Saturday, July 7, 2012

கல்லூரி பாடத்திட்டக் குழு திறமையுடன் செயல் பட வேண்டவே வேண்டாமா?

ஜூன் மாதம் ஒரு நாள் கல்லூரிக்கு சென்றபோது ,சுவரில் ஒட்டியிருந்த ஒரு செய்தி எனை வெகுவாகப் பாதித்தது . ஒரு தரமற்ற , நடுநிலையாளர் என்றில்லாமல் எல்லோருமே வெறுக்கத்தக்க ஒரு கதையை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை பற்றிய செய்திதான் அது.
எந்த வருடத்திலேயோ அச்சடிக்கப்பட்டு விலை போகாமலும் யாராலும் படிக்கப்படாத ஒரு புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இளம்கலை
 மாணவர்களுக்கு  பாடப்புத்தகமாக வைத்திருந்தது .
அதில் உள்ள  "நோன்பு" சிறுகதை , ஆண்டாள் பற்றிய அவதூறு பரப்பும் விதமாக அமைந்திருந்தது .

அதனை கண்டித்து அந்த சுவரொட்டியில் எழுதப் பட்டிருந்தது ...... அதில் உள்ள நியாயம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
சுயமாக எழுதாமல் வேறொரு கதையை தழுவி எழுதும் எழுத்துகளையே
 நிராகரிக்க வேண்டும் என்பது நியம விதியாக இருக்க வேண்டுமல்லவா !
சிறுகதையை படிக்கும் போது ,படிப்பவனுக்கு சுயமாக ஒரு கதையை எழுதத்
தூண்டவேண்டும் ......
எங்கே கதை இருக்கிறது அதை மாற்றி எழுதலாம் .....என
 கதையைத் தேடி மாணவர்கள் ஒடக் கூடா து .
       
நோன்பு கதை கொண்ட “நோன்பு” புத்தகம் கல்லூரிக் கல்விப் பாடத்திட்டத்தில் எவ்வாறு சேர்க்கப்பட்டது? யாரோ ஒருதனிமனிதனின் தூண்டுதல் காரணமாக சேர்க்கப்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அவரைத்தவிர Board of studies உறுப்பினர் ஒருவராவது படித்துப் பார்த்திருந்தால் இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை வந்திருக்காது. அசிங்கியமான பொருள் தோன்றும்படியான அட்டைப்படம் கூட எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
முதல் கதையே (கோணலே) கல்லுரியில் பயில ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு முற்றும் கோணலாக ஆகிவிடக்கூடாதல்லவா .இந்த நூலையே தவிர்த்து விட்டு சமநிலை தவறா நல்லாசிரியர்களைக் கொண்டு வேறொரு நல்ல நூலை தெரிந்தெடுப்பது ஒன்றே ம.சு.பல்கலைகழகத்தின் மேல் படிந்துள்ள மாசு நீங்குவதற்கான நல்வழியாகும்......
ஒரு நல்ல படைப்பாளி ,தன் படைப்புகளை தலையில் சுமந்து கொண்டு கதை இருக்கு ...... வாங்குங்கோ .....என எவன் வீட்டு வாசலிலும் போய் நிற்க மாட்டான் ......
ஒரு பல்கலைக்கழகம் எல்லாபடைப்புகளையும் வாங்கி  வைத்துக்  கொள்ள அது ஒரு குப்பைக் கூடையுமல்ல .......
Board of studies உறுப்பினர்கள் வருடம் ஒரு நாள் நடக்கும் கூட்டத்துக்கு வருவதற்காக மட்டும் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல.. யாரோ தரும் புத்தகம்  நிர்ப்பந்தம் காரணமாக அதனை ஆராய்ந்து பார்க்காமல் ஆயிரத்துக்கும்  அதிகமான  மாணவர்கள் பயில தேர்ந்தெடுக்கப்படக் கூடாது
ஒவ்வொரு உறுப்பினரும் தனது கல்லூரி சக ஆசிரியர்களிடம் கலந்து இதனைப் பற்றி திறந்த மனதோடு ஆலோசனை செய்ய வேண்டும் .

பல  நூல்களைப்  படித்து ஆராய்ந்து அவற்றில் சிறந்த ஒன்றைத்
தேர்ந்தெடுக்கவேண்டும் இப்படித் தேர்ந்தெடுத்த நூலை மற்ற உறுப்பினர்களின் பார்வைக்கும் கொண்டுவந்து எல்லா            
நூல்களையும்  படித்துப்      பரிசீலனை செய்து அவற்றுள் ஒன்றினை
 தேர்ந்தெடுத்து முடிவெடுக்க வேண்டும்..

திருந்துமா ..... மாறுமா ..... பாடத்திட்டக் குழு ...... நம்பிக் கை சிறிதும் எனக்கில்லை ....... காலம் ஒரு நாள் மாறும்.

அந்த நம்பிக்கை மட்டும் எங்கையோ மனதில் ஒரு இடத்தில் இருக்கிறது..

No comments:

Post a Comment