Saturday, October 13, 2012

ரயிலில்நான்சந்தித்தஇளைஞன்.

நாடி ஜோதிடம் பற்றிய செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொருவரும்  தங்கள் அனுபவங்களை மிகைப் படுத்திச் சொல்லும் போது கேட்கும் யாருக்கும் அங்கு போகவேண்டும் நாடிஜோதிடம் பார்க்க வேண்டும் எனத் தோன்றும். எனக்கு நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் சாதாரண ஜோதிடன் ஒருவர் தந்தையை இளந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன் சொன்னது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது..  எனது மாமனாரும் உறவு முறையில் மாமா இருவரும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தைக் காண்பித்து வருங்காலம் பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டார்கள்.
ஜாதகத்தைப் பார்த்த உடன் அவர் சொன்னது. “ இந்தப் பெண்ணின் தந்தை இப்போது இருக்க மாட்டார்.”.... இது போல் பல விசயங்கள் நம்புவதா? கூடாதா? என முடிவு எடுக்க முடியவில்லை. என்னைப் பற்றி ஜோதிடர் சொன்னது சரியாக இல்லாதது ஒரு காரணம்.

வைத்தீஸ்வரன் கோவில் -இந்த ஊரில் பல நாடி ஜோதிடர்கள் உண்டு. ஊரில் இறங்கிய உடன்  நம்மை நாடிவந்து  அழைத்துப் போக தரகர்கள் வந்து மொய்ப்பார்கள். நாகர்கோயிலிலும் , சுசீந்திரத்திலும் நாடி ஜோதிடர்கள் பலர் உள்ளனர். கோயில் இருக்குமிடமெல்லாம் இவர்களும் இருப்பார்களோ......

பெங்களூருக்கு வரும் போது நான் இருக்கும் ரயில் பெட்டியில் மதுரையில் மூவர் ஏறினர்.மூன்று பேருமே பூனாவைச் சேர்ந்தவர்கள். என்னை என் இருக்கையை தரும்படி வேண்டினார்கள்.. நான் சொன்னேன்...”தருவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. இரவு 9.30 க்கு நான் கேயார்புரத்தில் இறங்கி விடுவேனே’ என்று சொன்னேன்.  அதனால் அவரவர் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

சினிமா நடிகனுக்கு வேண்டிய அழகுத் தோற்றம் கொண்ட அந்த இளைஞன் தன் தொடு திரை கை பேசியை வைத்துக் கொண்டு அவனது பொழுதைக் களித்துக் கொண்டிருந்தான். நான் அவனை நானாகவே Software Engineer-ஆக இருப்பான் என ஊகித்துக் கொண்டிருந்தேன். அவனுடன் வந்தவர்களில் ஒருவர் என்னைவிட வயதானவர். இன்னொருவன் இளைஞன்.

இந்தியில் பேச நான் தமிழில் பேச இருவருக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது.
அவன் ஆங்கிலத்தில் பேச பேச்சு சுவராஸ்யமாக மாறியது.
அவன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  ,திருவண்ணாமலை,கோடைக்கானல்,ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் உள்ள சதுரகிரியில் உள்ள சித்தர்  சத்தமுனி (சப்தமுனி)இருக்கும் இடம் என்னும் இடங்களுக்குப் போய்விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னான்(ர்)

இத்தனை இடங்களையும் பார்த்த 12 நாட்களும் அவர்கள் சென்றது வாடகைக்காரில்... அதற்கானச் செலவு ருபாய் 25000/-

இவ்வளவு இடங்களைப் பார்த்தவர்கள் ஏன் கன்னியாகுமரிக்கு போய் வரவில்லை என்று கேட்டேன். பதில் சொல்லாமல் சிரித்தான்.

நான் திரும்பவும் கேட்க அவன் சொன்னான்.” பரிகார பூஜை செய்வதற்காகத் தான் நான் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன்.” என்றான்

சற்று ஆச்சரியத்துடன் பூனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து பரிகார பூஜை செய்ய வந்தார்களா என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அவன் பெயர் சொன்னான்.அவனது பெற்றோர் இருவரும் புகழ் பெற்ற மருத்துவர்கள்.மூத்தவனாக இருக்கும் இவனது தம்பி,தங்கை,தங்கையின் கணவர் அனைவருமே டாக்டர்கள்.
இவனும் மெடிக்கல் காலேஜில் படித்துப் பாதியில் விட்டவன். இப்பொழுது ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தில்......

நான் கேட்டேன். ஏன் படிப்பைப் பாதியில் விட்டாய் எனக் கேட்க அவன் சொல்ல ஆரம்பித்தான்.

அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment