Thursday, June 30, 2011

இதனை படிக்க வேண்டாம் என்று சொல்லமாட்டேன்.

1988 மார்ச்சு மாதம் 28 -ல் திருமணநாளில் எனது மனைவிக்கு எனது Diary-ல் எழுதியது


இந்நாள் நாம் மகிழ்ந்திடும் நாள் இதே நாள்
ஒரு மாமாங்கம் முடிந்த நாள் அந்நாளே
நம்தம் கைப்பிடித்த நாள்..
மும்மணிகள் தந்த உன்வதனம் வாடிவிடுமே
என்முகம் வாடும் போதெல்லாம்
தை மாதம் முதல்நாள் வந்ததொரு நாள்
அக்காலையில் நான் பட்ட அவதி
நின் பாதம் பட்டதாலன்றோ ஓடியது
கையொடிந்த அன்றொருமாலையில்
அருமையாய் அமுதூட்டியது நின் கையன்றோ..
என் தோளில் நீ இருந்தால் சாதாரணமது
உன் தோளில் தானே நான்...கடினமன்றோ
எத்தனையோ துன்பங்கள் என்னால் பட்டது நீயன்றோ
நானடைந்த சோதனையிலும் அருகிருந்து
உத்தம தொழனாய் இருந்ததும் நீயன்றோ...

வேனலில் இளைப்பாறும் சோலை நீ எனக்கு
மனவேதனைப் புண்ணை மாற்றிடும் மாமருந்து நீ எனக்கு
வாடிடுமுன்முகத்தைக் காணின் வாடிடுமே என்முகம்
ஆணிரண்டு பெண்ணொன்று நம் மக்கள்
நம் வாழ்வுபோல் அவர்கள் வாழ்வும் அமைந்திட
வணங்கிடுவோம் எல்லாம்வல்ல இறைவனவனை
இனி அவர்கள் உயர்வே நம்முயர்வு
எந்நாளும் எல்லோரும் இன்முகமாய் இருந்திட
ஆண்டவனை வேண்டிடும் உன்னன்பு பொன்னன்

No comments:

Post a Comment