Saturday, April 30, 2011

நாவலில் நான் வாழ்ந்த நகரத்தின் முந்தைய தோற்றம்

நான் படித்த நாவல்
என்னுடைய நண்பர் ஒரு புத்தகம் தந்தார்.1959-ல் எழுதிய அது சமூக நாவலா.....சரித்திர நாவலென்றும் கூறலாம்.ஒரு முச்சந்தி. அங்கே ஒரு புளிய மரம்.இரவு இரண்டு மணிக்கு மரத்தை கொப்ளான் வெட்ட முயற்சிக்கிறான்.தாமோதர ஆசான் சமயோசிதமாக மரம் வெட்டப்படுவதை தடுக்கிறார்.அந்த புளிய மரத்தின் கதையை கூறுகிறார் 80 வயதான ஆசான்........புளிய மரத்தின் எதிர்புறம் புளிக்குளம் ;தெற...்குப் பக்கம் காற்றாடி மரத்தோப்பு; மேற்குப் பக்கம் சாலை வழியில் போனால் கழுவந்தட்டு.........அவைகளெல்லாம் இப்போதும் நாகர்கோவிலில் வெவ்வேறு வடிவுடனும் வேறு பெயர்களுடனும் காட்சி அளிக்கின்றன

”அற்புதமான செய்திகள். சரித்திர ஆசிரியர்கள் புளியமரத்தின் கதையை எல்லாம் எழுதமாட்டார்கள்”..... நாவல் ஆசிரியரே எழுதிய வரிகள்.மரத்தை காப்பாற்றிய ஆசான் எங்கோ போய் திரும்பி வரவில்லை.........தோப்பில் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. தோப்பு பூங்காவாக மாறுகிறது.கழுவந்தட்டு இன்று ராமவர்மபுரம்........புளிக்குளம்தான் பூங்காவின் எதிர்புறம் உள்ள பேரூந்து நிலையம்......புளியமரம்.........?

எழுதியவர்.......?

சுந்தர ராமசாமி.

No comments:

Post a Comment