Tuesday, June 7, 2011

என் எழுத்தினையும் நேசிக்கும் ஒரு அன்பு உள்ளம்

இன்ப அதிர்ச்சி
.by Thankappan Arumugaperumal on Monday, June 6, 2011 at 12:39am.

என்றோ எழுதிய என்வரிகளால் இன்று அடைந்த இன்ப அதிர்ச்சி
 
Posted by Picasa


நான் இன்று௦( 05-06-11)என்னுடைய நான்பெரிதும் மதிக்கும் மதினியை
அவள் மகள் வீட்டில் போய் பார்க்கப்போனேன். மருமகன்(என் அக்காள் மகனும் தான் )
சென்னை சென்றிருந்தான்.என்னுடன் என் மனைவி,மற்றும் உறவினர்கள் வந்தனர்.

நான் சற்றுநேரம் இருந்துவிட்டு புறப்பட தயாரானேன். நடன வகுப்பு நடத்தும் மகள்
என்னிடம் ஒரு ஆல்பத்தை தந்து பார்க்கச் சொன்னாள்.அந்த ஆல்பத்தின் முகப்பில்
“மகளோடு நான்” என்று இருந்தது. பக்கங்களை புரட்டினேன்.மகள் அவள் மகளுடன் உள்ள போட்டோ அனைத்துமே அழகாய்இருந்தது. ஒரு பக்கத்தில்ஒரு அஞ்சல் அட்டை .....
அதில் முத்துப் போன்ற கையெழுத்து பச்சைநிறத்தில். ஆ..ஆ..

என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை. நான் பார்ப்பதெல்லாம் கனவா ? நனவா ?

என் கைப்பட எழுதிய மூன்று கடிதங்கள் அழகான போட்டோ போன்று மிக நேர்த்தியாக
ஒரு பக்கத்தில் இருந்தன.ஒன்று பல்கலைகழக நடனப்போட்டியில் அவள் பரிசு வாங்கியதைப் பாராட்டி எழுதியது. கடுக்கரை ஊட்டு விழாவின்போது நடந்த அவளது குழுவினரின் நடனத்தைப் பார்த்து நான் அடைந்த உணர்வுகளைக் குறிப்பிட்டு பாராட்டி எழுதிய கடிதம்
இரண்டாமாவது. மூன்றாவது "நாஞ்சில் நாட்டிய கலைமணி” பட்டத்தினைப் பெற்ற அந்த
விழாவில் என்னைப் பற்றியும் பேசியதைக்குறிப்பிட்டு பாராட்டிய எழுதிய கடிதம் ..... நான் என்றோ எழுதிய அந்த வரிகள் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டன.....தழும்பிய கன்ணீர் கன்னத்தில் வடியுமுன் யாருமில்லா இன்னொருஅறைக்கு நகர்ந்து விட்டேன்......என்னால் பேசக்கூட முடியவில்லை நான் அடைந்த இன்ப அதிர்ச்சியால்.
எழுதிய அந்த நாள் நெஞ்சினில் வந்ததால் நெருடிய மனதுடன் நெகிழ்ந்து போய் விடைபெற்று வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது....கண்ணீர்
மட்டும் விடைபெறாமல் தழும்பிக்கொண்டே இருந்தது......

 
Posted by Picasa

No comments:

Post a Comment