Friday, October 12, 2012

எனது அத்தானின் நண்பர் சுந்தரேசனை சந்தித்தபோது....

நான் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த வேளை. கண்ணாடி ஜன்னல் வழியே, வெளியே தெரிவதை என் விழிகளால் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்.

வயதான பெண் ஒருத்தி உருளும் இரு சக்கர நாற்காலியில் அம்ர்ந்திருக்க  சுமைதூக்கி பின்னால் இருந்து உருட்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். எப்படி இவளால் ரயில்பெட்டியினுள் ஏறமுடியும்....?  வாசல் அருகே வந்தாச்சு....இன்னும் இறங்க வில்லை..... காத்திருக்கிறாள்.... ஒரு இளைஞன் அவள் பக்கம் வந்தான்..... அவளது மகனாகத் தான் இருப்பான்....அவன் தாயை அவன் ஒருவனால் பிடித்துத் தூகக முடியாதே.... என்ன செய்யப் போகிறார்களோ..... அவள் இறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்....அவன் மகன் சும்மாவே நின்று கொண்டிருந்தான்.  என்னடா இது....அம்மைக்கு உதவி செய்யாமல் சும்மாவே நிற்கிறானே....

அவள் யாருடைய உதவியும் இல்லாமல் இறங்கினாள்.....மகன் பின்பக்கம் நிற்க பெட்டியினுள் ஏறினாள்.  அவள் தான் முதலில் வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள். மகன் ஒரு பெட்டியை உள்ளே கொண்டு வைத்து விட்டு இறங்கினான். பின்னர் சற்று வயதான திடகாத்திரமான ஒருவர் வந்தார். பழகிய முகம் போல் இருக்கு. ஆனால் யாருண்ணுதான் தெரியவில்லை.... அவரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

ரயில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து  நகர ஆரம்பித்து பின்னர் வேகமாக ஓடியது. கோவில்பட்டியில் வைத்து அவரை சந்தித்து அவரிடம் பேசினதில் அவர் என்னுடைய அத்தானுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர் எனத் தெரிந்து கொண்டேன்.
என் பைபேசியை கையில் எடுத்து என் அத்தானின் பெயரைத் தொடர்பு வரிசையில் பார்த்து தொடர்பு கொண்டு பேசி அவர் பெயரைச் சொல்லாமல் அவரிடம் கொடுத்து அத்தானிடம் பேசச் சொன்னேன். பேசியதும் அவர் பெயரை அத்தான் சொல்ல அவருக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி... அதை அவர் முகம் காண்பித்தது.
இந்துக் கல்லூரிசங்க பங்குதாரர் ஒருவர் பெயரை ச்சொல்லி தமது மகளின் கணவர் என்றும் சொன்னார். தெரியுமெனச் சொன்னேன்.
அவர், “ அவருடைய மருமகனின் அப்பா கல்லூரியின் தொடக்க காலத்தில் இயக்குனராக இருந்தவர் என்றும் திருவாடுதுறை ஆதீனம் கல்லூரிக்கு மிகவும் நிதியுதவி கேட்டு மருமகனின் தந்தையும் அவரது தந்தையாரும் போய் வந்ததைச் சொன்னார்.” அவரது தந்தை  பேஷ்காரராய் ஆதீனத்தில் முன்னாளில் பணியாற்றியவராம்.

ஒரு புதுச் செய்தி கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

No comments:

Post a Comment