Thursday, October 11, 2012

நான் பார்த்த வெள்ளைநிற கப்.

பெங்களூருக்கு பஸ்ஸில் தான் கொஞ்ச நாட்களாக போய் வந்து கொண்டிருந்தேன்.
எனக்கு பஸ்ஸில் போவதில் சில சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். இந்தத் தடவை நான் தனியாகப் போவதால் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டேன்.
 ரயில் பயணம் சற்று சிரமம் கூடுதல். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பெங்களூர் செல்லும் ரயில் பயண தூரமும் நேரமும் அதிகம். வாரத்திற்கு ஒரு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் ரயில் புறப்படும் நேரமும் வந்து சேரும் நேரமும் மனதுக்கு ஒத்துவராத நேரம்.

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் கிருஷ்ணராஜபுரம் வழியாகவே செல்லும். அதனை அடுத்து பக்கத்தில் உள்ள பெங்களூர் வழியாகப் போவதில்லை. நான் போக வேண்டிய இடம் கஸ்தூரிநகர். கிருஷ்ணராஜபுரம் என்ற கேயார்புரம் பக்கம் உள்ள்து.

அதனால் நான் 10-10-12 அன்று காலை 6.30 மணிக்குப் புறப்படும் ரயிலில் பயணமானேன்.
நான் இருந்த ரயில் பெட்டி என்னை சுதந்திரம் கிடைக்காத காலத்துக்கு என் நினைவலைகளை அனுப்பியது. அந்தப் பெட்டி கலக்டர் ஆஷ் பயணம் செய்த ரயிலில் உள்ளதாக இருக்குமோ. பழமையும் புதுமையும் கலந்த கலவையாக இருந்தது கண்டேன். அபாயச் சங்கிலியை இழுத்தால் 250 ருபாய் அபராதம் அல்லது  மூன்று மாதம் சிறைத்தண்டனை என்று இருந்த காலத்தில் உருவானது.  இப்பொழுது 1000 ருபாய் அல்லது 12 மாதம். வள்ளியூர் செல்வதுவரை second AC A1-44 UB berth -உடன் நான் வெறுப்பாகவே இருந்தேன்.
 தலையணை, கம்ப்ளி தந்தான்.அழகாய் இருந்தது. வெள்ளைநிற போர்வையும் மனதுக்குப் பிடித்தாய் இருந்தது.

காப்பி வாங்கிக் குடித்தேன்.அந்தக் கப் மிக அழகாய் இருந்தது. வெளியில் 15 ருபாய் கொடுத்துக்  காப்பி குடிப்பவன் இந்த அஞ்சு ருபாய்க் காப்பியைக் குறைசொன்னால் அது மிக அநியாயம்.

 என்னை நசுக்கிக் கொண்டுபோய்க் குப்பைத்தொட்டியில் போடு என்ற எழுத்து அந்தக் கப்பை மீண்டும் பார்க்கத் தூண்டியது.ECO-FRIENDLY CUPS,    SERVICE WITH SMILE. இந்த வாசகம் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் மாத்திரமே தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு அறிவுரை தேவையில்லை.

கப்பின் மேல் விளும்பு வட்டத்தில் ஒன்பது நீல நட்சத்திரங்கள் இருந்தன.150 ml 1170 ml  வரை தான் அதன் கொள்ளளவு. வட்டத்திற்குள் இந்திய ரயிலின் படம் 9+1 நட்சத்திரத்துடனும் பாரத சின்னத்துடனும் ..... அந்த கப் பற்றிய ஆராய்ச்சி என்னை மெதுவாக என் வெறுப்புணர்வை மாற்றியது. திரு நெல்வேலி வரை  நான் மட்டுமே விகடன்,தினத்தந்தி  துணையுடன்  பயணம் செய்தேன்.

DTR வந்தார்..... அவர் பெயர்........ வேண்டாம் அவர் அனுமதி இல்லாமல் எழுதுவது நாகரீகமற்ற செயல். அவரிடம் பேசினேன். இந்த  COACH  ரொம்ப மோசமாக இருக்கே என்று நான் சொன்னேன். பத்து வருடம் முடிந்து காலாவதியானாலும் கூடுதல் பத்து வருடங்கள் ஒவ்வொரு பாகத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவது தான் நம் நாட்டு வழக்கம்.

SERVICE TAX என்னிடம் வாங்கவில்லை. காரணம் ஒன்றாம் தேதிக்கும் முன்னமே நான் ரிசர்வ் செய்ததால். ஆனாலும் எனக்குத் தெரியணுமே. அவர் சொன்னார், “எங்களுக்கு அதற்கான அறிவுரைகள் தரப்படவில்லை” ஆனாலும் நூற்றுக்கு மூன்று ருபாய் வைத்து நான் வசூலிக்கிறேன்..

நான் கேட்டேன் அவரிடம். ‘நீங்கள் கணித மாணவரா ?”.
அவர் ஆமாம் என்றார் சற்று ஆச்சரியத்துடன்.

நான் ஒரு கணித ஆசிரியன் என்றேன். பேச்சு முடியவில்லை.அதற்குள் அவரதுப் பணிச்சுமை பேச்சினை தொடர விடவில்லை.

நான் எப்படி இப்படிப் பேசப் பழகிவிட்டேன். எல்லாம் கணினியின் செயல்.


No comments:

Post a Comment