Sunday, October 14, 2012

ரயிலில் நாடி ஜோதிட அனுபவம் சொன்ன இளைஞன்.

அவன் சொல்ல ஆரம்பித்தான்.” எனக்கு சின்ன வயதில் இருந்தே தியானம்,யோகா,யோகாசனம் இவற்றில் நம்பிக்கையும் ஈடுபாடும் கூடுதல். பள்ளியில் படித்து முடித்ததும் வழக்கம்போல் எல்லாப் பெற்றோர்களும் என்ன செய்வார்களோ அதையே எனக்கும் செய்தார்கள்.அதிக மார்க்கும் எடுத்துக் கூட என்னை மெடிக்கல் சீட் டொனேஷன் கொடுத்து தான் சேர்த்தார்கள். ஒராண்டு படித்தேன். என் நாட்டம் படிப்பில் இல்லை.அதனால் படிப்பைத் தொடரவில்லை.

ஒரு நாடிஜோதிடரை ஹைதராபாத்தில் போய்ப் பார்த்தேன். ஒருவரைப் பற்றி அவர் பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஏடு தான் நாடிஜோதிடம்.
அவர் என் கைப்பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து விட்டு என்னிடம் கேள்விகள் கேட்டார்.  இரண்டு மாதம் கழிந்த பின் வரச்சொன்னார்.போனேன். என்னைபற்றிய என் முன் ஜன்ம வரலாறு, இன்றைய வரலாறு, நாளைய வரலாறு எல்லாமே நோட்டில் எழுதித் தந்தார்.”
நோட்டை நான் வாங்கிப் படித்துப் பார்த்தேன். எல்லாமே பாடல்களாகவே இருந்தன.
அந்த நோட்டில் 20000/-க்கான வங்கி ரெசீது ஒன்று இருந்தது. இவ்வளவு ருபாயா என்று கேட்டேன். இல்லைஇல்லை....இது பரிகாரம் செய்வதற்குண்டான செலவு.
பசுதானம்,ஆயிரத்தெட்டு லிங்கபூஜை,108 லிங்க பூஜை,பஞ்சலிங்க பூஜை என .......
சித்தர் ஒருவாரால் சபிக்கப் பட்டதால் சதுரகிரிவந்து பரிகாரம் செய்தாராம். வந்து போனதில் ஒரு லட்சம் ருபாய்க்கு மேல் செலவாயிருக்கும்.
நான் கேட்டேன் .” பெற்றோருக்கு இதில் நம்பிக்கை உண்டுமா ?”
அவன் சொன்னான்.”நம்பிக்கை உண்டு. என் பெற்றோர்கள் எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம். என்னுடன் வந்திருப்பவர் ஒரு பண்டிட். அவருக்கு ஜோதிடம்.ரேக்கி இதெல்லாம் தெரியும். அவர் என்னுடைய தந்தையின் பால்ய நண்பர். இன்னொருவன் எனது காரோட்டி...”
தியானம் செய்வது பற்றி கேட்டேன். இரண்டு மணி நேரம் தியானத்தில் தினமும் இருப்பாராம். நிறைய புத்தகங்கள் படிப்பாராம்.
குரு உண்டுமா ?
இல்லை. பலரை நாடிப்போனதில் அவர்கள் பணத்தில் தான் குறியாய் இருக்கிறார்கள்.
நீங்கள் பாவங்களுக்கு இரக்கப்படுவதாக நாடி ஜோதிடத்தில் இருக்கிறதே. கோவில் கட்டி முடிப்பீர்கள் என்று இருக்குதே.
சிரித்தான்..... நான் சொன்னேன்.’நீங்கள் பிறக்கும் போதே தங்கக் கரண்டியோடு பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சுயமாக சம்பாதித்து இதெல்லாம் செய்தால் தானே பெருமை”
அவன் வயது 27. வசதியான பையன். கர்வம் இல்லை. மருத்துவ தேவையான அறிவு. பணிவானப் பேச்சு. அமுல் பால் டின்னுக்கு விலை கூடுதலாகக் கேட்ட பையனை சிரித்துக் கொண்டே எச்சரிக்க அவன் உண்மையான விலையைச் சொன்னபின்பும் அவனிடம் முதலில் கேட்டதையேக் கொடுத்த மனசு.
அவனுடன் வந்திருந்தவர் அவனைப் பற்றிப் புகழ்ந்து தான் பேசினார். ஆனால் அவனது அப்பாவுக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றார்.
ஒரு சுவர் இடிந்து அவன் மேல் விழுந்து ஆறு மணிக்கூர் ஆனபின்பும் அவனுக்கு ஒன்றும் ஆகாமல் இருந்ததைச் சொன்னார்.
ஏமாறக் காத்திருக்கும் போது ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமே.
கோதானம் செய்தவனும் பெற்றவனும்  ஒரே குடும்பத்து ஆட்களாக இருக்குமோ என சந்தேகப்பட்டேன். அவனிடம் கேட்கவில்லை. அவன் சொன்னான் பசுவைப் பெற்றுக் கொண்டவள் ஒரு விதவை. நான் நினைத்ததை ........அவன் சொன்னது தற்செய்லாக நடந்ததா?
ஒன்றுமே புரியவில்லை.
நாடி ஜோதிடம் பயில திருச்சியில் ஆசிரியர்கள் இருக்கிறார்களாம்.....

No comments:

Post a Comment