Friday, November 30, 2012

காசியில்கடைத்தெருக்கள்

31-10-2012..... இந்த நாள் மிகவும் இனிமையான நாள். காலை நாலு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கோயிலுக்குப் போனோம். அதிக கூட்டம் இல்லை. நெருக்கடி இல்லாமல் தரிசனம் முடிந்தது..... காசிக்கு வந்ததில் ஒரு பூரண    திருப்தி இருப்பதை உணர்ந்தோம்.

காசி என் பார்வையில் ஒரு குட்டி பாரதம். அனைத்து மொழி பேசுபவர்கள்... மாநில மக்கள்.... வந்து போகிற ஒரு இடம். ஆன்மீகத்துக்கு உகந்த இடம்.... அறிஞர்களும் சாதுக்களும் போற்றும் இடம் காசி. வறுமை வாட்டாத இடம்.

கடைகள் மிக அதிகம். அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் ..... எல்லா மக்களும் சுகமாகவே வாழ்கிறார்கள். தெருக்கள் குறுகலானது. இந்த அளவு கூட்டத்துக்கு தெருக்கள் போதுமானதாக இல்லை.
 மனம் விசாலமானவர்களின் கடைகளுக்குச் சென்றோம். ஒன்று ஸ்ரீராம் ஜவுளிக்கடை. மற்றொன்று ஸ்படிகம், ருத்திராட்சம்..... விற்பனை செய்யும் கடை.

சாரி எடுத்தவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். மொழி தெரியாத இடம். ஏமாற்றுவதாக தெரியவில்லை. ஆனால் பேரம் பேசாமல் எதனையும் வாங்குதல் கூடாது. கட்டுப்படியானால் அவர் தருவார்.அதனை  வாங்க நம் மனது ஒத்துக் கொள்ளுமானால் வாங்கணும். ஆனாலும் நான் ராஜேந்திரனுடன் சென்று தான் சாரி எடுத்தேன். ராஜேந்திரனும் அந்தக் கடை முதலாளியும் நன்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்.
சாரி வாங்கி வரும்போது பரிசுப் பொருள்கள் தந்தார் கடைக்காரர். அதோடு கூடுதாலாக சாமிப்படம் ஒன்றும் தந்தார். வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். வந்து போய்க் கொண்டிருக்கிற மக்கள்களில் ஒருவர் தானே நாம்.  இருப்பினும் நிரந்தர வாடிக்கையாளர் போலவே எங்களை நடத்தினார்.
அன்புக்கு பஞ்சமில்லாத ஊர்.

சர்மா என்பவர் அடுத்துள்ள ஸ்படிகமாலைக் கடைக்காரர். அவர்  M.A. படித்தவர்.அவர் கடையில் சில போட்டோக்கள் கண்டோம். தமிழக அரசியல்,சினிமாவைச் சேர்ந்தவர்கள் அந்தக் கடைச்சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.நாங்கள் ஸ்படிக லிங்கம் ஊரில் உள்ள உறவினர் ஒருவருக்கு கொடுக்க வாங்க நினைத்து அவரிடம் கேட்டோம். பல அளவுகளில் வித்தியாசமான விலயில் எங்கள் முன் வைத்தார். அவருடைய ஆலோசனையும் கேட்டு வாங்கினோம். ஒரு பவள மாலை வாங்கினேன். நல்ல மாலைதானா! Original

மாலைதானா என்று கேட்டேன். உடனே அவர் இரண்டு பாசிகளை ஒன்றோடு ஒன்றினை வைத்து உரசினார். தீப்பொறி வந்தது. அது ஒரிஜினல் தான் என்ற நம்பிக்கையோடு வாங்கினோம்.எங்களுடன் வந்த ஒருவர் இரண்டு வயது பையனுக்கு போடுவதற்காக ருத்திராட்ச மாலை கேட்டார். அவர் தர மறுத்து விட்டார். அந்த வயதில் அதனை அணியக்கூடாது என்றும் சொன்னார்.

எல்லாம் வாங்கியாச்சு இனிமேல் ஒன்றும் வாங்க வேண்டியதில்லையே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் , தீர்த்தச் செம்பு வாங்கவில்லையே என்பது மனதில் வந்தது.  சத்திரத்திலும்  அது கிடைக்குமே...   அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம்.

சத்திரத்தில் அதையும் வாங்கினோம். ரூமில் போய் இருந்தோம்.
குமரேசன்  Banaras Hindu University பற்றி  கேட்டான்.


BHU is a public Central  University. It is a residential University.1916-இல் ஆரம்பிக்கப்பட்ட து .நிறுவியவர் பண்டிட் மதன் மோகன் மாளவியா. 1300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.20000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும். உலகத்திலேயே இது தான் பெரியது என்று  சொல்கிறார்கள்.

 குமரேசன், “  Residential University என்றால் அது என்ன ?”
 என்று கேட்டான்.

நான் அவனிடம் , “ உனக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் பற்றித் தெரியுமா ?”

ஏண்ணே அது எனக்குத் தெரியாதா.! என் மகள் பி.காம் படிச்சு வாங்கிய டிக்ரி அந்த பல்கலைக் கழகம் தந்தது தானே.!அவள் படிச்சது நாரூல் இந்துக் கல்லூரில.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பற்றித் தெரியுமா ? நான் கேட்டேன்

’அது சிதம்பரம் காலேஜ் தானே.... நம்ம கோலண்ணன் அங்கதானே படிச்சது...” குமரேசன் சொன்னான்.

நான் “ பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகமும்  அண்ணாமலை பல்கலைக்கழகமும் Residential University ஆகும்.”  எனச் சொன்னேன்...

எல்லா வகுப்புகளும் ஒரே வளாகத்தில் இருப்பதுவும் வேறு எந்த இடங்களிலும் அதன் கீழ் கல்லூரி என்று எதுவும் இல்லாமல் இருப்பதும் தான் ரெசிடென்சியல் பல்கலைக்கழகம் .

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற வைகள் தான்.

பேசிகொண்டிருக்கும்போதே, ஹாலில் சாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது.  நானும் கீழே போனேன். பல கேள்விகள் சாமி கேட்க பதில் சொன்னவர்களின் பெயரைக் குறித்து வைத்து அதிக மதிப்பு பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்தார்.

இரவு 10.30 மணிக்கு வார்ணாசி ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனோம்.
1 மணிக்கு ரயில் ஏறினோம். ரயிலும் கிளம்பிச் சென்றது. வியாழன் விடிந்தது ரயிலடியில்...... காலையில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment