Tuesday, November 1, 2011

மீனா.......கத்திரிக்காயா......

முட்டை ஆம்ப்ளேட்டை சிறியதாக தோசை போல் வட்ட வடிவமாக்கி வார்த்து அதனை சற்றுச் சூடாக்கிய இரண்டு Bread piece-க்கும் இடையில் வைத்து சாப்பிட்டது முதல் தடவை என்பதால் மிகவும் ரசித்து சாப்பிட்டேன். தட்டத்தில் இருந்த அமைப்பின் அழகை பார்த்து என்னவெல்லாம் முட்டையிலும் சேர்ந்திருக்கிறது என்பதனைக் கேட்டு அறிந்து கொள்ள என் மனைவியிடம் சொன்னேன். அவளோ உங்களுக்கு கொழுப்பு இருப்பதால் முட்டை திங்கக் கூடாதுல்லா என்றாள்.

அப்படியா....சரி . Vegetable sandwich ஐ பன்னில் வைத்து சாப்பிடிருக்கேன்.bread -ல் வைத்து இங்க வீட்லதான் சாப்பிட்டிருக்கேன்.என்னென்ன காய்கறிகள் சேர்ந்திருக்கிறது என மருமகளிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் என் மனைவி.

சாப்பாட்டு மேசையில் சாப்பிடுவதற்கு தேவையான சமையல் செய்தவைகள் எல்லாம் இருந்தன.ஒரு தட்டத்தில் மீன்பொரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு துண்டும் சப்பையாய் மீன் வடிவத்தில் இருந்தது. சிறிது நேரம் கழிந்து சாப்பிடலாம்னு நினைச்சுட்டிருந்த எனக்கு நாக்கில் எச்சில் ஊறியது. நானே தட்டத்தினை எடுத்து சோறெல்லாம் போட்டு அந்த மீன் துண்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டேன். மிக ஆசையாய் முதலில் மீனை தின்போம் என எடுத்துப் பாத்தேன். ரெம்பவும் மெதுவாக இருந்தது....முள் எதுவுமே இல்லயே....என்னடா இது....என யோசித்துக் கொண்டே என் மருமகளிடம் கேட்டேன்....மீன் மாதிரி தெரியல்லியே என்றேன்...அது மீன் இல்ல மாமா....கத்தரிக்கா.... NET ல பாத்து தான் செய்தேன்.

அய்யய்யே நல்ல ஏமாந்திட்டேனே....ஆஹா... பேஷ் பேஷ் ...மிகவும் ஆனந்தமாய் இருந்தது. இதுபோல பல சுவையான விசயங்களை எழுதலாம் இன்னும் இரண்டு மாதம் குவைத்தில் இருந்தால்.....

No comments:

Post a Comment