Monday, July 4, 2011

இயற்கையன்னை காட்சிதரும் கடுகையிலே.....

இன்றும் முருகன் கோயில் சுவரை அலங்கரிக்கும் வரிகள்

1981-ல் நான் கன்னியாகுமரியில் தேவஸ்வம் விடுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த
இந்துக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் தாணப்பனை தற்செயலாகக் கண்டேன். மிகவும் அன்பாக பேசிக்கொண்டிருந்தான்.அவன் தாவர இயல் மாணவன்.தமிழ் ஆர்வம் உள்ள அவன் கவிதை எழுதும் திறமை படைத்தவன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.

நான் அவனிடம் , “உன்னால் 5 நிமிடத்திற்குள் பாட்டு எழுத முடியுமா?”

‘சொல்லுங்கள் சார்... முயற்சிக்கிறேன்’

நான் எங்கள் ஊர் சிவன்கோவில் பற்றியும் ஊரைப்பற்றியும் குறிப்புகள் சில கொடுத்தேன்.மேலும் நான் அவனிடம் , “ 5 நிமிடத்திற்குள் நீ எழுதி விட்டால் நான் அதை நாங்கள் எங்கள் பக்தர்கள் சங்க வெளியீடுகளில் பிரசுரிப்போம்” என்றேன்

5 நிமிடம் கூட ஆகவில்லை........அவன் எழுதிய பாட்டு இதோ அச்சு வடிவில்:-

 
Posted by Picasa


இந்த வரிகள் கோவில் சுவரை இன்றும் அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
பாட்டை எழுதியவர் தமிழக அரசின் உயர் அதிகாரியாக இன்று சென்னையில் பணிபுரிகிறார்.அவரது தந்தையார் திரு. தினத்தந்தி குமாரசுவாமி, வடிவீஸ்வரம், நாகர்கோவில்.

No comments:

Post a Comment