Wednesday, December 12, 2012

வேரை மறவாத அனந்தபுரத்தார் -அய்யாவு


கடுக்கரை, அனந்தபுரம் இரண்டு பேர்களும் ஒரு கிராமத்தின் பெயர்கள். .திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியான நாஞ்சில்  நாட்டின் முக்கிய கிராமங்களில் அனந்தபுரம் கிராமமும் ஒன்று.மன்னர் ஆட்சியிலும் சட்டசபை உண்டு. தகரவீட்டு திரு. மாதேவன்பிள்ளை  சட்டசபையில் ஒரு உறுப்பினர்.

அவரது ஒரே மகன் அய்யாவு . சென்னையில் ஓவியராக தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கைரேகை பார்ப்பதில் , ஜாதகம் ,எண் சாஸ்திரம் -இவைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
மிகவும் அன்பாகப் பேசும் இயல்புடையவர். தாமும் தந்தையைப் பின்பற்றி
மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என எண்ணினார் . அதற்கான ஒரு அறக்கட்டளையை  பதிவு செய்ய விரும்பி 2011-ல் "அனந்தபுரத்தார்  இசை,கலை அறக்கட்டளை " என  பதிவு செய்தார்.

கழிந்த வருடம் சேலத்தில் மாற்றுத்  திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அறக்கட்டளை வழி செய்தார்.

  தான் பிறந்த ஊர் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தவும்  கலையில் ஆர்வம் உள்ளோருக்கு பரிசுகள் கொடுக்கவும் , இந்தவருடம் 16-ஆம் தேதியன்று ஒரு நிகழ்ச்சி அனந்தபுரம் பள்ளிக்கூடத்தில் நடைபெறவிருக்கிறது.

ஒரு ஏழைத்  தவில் வித்வானுக்கு, இலவசமாகத் தவில் ஒன்றும் கொடுக்கிறார் .
அனைவரும் பாராட்ட வேண்டிய  செயல் இது. 

No comments:

Post a Comment