Saturday, December 31, 2011

சீமந்த தங்கம் ,வெள்ளி வளைகாப்பு விலை 60 ருபாய் கிராமத்துக்கடைகளில்

ஐந்து நாட்களுக்கு முன் என் மனைவி என்னிடம் 31-12-11 சனிகிழமையன்று தெரிசனம்கோப்புக்கு சீமந்த வளைகாப்பு வீட்டுக்குப் போகணும்.அதனால் ஒரு செட் சூல் காப்பு வாங்கி வாருங்கள் என்று கூறினாள்.

சூல் காப்பு ஒரு செட் என்றால் ஒரு தங்க காப்பும் வெள்ளிக் காப்பும் இருக்கும்.

நான் மீனாக்ஷிபுரத்தில் எனக்குத் தெரிந்த தங்க ஆசாரி நண்பர் வீட்டுக்குப் போய் சூல்காப்பு கேட்டேன். அவர் உடனே எழுந்து என்னுடன் வருவதற்கு தயாரானார்.

ஏன், உங்களிடம் கிடையாதா வெளியில் கடையில் தான் போய் வாங்கணுமா ?

சூல் காப்பு நாஙகள் செய்வதென்றால் ஒண்ணேகால் கிராம் தங்கம் வேணும்.ஒரு கிராம் தங்கம் விலை 2724 ருபாய். ஒரு கிராம் வெள்ளி விலை 54 ருபாய். 3500 ருபாய் ஆகும். நாங்க செய்து வச்சா யாரு வாங்குவாஙக.

கடையில் கிடைக்கும் காப்பின் உண்மையான விலை 50 அல்லது 60 ருபாதான். 60 ருபாய்ணு சொன்னா உங்கள மாதிரிப்பட்ட ஆளுங்க வாங்க மாட்டீங்க. 100 அல்லது அதற்கு மேல சொன்னாதான் வாங்கீட்டுப் போவீங்க. ஒரு மில்லி தங்கம் கூட அதில் இருக்காது.கண்ணாடி வளையலப் போட்டால் போதுமே.

என் மனம் வாங்காதே என்று சொல்லவே காப்பு வாங்காமலேயே வீட்டுக்குப் போய்விட்டேன்.

நான் அவளிடம் , “ உன் வளைகாப்புக்கு வந்த காப்புகளை என்ன செய்தாய் ?” கேட்டேன்.

அவள், “ எனக்கு வந்த தங்க சூல்காப்புகளையெல்லாம் ஆசாரியிடம் கொடுத்து இரண்டு கல் காப்புகள் செய்தேன். வெள்ளிகாப்புகளைக் கொடுத்து ஒரு வெள்ளிச் சங்கு செய்தேன்.”என்றாள்.

நான் அவளிடம் சொன்னேன். “ இப்பம்லாம் வாங்குகிறகாப்பில் தங்கம்லா இருக்காது. அதனால் நாம் ருபாய் 200 அல்லது 300 ருபாய் கொடுத்துரலாம். அதுதான் பிரயோஜனமாக இருக்கும்”.

அவளும் நான் சொலவதை புரிந்து கொண்டாள்.

31-12-2011 இன்று நாங்கள் சீமந்த வீட்டுக்குப் போனோம். நாங்கள் நினைத்தது போலவே ருபாய் கொடுத்துவிட்டு வந்தோம்.

ஏமாறுகிறவர்கள் இருப்பதுவரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதிலும் படித்தவர்களும் ஏமாறத் தயாராய் இருப்பதுதான் மனசுக்கு வேதனையாக இருக்கிறது.

வரும் காலங்களில் மாற்றம் வருமா.....?

No comments:

Post a Comment