Saturday, April 30, 2011

Face Book

உன் எண்ணமும் என் எண்ணமும்


உன் வரியை தினமும் நான் வருடுவதும்

நான் பதிவு செய்யும் படத்தை நீ ‘ லைக்’ பண்ணுவதும்

உன் எண்ணம் பற்றி நான் ‘கம்மென்ற்’ அடிப்பதும்

என்னை முகமறியா பலருக்கு நீ ‘நண்பரா’க்குவதும்

உன்னை உன் வரி பார்த்து நான் போற்றுவதும்

என்னுளம் நோகாமல் வரும் நின் கருத்துக்களும்

வரிகளும் வருந்தாமல் பதிவாகும் என்வரிகளும்

நாள்தோறும் நான் வாழ்த்துவதும் நீ மகிழ்வதும்

இனம் புரியா இன்பம்தானே தினமும்.......

மனதுக்கு இதமாக இருப்பதும் உண்மைதானே

எனக்கு இது ஒரு ரசிகமணியின் வட்டத்தொட்டி போலே....

உனக்கு மாலை நேரப் பொழுது போக்கு

எனக்கு அதுதான் ‘டானிக்கு’...........

”உன் முகம் நான் பார்ப்பதும் என் முகம் நீ பார்ப்பதும்”

இன்பமாய் இருக்கையில் உன் முகம் காட்டாதிருந்தால்

என்ன சொல்ல உன்னிடம்...... என் மனம் பித்து பிள்ளை

உன் மனம் ‘------’

முகநூல் எனக்கு ஒரு போதி மரம்......

தெரியாத பல விசயங்களை, செய்திகளை தரும் நூல்...

மறந்து போன பல திறமைகளுக்கு மறு வாழ்வு தரும் நூல்...

பத்திரிகை புறம் தள்ளும் நம்மை அரவணைக்கும் நூல்.....

எத்தனையோ கூறலாம் ...இத்தனை தான் இன்று என்மனதில்......

No comments:

Post a Comment