Saturday, February 11, 2012

1925-..........மறக்கப்பட்ட ஒரு நல்ல மனிதரின் கதை

மருங்கூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அழகான கிராமம். கிராமத்தைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் தென்னை மரத் தோப்புகள். அங்கு உயரமான ஒரு குன்றில் முருகன் கோவில் இருக்கிறது. அந்தக் குன்றின் மீது நின்று பார்த்தால்  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

நாங்கள் ,உறவினர் சிலருடன் கோவிலுக்குப் போய் சாமி தரிசனம் முடித்து விட்டு மருகமள் வினுசுபாஷின் வீட்டுக்குப் போனோம்.

அங்கு சுபாஷின் அப்பாவின் பெயர்ப் பலகையில் தா. தாணப்பன் என இருந்ததைப் பார்த்து தா. தா என்று பேத்திமார்கள் அழைத்தால் தாத்தா என்று அழைத்தது போலவே இருக்குமே என்றேன் .

சுபாஷின் அப்பா அப்பொழுது நாங்கள் இருக்கும் பக்கம் வந்து ," என் அப்பா இறந்த நாளில் நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்தேன் . நான் அதன் பிறகு 
பிறந்ததால் எனக்கும் அப்பாவின் பெயரையே வைத்து விட்டார்கள் .  அரசு ஹாஸ்பிடலில் பிறந்த அன்றே எனக்கு நர்சு "காந்தி "  பிறந்திருக்கான் என 
சொன்னதால் என் பெயர் காந்தி என்றும் உண்டு ."

ஏன், அவள் அந்த பெயரை சொன்னாள் என நான் கேட்க , அவர் " நான் பிறந்த நாள் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி.........மகாத்மா காந்தி பிறந்த நாளல்லவா" என்றார் .

       இந்த  போட்டோவை நான் பார்த்துக் கொண்டே நேரு இருப்பதுபோல் தெரிகிறதே என்றேன் .

நேருவுக்கம் இந்திரா காந்திக்கும் நடுவே நிற்பது தான் காந்தி அவர்களின் தந்தை தாணு மாலையப்பெருமாள் .அவர் 1933க்கு முனனால் காங்கிரஸ் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்திருக்கிறார்
  
1926 -ல் சுசீந்திரம் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் ஹரி ஜனங்கள்செல்ல ஒரு சத்தியாகிரகம் நடந்தது .அதில் முழு மூச்சுடன் கலந்து கொண்டார் .
தனது மனைவி பாக்கியம் அம்மாளுடன் வைக்கம் போராட்டத்தில் பெரியாருடன் கலந்து சமுதாய பணிகளில் மிக தீவிரமாக கலந்து கொண்டார் .
தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து பல தலைவர்களுடன் தோளோடு 
தோள் நின்று உழைத்திருக்கிறார் . ஆன்மீகத்திலும் சமரச சன்மார்க்க சங்க செயலாளராக இருந்திருக்கிறார் .அதன் மாநில தலைவராக மறைமலை

அடிகளார் இருந்தார்.

அவரது மறைவுக்குப் பின்னும் காந்தி அவர்களின் தாயார் திருமதி பாக்கியம் அம்மாள் அந்தப் பகுதி


           மக்களின்                                         நலனுக்காகப்         பாடுபட்டார் . 
         ***

கலைஞர் அவர்கள் நேரில் 
பாக்கியம் அம்மாளை  சந்தித்து ஆசி  பெற்றார்.

      ***** 


                                                    1960-ல்                                    வெளி வந்த          தினத்தந்தி பேப்பர் துண்டினை காந்தி( தாணப்பன் ) அவர்கள் எங்களிடம் காண்பித்தார் .அதில் அவரது அம்மாவின் பெயர் சங்கர வடிவு என இருந்தது.

இத்தகு பெருமை பெற்ற பாக்கியம் அம்மாளின் திரு உருவப் படத்தை ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார்கள் . 

அவரது தாயார் இவ்வுலகை விட்டு மறைந்த நாள் மே மாதம் 27 -ம் தேதி. நேரு மறைந்த நாள் .

சேவை மனப்பான்மை கொண்ட இருவரின் மகன் காந்தி என்ற தாணப்பன் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு உறுப்பினராக இருந்து மக்களுக்குக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் . கழிந்த பல வருடங்களாக இரண்டு வகுப்பில் அதாவது பத்தாம் வகுப்பிலும் பிளஸ் டூ வகுப்பிலும் வெற்றி பெறும் முதல் மாணவனுக்கு தங்க மெடல் செய்து பரிசாக கொடுத்து வருகிறார் .

இன்றுவரை காந்தி கதராடை தான் அணிகிறார் . மிகவும் எளிமையை விரும்புபவர் .



எளிமையான மனிதர்


2 comments: