Wednesday, January 11, 2012

பசுவின் பால் குடிக்கலாமா...?

சின்ன வயதில் இருந்து வயதான இந்நாள் வரை பசும்பால் குடித்தே பழக்கப்பட்டதால் பால் மனிதனுக்குத் தேவையான ஒரு உணவு என மனதில் பதிந்து விட்டது.

நாத்திகர்கள் ,“அழும் பிள்ளைக்கு பாலில்லை.கல்லுக்கு பாலை பாய்ச்சுவது மாபாதகச் செயல்” என்று சொல்வர்.பால் மனிதனின் சத்தான உணவல்லவா அதனால்தானே அவ்வாறு சொல்கிறார்கள் என நினைத்ததுண்டு.

வெண்மைப் புரட்சியில் வெற்றி பெற்ற நாடு நம் நாடல்லவா!....

காலை எழுந்ததும் பால் வரத்தாமதமானால் ஏற்படும் எரிச்சல், குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க கால் கடுக்க நடந்து போய் வாங்குவது எல்லாமே பழகிப் போன விசயங்கள்.

இப்படிப்பட்ட மன நிலையில் உள்ள நான் ஆங்கிலப் பத்திரிகையில் பால் ஒரு மோசமான உணவு, மனிதன் சாப்பிடவே கூடாத உணவு எனப் படித்தேன்.

படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன்

இத்தனை காலமும் குடித்த எனக்கு மோசமான் விளைவுகள் என்று எதுவுமே இல்லையே......அது ஏன் மோசமான உணவு ?.....சாப்பிடவே கூடாதா?

பாலில் உள்ள மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு வித ஹார்மோனை இரத்தத்தில் இருந்து அழகாகவும் மிக விரைவாகவும் நீககி விடுகிறது கல்லீரல்.அதனால் நாம் காப்பாற்றப் படுகிறோம்.

பசுங்கன்றுகள் வேகமாக வளர்வதற்காக பசு தரும் உணவுதான் பால்.

பால் இரத்தக் குழாயான பெருந்தமனி தடிப்பு அதாவது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.

ஆடையில்லாத பால்,குறைந்த கொழுப்பு பால் கூட ஆரோக்கியமற்ற உணவுதான்.கொழுப்பற்ற பாலும்,பாலில் உள்ள கார்போஹைட்ரேட்டும் இதய நோய்க்கு அதிக காரணமாய் இருக்கிறது.

பாலில் உள்ள புரதச்சத்து (Protein) ஆரோக்கியமானதல்ல.

நாம் உண்ணும் பாலில் உள்ள அளவு animal estrogen harmones தான் இருதய நோய்க்கும் மாரடைப்புக்கும் அதிக காரணமாய் இருக்கிறது.

பாலில் உள்ள lactose (sugar) இருதயத்துக்கான இரத்தக்குழாயில் அதிக கேல்சியத்தை படிய வைக்கிறது.
மனநோய், நீரழிவு நோய்க்கு பால் அருந்துவதும் காரணமாய் இருக்கிறது.

Milk may promote prostate and testicular cancer.

World Health Organisatition சமீபத்தில் வெளியிட்ட தகவல் , ‘இரத்தக் குழாய் சம்மந்தப்பட்ட இறப்புக்கும் மனிதன் சாப்பிடும் உணவுக்கும் தொடர்பான நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் பாலின் புரதச்சத்துதான் அதற்கு அதிக காரணமாய் இருந்திருக்கிறது’.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒன்றே சிறந்த சத்தான உணவு

 "Doubts Over World's Most Popular Health Drink",The New Sunday Express Magszine dated 8-1-2012. Dr. Ramkumar, accupuncturist, Sir Ganga Ram Hospital, New Delhi. -ல் படித்தது .

No comments:

Post a Comment