Thursday, December 8, 2011

திப்புசுல்தான் பஸ்ஸும் தங்கச்செயினும்

நான் நேற்று என் மனைவியுடன் வடசேரி BUS STAND க்குப் போனேன்.என் பேரன் மகள் மருமகன் பெங்களூருக்கு போகும் போது அவர்களை வழி அனுப்ப போனோம்.

பல பஸ்கள் நிற்கையில் திப்பு சுல்தான் பஸ்ஸையும் பார்த்த பொழுது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

என்னுடைய மருமகன் மோகன் அரசுத்துறையில் வேலை பார்க்கும்போது நாகர்கோவிலில் இருந்து transfer  ஆகி சென்னையில் உள்ள அலுவலகத்தில்  வேலை பார்த்து வந்தார்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை மாலையில் சென்னயில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு திங்கள் கிழமை காலையில் வேலை பார்க்க அலுவலகம் சென்று விடுவார்.

அவர் ஒரே பஸ் அதுவும் திப்பு சுல்தான் பஸ்ஸில் தான் வாரம்தொறும் பயணம் செய்வார். வெள்ளிகிழமை,ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்  இவர் வந்து பஸ்ஸில் ஏறியபின் தான் பஸ் கிளம்பிச் செல்லும். அவ்வாறு சென்றுவந்ததால் பஸ் ட்ரைவருக்கும் கண்டக்டருக்கும் இவர் நண்பராகி விட்டார்.

அதன் பிறகு நாகர்கோவிலுக்கு மாறுதல் கிடைத்தது. சென்னை செல்வதென்றால் திப்பு சுல்தான் பஸ்ஸில் தான் செல்வார்.

தனது சின்னப்பாவின் வீட்டு விழாவுக்கு ஒரு நாள் மாலையில் அதே பஸ்ஸில்  சென்னைக்கு கிழம்பிச் சென்றார். உழுந்தூர்ப்பேட்டையில் வண்டி நின்றது. ஹோட்டலில் சிற்றுண்டி அருந்தி விட்டு ரோட்டோரம் ஒண் பாத்ரூம் போய் விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்.  தூக்கம் .....நல்ல தூக்கம். சென்னை வந்ததும் மோகன் சின்னப்பா வீட்டுக்குப் போய் குளிக்க எண்ணெய் எடுத்து தலையில் தேய்க்க கண்ணாடியின் முன் நின்ற போது அதிற்சி அடைந்தார். கழுத்தில் எப்போதும் கிடக்கும் தங்கச் செயின் காணவில்லை. யாரிடம் எதுவும் சொல்லவில்லை.

விழாவில் கலந்து விட்டு அன்று மாலையே திப்பு சுல்தான் பஸ்ஸில் நாகர்கோவிலுக்குப் பயணமானார். அப்போது செயின் காணாமல் போன விசயத்தை மோகன் ட்ரைவரிடம் கூறினார்.

பஸ்ஸில் பயணம் செய்த போது செயின் கழுத்தில் கிடந்தது....சென்னை வந்த பிறகு தான் இல்லை..... ட்ரைவர் , உழுந்தூர்பேட்டையில் தான் நாம் ரெண்டு பேரும் சாப்பிட்டு ஒண் பாத் ரூம் போன விசயத்தைக் கூறி நாம் அதே இடத்தில் போய் தேடலாம் என்றார்.

உழுந்தூர்ப்பேட்டை வந்தது. இருள் நேரமாகையால் ஒரு டார்ச்சு லைட்டை கையில் கொண்டு போய் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தேடிப் பார்த்தார்கள்
லைட் வெளிச்சத்தில் மணல்களுக்கு இடையே மின்னிக் கொண்டு செயின் கிடந்ததைக் கண்டார்கள்.

செயின் கிடைத்த மகிழ்ச்சியில்  அந்த விசயத்தை மோகன் எங்களிடம் கூறினார். திப்பு சுல்தான் பஸ் ட்ரைவரால் தான் தங்கச் செயின் கிடைத்தது.  சினிமா போல் இருந்தாலும் உண்மையான இந்த நிகழ்ச்சி மிகவும் ஆச்சரியத்தை தந்தது என்னவோ உண்மையே. 

No comments:

Post a Comment