்தியாசமான ஒர் அனுபவம்.... மறக்க முடியாத ஆன்மீக ,புன்ணிய யாத்திரை......

எல்லாம் இறையருளே.......



No comments:

Post a Comment