Sunday, October 14, 2012

குரு ஒருவர் தேவை என அறிவுறுத்திய பாபு

இந்தத் தடவை என்னுடைய இரயில் பயணம்- பகலில் வந்த இரயில் பயணம் மிகவும்  வித்தியாசமாக இருந்தது. நான் சந்தித்த இரயில் நண்பர்கள் என் மனதில் இன்றும் மகிழ்வைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலில் சந்தித்தது விவசாயத்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி திரு.சுந்தரேசன். அவர் அப்பா மகாராஜ நகரில் கோவில் கட்டினவர். ஆனால் அவர் சின்னச் சின்ன கோவில்களுக்குப் போய் பூஜாரியின் முதுகைப் பார்ப்பதை விட வீட்டில் பூஜாரூமில் சாமி கும்பிடுவதைதான் விரும்புவாராம்
கல்லூரிக்கு நிதிஉதவி செய்த திருவாடுதுறை ஆதீனம் பற்றி அவர் சொன்னது புதுச் செய்தி. அது நாங்கள் எழுதும் வரலாற்று நூலில் சேர்க்கப்பட வேண்டுமா?
அடுத்தது வடநாட்டு நல்ல இளைஞனின் ஜோதிட மோகம்
நாடி ஜோதிடத்தினால் ஏற்படும் நன்மை ஒன்று உண்டு. அந்த ஜோதிடன் பணக்காரனாவது. தீங்கு அகப்படும் பாமரன் ஒருவன் தன் பணத்தை இழப்பதுவே. அநியாயமாய் ஒருவனின் ஆசை காரணமாக இன்னொருவன் பெருவசதிஅடைவதும் எத்தனை நாள் இந்த நாட்டில் நடக்குமோ.

மதுரையில் ஏறிய ஒருவர். வயது 47. மிகக் குறுகிய நேரத்தில் மலையாளமும் தமிழும் கலந்த பேச்சால் நண்பர்களாகி விட்டோம். என் இருக்கை எண் 44. அதன் படுக்கை மேலடுக்கில்.நான் TTE-இடம் 43-க்கேட்டு அதில் அமர்ந்து கொண்டேன். சேலம் செல்லும் அந்த இருக்கைக்கு வரவேண்டியவர் வரவில்லை.
மதுரையில் ஏறியவர் க்கு 43 ஆம் எண் இருக்கையை கொடுத்திருக்கிறார்.
அவர் அதற்கு உரிமை கொண்டாடுவதில் தவறேதும் இல்லை. ஆகவே அவரை இருக்கச் சொல்லி நான் எழுந்தேன்.அவர் பெயர் பாபு. பாபு என்னிடம்,’ நீங்க இருந்து கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன். கேரளத்துக் காரர் ஒருவர் இவ்வாறு சொல்வது அதிசயம் தான்.

பாபு மிகவும் அனபாகவே பழகினார். அவர் என்னைப் பற்றி கேட்க நான் சொல்ல என் மீது கொண்ட மதிப்பு அவரிடம் கூடுவதைக் கண்டேன். அவர் தான் பாலக்காட்டுக்காரர் . மதுரையில் வேலை நிமித்தம் மதுரையில் தாமசிப்பதாகவும் சொன்னார்.தாய் பாலக்காட்டில்.
அவரது தாயின் படம், தாரத்தின் படம்,ஒரே மகளின் படம் இருந்த கைபேசியை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார்.

அவர் ஒரு செயில்ஸ் மானேஜர். கார் சம்பந்தமான வேலை.

எங்கள் எதிரே இருந்தவரின் நாடி ஜோதிட அனுபவத்தைக் கேட்டதில் அவரும் உண்டு. அவர் பூனாவில் உள்ள ஆச்சிரமத்தின் விலாசத்தைக் கொடுத்துப் பார்க்க முடியுமானால் பாருங்கள் என்று அந்தப் பையனிடம் சொன்னார்.

என்னிடம் பேசும்போது  அவர் இந்தியாவில் உள்ள அவரது கம்பெனி ஆட்களில் தான் தான் முதல் ஆள். குறிக்கொள் அதிகம் எட்டியவர். தான் அவ்வாறு பெருமை அடையக் காரணம் ஒரு குரு தான் எனச் சொன்னார்.
குரு இப்பொழுது உயிரோட் இல்லை.அவர் பெயர் சத்தியானந்த சரஸ்வதி.செங்கோட்டுக்கோணத்தில் ஆசிரமம் இருக்கிறது.
திருமணம் ஆனவுடன் முதன்முதலாகப் போன இடம் அந்த ஆஸ்ரமம்.அவர் உயிரோடு இருந்த காலம்.
அவர்களை அவர் ஆசீர்வதித்து விட்டுச் சொன்னாராம். “உன் மனைவி பிரசவ சமயத்தில் முதுகு வலியால் வேதனைப் படுவாள். அப்போது நீ இங்கு வா.நான் மருந்து தருகிறேன்.” வலி வந்தது. அவர் தந்த மருந்தால் குணமும் கிடத்தது. சுகமாகவும் பிரவசம் நடந்தது.

ஆஸ்ரமத்தில் யாரிடமும் யாசிப்பதில்லை. விளக்குக்கு எண்ணெய்  ஒரு நாள் இல்லாமல் இருந்த சமயம். கிணற்று நீரை மந்திரித்து விளக்கில் விட்டு தீபம் ஏற்றச் சொன்னாராம்.விளக்கு எரிந்தது.

மணி பத்தைக் கடந்தது.
அவர் முகத்தில் அசதி தெரிந்து நான் தூங்கும் படி சொன்னேன்.
.
நான் எத்தனையோ தடவை நான் எழுந்து இடம் கொடுத்துத் அவரைத் தூங்கச் சொன்னேன்.

தூங்கவே இல்லை.அந்தப் பெட்டியில் உள்ள அனைவருமே
தூங்கிக் கொண்டிருந்தனர். இவர் ஒருவர் தான் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தார்.
நான் இறங்கும் இடம் வந்தது. எனது பொருட்களை எடுத்துத் தந்து உதவினார்.
முதல் தடவையாக இரயில் நண்பரிடம் எனது போன் நம்பரைக் கொடுத்தேன்.

இனிமையான நாளாக இருந்தது இந்த நாள்.





 

No comments:

Post a Comment