Wednesday, November 28, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை...6....

அக்டோபர் 30 செவ்வாய்கிழமைக் காலையில் எழுந்ததும் இன்றுள்ள Programme  என்ன என்று அறிய சிவதாணுபிள்ளை அண்ணாச்சியிடம் கேட்டேன்.அவர் சொன்னார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே என் கைபேசி பாட ஆரம்பித்தது. அதை எடுத்து பேசுவது யார் எனப் பார்த்தேன். பேசுபரின் பெயர் இருந்தது. அது என் கணித மாணவர்.


“ சார்! எப்போ காசிக்கு வந்தீங்க.... நான் உங்க மாணவி.... எங்க வீட்டுக்கு எப்போ வருவீங்க.....”

“ நான் உன்னைப் பார்க்க கண்டிப்பா வருவேன். ஆனால் ஒரு குழுவுடன் செல்வதால் இன்று வரமுடியுமா என எனக்குத் தெரியவில்லை.நாளைக்கு புதன்கிழமை நான் வருகிறேன்..”

“ சார்!... நீங்கள்  இன்று வருவதாக நினைத்து School-க்கு லீவ் போட்டுவிட்டேன்.கண்டிப்பா இண்ணைக்கு காலையில் டிபன் சாப்பிடவாவது வாருங்களேன்....”

“அரை மணிநேரத்தில் உனக்கு நான் வருவதைப் பற்றி சொல்கிறேன்.”

ராஜேந்திரனிடம் கேட்டேன் “ அந்த student ரொம்ப வற்புறுத்துகாளே என்ன செய்ய.....” நாங்கள் இருவரும் முருகதாஸ் சாமியிடம் போய் எங்கள் திட்டம் பற்றி சொன்னோம்.  அவர் சொன்னார் “ நீங்க போகவேண்டிய இடம் Banaras Hindu University Quarters தானே. அங்கு போகும் திட்டம் உண்டு, அங்கு தான் பிர்லா மந்திர் இருக்கு .அங்கு தான் அனைவரும் காலை டிபன் சாப்பிடவேண்டும் . நீங்கள் அந்த மாணவியின் வீட்டுக்குப் போய் வாருங்கள். அங்கிருந்து புறப்பட்ட உடன் போன் பண்ணுங்கள்.நாங்கள் நிற்கும் இடத்தை உங்களுக்குச் சொல்கிறோம். வந்திருங்க்கோ”

ஆஹா! எவ்வளவு ஈசியாப் போச்சு.

அவளுக்குப் போண் பண்ணி விசயத்தைச் சொன்னேன்.

காலையில் ஒவ்வொரு சுமோ வண்டியிலும் பதினொரு பேராக ஏறினார்கள். நாங்கள் ஒன்பது பேர். எங்களுடன் ஒருவரும் சாமியும் வந்தார்.
சாரநாத் புத்தர்


காலபைரவர் கோவில், சாரநாத்,காசிராஜா அரண்மனை போன்ற இடங்களுக்குப் போய் அதன்பின் காசிப் பல்கலைக்கழக வளாகம் போனோம். நாங்கள் வந்த வண்டியில் போகலாம் அந்த மாணவர் வீட்டுக்குஎன நினைத்து அவனிடம் கேட்க அவன் முடியாது எனச் சொல்ல நாங்கள் ஒரு ஆட்டோவில் போனோம். வீடு அடுத்த சாலையில். அவன் எங்களிடம் வாங்கிய வாடகை ருபாய் 100/-
வீட்டு வாசலில் நின்று  எங்களை வரவேற்று மிகவும் அன்புடன் பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.

”நான் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பணியில் இருக்கிறேன். நீங்கள் தான் எனக்கு Inspiration. ஒவ்வோரு வருட ஆரம்பத்திலும் உங்களை நினைத்துக் கொள்வேன். ....” இதுபோல் மேலும் சொல்ல என் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோட ஆரம்பித்தது.

காலை உணவுக்குப் பின் நாங்கள் கிளம்ப தயாரானோம். என் மனைவியும் என்னுடன் வந்தாள். என் மனைவிக்கு  அந்த ஊர் சம்பிரதாயப் படி ஒரு சாரியும் ஜம்பர் துணியும் கொடுத்தாள். எங்களை ஆசிர்வதிக்கும்படி சொல்ல , திருனீரை அவள் நெற்றியில் பூசிவாழ்த்தியபின் விடை பெற்றொம். அவர்களே எங்களை எங்கள் குழுவினருடன் கொண்டு சேர்த்தார்கள்.

அப்புறம் துளசி மானஸ மந்திர் சென்று  வேறு சில கோவில்களுக்கும் சென்று விட்டு சத்திரம் போய் சேர்ந்தோம்.

காசிக் கோவிலுக்கு பூஜா சாமான் தினமும் இந்த சத்திரத்தில் இருந்து தான் செல்கிறது.

1 comment:

  1. ஓ... அங்கே உங்கள் மாணவரையும் சந்த்தீர்களா... மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete