Friday, January 13, 2012

வேகம் விவேகம் அல்ல

திருவண்ணாமலைக்கு நாங்கள் நாகர்கோவிலில் இருந்து வாடகை காரில் காலை 9 மணியளவில் புறப்பட்டு பயணம் செய்து கொண்டிருந்தோம். ட்ரைவர் 80 அல்லது 90 கிலோமீட்டர் வேகத்தில் மிக கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தார்.

எங்களுடன் வந்தவர்களில் ஒருவருக்கு இதை விட வேகமாகப் போனால் தானே அண்ணாமலை சாமியை கோவிலினுள் சென்று கும்பிட முடியும். 9 மணிக்கு கோவில் நடையை அடைத்து விடுவார்களே என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

சிவனைக் கும்பிடணுமா ?  சிவனடியை அடையணுமா ?  இந்த வேகத்தில் போனால் போதும்  நாம் நிச்சயமாய் சிவனை தரிசிக்கலாம் என்று சொல்லி ஆணுக்கு அழகு அதிக வேகமல்ல  என்பதுபோல் நிதானமாகவே வண்டியை  ஒட்டி சென்றார்.

 இப்போ நடப்பது பாதுகாப்பு வாரம். ஒவ்வொரு ஊரிலும் வேகம் விவேகம் அல்ல என்ற அறிவிப்புகளும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடந்து கொண்டிருந்தன

"Accidents bring tears...... Safety brings cheers......" is the theme of  Road safety Week Seminar organised by the City Police  Commisionarate and Transport Offices of Madurai.

வழியில் பல கார்கள் அடிபட்டும் இடிபட்டும் பள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்தோம். அந்த விபத்துகளால் எத்தனை பேரின் வாழ்க்கை கேள்விக் குறியானதோ....... இதனை பார்த்தும் பாக்காமல் போகும் நம் மனம்...... என்ன செய்வது?.....

இப்பமெல்லாம் விபத்து நடந்த இடத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தால் ,விபத்து சம்மந்தப்பட்ட வழக்குக்கு, உதவி செய்தவர்களை போலீசாரால் அழைக்க முடியாது என்று ஒரு சட்டம் இருக்கு என விகடனில் (21-11 -2011) படித்தது ஞாபகத்துக்கு வந்தது .

மொபைல் போன்-ல் In Case  of  Emergency  என நமது நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் எண்ணை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம் .

சென்னையில் உள்ளவர்கள்களுக்கு விபத்து ஏற்பட்டால்  உதவி செய்ய  'அலெர்ட்' என்ற அமைப்பு இருக்கிறது .அதனிடம் தொடர்பு கொள்ள :9944066002.

1 comment:

  1. In cities very youngster buy latest costly bike. They ride very fast. It is very dangerous to their life. over speed is not prudence.

    ReplyDelete