Monday, June 27, 2011

பேரனைக்காட்டி பாடம் புகட்டிய அப்பா

என் பிதா மனம் பித்து என் மனம் கல்லு
_____________________________________________

 
Posted by Picasa


1979-ல் கடுக்கரையில் ஒரு நாள். நல்ல வெயில்..

நானும் எனது உறவினரும் நண்பருமான ரவியும் என் வீட்டின் முன்னே சாலையோரத்தில் ஒரு பாரவண்டியின் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

வீட்டின் உள்ளே என் மூன்றுவயது மகன் விளையாடிக்கொண்டிருந்தான்.

தற்செயலாக வெளியே வந்த என் தந்தை வெயிலில் நின்ற எங்களைப் பார்த்ததும் , “வெயில் சுடல்லியா,உள்ள வந்து நிழல்ல இருந்து பேசப்டாதா” கூறினார்.

நாங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தோம்.என் தந்தைக்கு எங்கள் செயல் பிடிக்கவில்லை.

உள்ளே போன என் தந்தை என் மகனை அழைத்து நாங்கள் காணும்படியாக வெயிலில் நிற்கவைத்தார்கள்... பேச்சு சுவராஷ்யத்தில் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

“ஏய்! ஓம்மகன் வெயில்ல நிக்கான்.உனக்கு சுடல்லியா.. நீ வெயில்ல நிக்கது எனக்கு மேலல்லாம் சுடுகே”

1 comment: