
என் மகன் வாங்கித்தந்த கேமராவில் எடுத்தபடம். தமிழ்நாடு சுற்றுலா விடுதி வளாகத்தில் இருந்து எடுத்தபடம்.அதனைத் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி தலைவர் ,முதல்வர்
களுக்கு அனுப்பினேன். நாட்கள் நகர்ந்தன.... நானும் என் மனைவியும் பெங்களூரில் எங்கள் மகள் வீட்டுக்குப் போய் ஒரிரு மதங்கள் இருந்துவிட்டு வந்தோம்....வந்ததும் கடிதங்கள், பத்திரிகைகள்,வாரமலர்கள்,தினமணி கதிர்,.... எடுத்து படிக்க ஆரம்பித்தேன்...கல்லூரி ஆண்டு மலரை எடுத்தேன்..... ஆண்டுமலர் அட்டைப்படத்தை பார்த்தேன்.... இன்பத்தேன் வந்து பாய்ந்தது என் கண்ணிலே. அட்டையை அலங்கரித்த பின் புது மெருகுடன் தோன்றும்
முக்கடல் சங்கமத்தில் மூவரின் நினைவு சின்னங்கள்....

No comments:
Post a Comment