Sunday, June 19, 2011

என்னையே வியந்த நான்

Posted by Picasa



வியந்த பத்துக்கள்

பயின்ற கல்லூரியும் பணியாற்றிய கல்லூரியும் ஒன்று

பணியில் சேரும் போதும் விடைபெறும்போதும்
கல்லூரியில் முதல்வர்களாய் இருந்தவர்கள்
ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள்

பிறந்த நாள், வேலைக்கு விண்ணப்பித்த நாள்,
விடைபெற்ற மே 31,2005 எல்லாமே செவ்வாய் கிழமை.
ஆசிரியர்மன்றம் பிரிவு உபச்சார விழா நடத்திய
நாளும் செவ்வாயே. அன்று என் நட்சத்திரம் மகம்

ஆசிரியர் மன்ற செயலாளராக எனது விருப்பமின்றியே
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுபோல் ஆசிரியர்
ஆசிரியரல்லாதோர் கூட்டமைப்புக்கு தலைவர் பதவியும்
தேடிவந்தது

வேண்டாம் துறைத்தலைவர் பதவி என்றபோதும் தலைவர்
ஆனது- முதல் செமினார் கணிதத்துறையால் நடத்தப்பட்டது

வெள்ளிவிழா ஆண்டிலும் பொன்விழா ஆண்டிலும் பணிபுரிந்தது.

கணித்துறை ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும் நிதி
உதவியாலும் கல்லூரியில் பயின்ற ஏழை மாணவர்கள்
படிப்புக்கு பண உதவி செய்தது

Relieving order தந்த கல்லூரித்தலைவர் பெயரும்
என் தந்தையாரின் பெயரும் ஒன்று என்பதுடன் என்
ஊரான கடுக்கரையைச்சேர்ந்தவர் என்பது

ஓய்வு பெற்று ஒரு வருடம் கழிந்த பின்னும் சும்மாவே இருந்தவனுக்கு
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைத்தொடர்பு கல்வி STUDY CENTRE, நாகர்கோவில்தெ.தி. இந்துக் கல்லூரி வளாகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது

அதே கல்லூரியில் இன்று ஆட்சிக்குழு உறுப்பினராய் இருப்பது

Posted by Picasa

No comments:

Post a Comment