Tuesday, August 28, 2012

Diary -இன் சில தாள்களில் என்னைத்தொட்ட வரிகள்.

வேலை இல்லாமல் ஒரு நாள் சும்மா இருந்த நான் என் பழைய Diary களை சும்மாதான் அதன் பக்கங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தேன். தமிழில் என் எண்ணத்தில் தோன்றியவைகளை நாற்பது வருடங்களுக்குப் பின் பார்த்ததில் ,படித்ததில்  ஏற்பட்ட உணர்வுகள் என்னை என்னவெல்லாமோ செய்தது. கண்களில் நீர்வடிந்தது என் அம்மாவைப்பற்றிய வரிகளை கண்டதால்.

"அம்மா! சின்ன  வயதில்  நீ  சொல்லி  நான்  கேட்பதில்லை   .  ஆனால் நான் சொல்லி நீ எதையும் கேட்காமல் இருந்ததில்லை.

அம்மா ! நான் அப்பாவிடம் இருந்து ஏச்சு  வாங்கியதில்லை . எனக்காக நீ ஏச்சு வாங்காமல்  இருந்ததில்லை .

அப்பாவுக்கு செல்லப்பிள்ளை நான். அம்மா  உனக்கும்  நான்  செல்லப்பிள்ளை  தான்  . நல்ல பிள்ளையாக இருந்தேனா ."

பல செய்திகள் , பல சம்பவங்கள் ..... என் மனதினை மிகவும் பாதித்தது.

பிறர் மனமும் பாதிக்கும் அதனைப் படிக்க நேர்ந்தால்.கிழித்துப் போட்டேன். அழிந்து போனச்சுவடுகள் மறுபடியும் என் மனதை அழுத்துகின்றன.அனுபவம் இல்லா அந்த வயது இன்றில்லை என்பதால் சுமையும் சுவையாகவே இருக்கிறது இப்போது.

அறிவு என் வாழ்க்கையை வசதியாக்கியது; வசந்தமாக்கியது.
அன்பு என்னை நல்ல கணவனாக்கியது;மனிதனாக்கியது.

எதனையோ எழுத நினைத்து எழுத ஆரம்பித்தேன். வேறு எதனையோ எழுதுகிறேன் . திசை மாறி என் கைகள், மாறிய மனம் சொன்னபடி இயங்குகின்றன. Diary குறிப்புகள் பாதித்ததால் இருக்கலாம்.

சற்று ஓய்வுக்குப்பின் சந்திக்கலாமே

No comments:

Post a Comment