Saturday, April 30, 2011

என் அப்பாதான் என் முதல் பிள்ளை

தவமாய் தவமிருந்து


முதியவர் முன்னே செல்ல

நானவர் பின்னே நடக்க

“அப்பா...பள்ளம்..பர்த்துப் போப்பா”..

“ எனக்கும் கண்ணு இருக்குல்லா?”

நடை தொடர்கிறது........


“அப்பா..அப்பா தண்ணி கிடக்கு வழுக்கீராம பாத்துப்போணும்”

“ என்னடா நினச்சிருக்க மனசுலே. நான்

என்னடே சின்னப்புள்ளையா....தொண தொணண்ணு....பேசாம வாடே”

“இன்று நீயும் எனக்கு பிள்ளை தானெப்பா”

திரும்பினார் அப்பா ...வாய் பேசவில்லை இப்போ

கண்கள் பேசியது......தழும்பிய நீர் வடிந்து கொண்டே

இருந்தது கன்னங்கள் வழியாக..........தனயன் நான் தாயானேன்

No comments:

Post a Comment