Saturday, December 20, 2014

சிஙக்ப்பூர்--4 ஆலயங்கள்......ஊடகங்கள்......சுற்றுலா பஸ்கள்.....



கோயில்
கோயில்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.கோயில் இல்லாஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நம் தமிழ் பாட்டி ஒளவையின் மொழிக்கு செவி சாய்த்த நாடு  இது. மொழியால் சீனம்,மலாய்,தமிழ் மக்கள் வேறு பட்டிருந்தது போலவே தங்கள் தெய்வங்களயும் வேறுபடுத்தியே தனித்தனி ஆலயங்கள் அமைத்து வழிபட்டுவருகிறார்கள். 
தர்கா
நாங்கள் தங்கிய இடத்தில் இருந்து அரைமணிநேரம் நடந்து போனால் விநாயகர் கோயில்,சர்ச்,தர்கா மற்றும் சீனர்களுக்கான கோயில்கள் அனைத்தையும் காணலாம்.
சிங்கப்பூர் செண்பகவிநாயகர் கோயில் இந்துக்களால் பேணிப்பாதுகாக்கப்படுகிறது.அங்கு தமிழ் வாழ.....சைவமும் தமிழும் தழைத்துக் கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு மிக உதவியாக இருப்பது இந்த ஆலய நிர்வாகம் என்று சொல்லலாம்...... ஆன்மீகம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.


 நவம்பர் மாதமே போன சுற்றுலாத் தலங்கள் அனைத்திலுமே கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஆரம்பப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.


நவம்பரில் நாங்கள் போனநாட்கள் மழை நிறைந்த நாட்களாக அமைந்துவிட்ட காரணத்தால்  முக்கியமான இடங்களைப் போய் பார்க்கவும் மற்ற இடங்களைப் பார்க்கவேண்டாமே என்றும் முடிவெடுத்தநிலையில் மணியின்  வழிகாட்டல் படி பயணத்திட்டத்தை அமைத்துக் கொண்டோம்.
சுற்றுலாவுக்கு ஏற்ற “City Tours" ஒன்று இருக்கு. மூன்று பஸ்களை இயக்குகின்றன.
சர்ச்
 மூன்றுமே Singapore Flyer Tourist centre-ல் காலை 9 மணிக்குப் புறப்படும். பச்சை,ஆரஞ்ச்,சிவப்பு நிற பஸ்கள். மூன்று பஸ்களும் வெவ்வேறு தடங்களில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும். பச்சை பஸ்ஸில் நாம் ஏறினால் பொட்டானிக் கார்டன், சைனா டவுண்,மெர்லியான் பார்க் ....மற்றும் பல பார்க்கவேண்டிய முக்கிய இடம் வழி செல்லும். நாம் தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் இறங்கிச் சுற்றிப்பார்த்துவிட்டு அதே கலர் பஸ் வரும்போது அதில் ஏறிக்கொள்ளலாம்.....யாருடைய உதவியும் இல்லாமலே அனைத்து இடங்களையும் நாலைந்து நாட்களில் பார்த்துவிட இயலும்...... பஸ்களின் மேல்கூரையில் இருந்தும் ரசித்துப் பயணிக்கலாம்...கோயில்கள் சிலவற்றை நாங்கள் ஆரஞ்ச் கலர் பஸ்ஸில் மழை நேரத்தில் பயணம் செய்து பார்த்தோம்.

சிங்கப்பூரில் மதங்கள்
மதம்                                              விழுக்காடு
பௌத்தம்                                       33%
கிறுத்துவம்                                   18%
மதம் சாராதவர்கள்                    17%
இசுலாம்                                          15%
டாவோயிசம்                                11%
இந்து                                                 5.1%
மற்றவர்கள்                                   0.9%   நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து மக்களின் இன, மத பேதமில்லா  ஒற்றுமையும் காரணமாகப் பேசப்படுகிறது.ஆங்கிலம்,
சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சியும், வானொலியும், செய்தித்தாள்களும் உள்ளன.
தமிழர்களுக்குத் தனியாக வானொலி (ஒலி), தொலைக்காட்சி (வசந்தம்) ,பத்திரிகை(தமிழ்முரசு) உள்ளன. ஊடகங்களுக்கு சுதந்திரம் குறைவு...

தலைமை நீதிபதியான சுந்தரேஷ் நாயர் சிங்கப்பூரில் பிறந்தவர் .அவருடைய முன்னோர்கள் இந்தியர்கள்.

1 comment:

  1. நல்ல தகவல்கள். தில்லியில் கூட இப்படி பேருந்துகள் உண்டு. இரண்டு தடங்களில் பயணிக்கின்றன.

    ReplyDelete