Wednesday, July 11, 2012

ரயில் நட்பில் கிடைத்த அனுபவம்

மே மாதம் 2-ஆம் தேதி ரயிலில் நாகர்கோவில் நோக்கி எக்மோரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம் . சற்று வேகமாகவே போய்க் கொண்டிருந்தது. கிளம்பிய சற்று நேரத்தில் ஒருவர் என்னிடம் வந்து எனது டிக்கெட் கேட்டார்.
அவர் சாதாரணமான உடையில் இருந்தார்.பொதுவாக DTR வெண்ணிற ஆடையில் கறுப்புக் கலர் கோட்டுடன்  கையில் ஒரு பேடுடன் அல்லவா வருவார். எந்த அடையாள அட்டையும் அவரிடம் இல்லை. சரி ..! ஓடும் ரயில் தானே யார் பார்க்கப்போகிறார்கள் என்று அவர் இஷ்டப்படி வருகிறாரோ ......

நான் அவரிடம் என்னிடம் இருந்த print out -ஐ  கொடுத்தேன் ...அவர் சரி பார்த்துக் கொண்டிருக்கும்போதே ...... எனது seat இங்கு இல்லை.ஆனால் எனது family இங்கே இருக்கிறது .....பக்கத்தில் கிடைத்தால் வசதியாய் இருக்கும் ....என நான் சொன்னேன் . அவர் கண்டுகொள்ளவே இல்லை.

அரை மணி நேரம் கூட ஆகவில்லை...... இன்னொருவர் வந்தார். அவரும் என்னிடம் டிக்கெட் கேட்டார்.இவர்  தான் DTR .......அவர் உடை சொன்னது....

"இப்பம் தானே ஒருவர் வந்து check பண்ணினார் ....."..நான் சொன்னேன்.

"' ஓ !.... squad  வந்துட்டுப் போனாரா...... OK ....OK ....."

எனக்கு அடுத்த இடத்தில் இருந்த இருவர் .....அடையாள அட்டை இல்லாததால் .....மாட்டிக் கொண்டனர். இருவரும் BE பட்டதாரிகள் .....
அவர்கள் மறுபடியும் டிக்கெட் எடுத்தார்கள் .fine-ம்  சேர்த்து 2200/-....

அந்த இருவரில் ஒருவருக்கு அழகியபாண்டியபுரம் ...... இன்று காசு இப்படி செலவாகணும்னு இருக்கு .......

அந்த squad ஏன் இப்படி நடந்து கொள்கிறார். அவர்களை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஒரே எரிச்சல் .....

சே ! என்ன இப்படி இருக்கிறார்.கொஞ்சம் கூட மனிதாபமே இல்லாமல்...... இவ்வாறாக  நான் பேசிக்கொண்டிருக்கும் போதே ,ஒருவர் என் பேச்சில் தலையிட்டார்.
"எங்களுக்கு ஒண்ணும் செய்ய முடியாது.....ஏன்னா எங்க வேலை அப்படி...."

எனக்கு பகீர் என்றிருந்தது.....
"நீங்களும் squad தானா ...!'
சிரித்துக்கொண்டே அவர் ஆமாம் என்றார்.....

கொஞ்ச நேரம் நான் ஒண்ணும் பேசாமல் வந்தேன்.

நாங்கள் இருந்த பெட்டியில் fan ஓடிக் கொண்டிருந்தது ...அதனால் அவருக்கு குளிர் கூடுதலாக இருக்கவே ,என்னிடம் அதை நிறுத்தலாமா என என் அனுமதியைக் கேட்டார்.

ஒரு squad அப்படிக் கேட்டது..... சற்று வித்தியாசமாகவே எனக்குப் பட்டது.

நட்புடன் பேச ஆரம்பித்தார் ......
நான் பல சந்தேகங்கள் கேட்டேன்.

ID card இல்லாமல் இருந்தால் அது without ticket தான். .... இப்போ புதியதாக வந்திருக்கும் ஆதார்  கார்டு வரை அனுமதிக்கலாம் .....
புகைப்படம் உள்ள ATM card , post office தரும் ID கார்டு ,Driving licence ,Voters ID ,Passport
 Bank Passbook with photo .....இவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை .

மிக முக்கியமான ஒரு விஷயம் :-

ஒரே printout  இல் ஒருவருக்கு அதிகமாக பலர் பயணம் செய்யும்போது யாராவது ஓருவர் ID வைத்திருந்தால் போதுமா? எல்லோரும் வைக்க வேண்டுமா?

சந்தேகம் இருந்தால் அதனையும் காண்பிக்கவேண்டும் ......

Agents -டம் நாம் டிக்கட் வாங்க நமது அடையாள அட்டையைக் கொடுப்போம் ...

நமது டிக்கட்டுடன் அடையாள அட்டை இல்லாத ஆட்களின் பெயரையும் சேர்த்து  தந்து விடுவார்கள்.

நமது அடையாள அட்டையின் நகலில் ,இன்னொரு ஆளின் புகைப்படத்தை வைத்துவிடுவார்கள் .....
கண் குருடு என பொய் சொல்லி ஏமாத்தியவனை அவன் பிடிபட்டது ......எல்லாமே சொல்லிக் கொண்டே வந்தார்.

'ஏமாற்றுபவன் .....அவனை நெருங்கும்போது ...பயப்படுவது அவன் கண்களில் தெரியும். அவன் கைகளை பிடித்துப் பார்த்தால் நாடித்துடிப்பே அவனைக் காண்பித்து விடும்'.

"நாங்களும் கண்காணிக்கப் படுவதுண்டு..... அதனால் எங்களால் ஏதும் செய்ய முடியாது......"
பேசிக் கொண்டிருக்கும் போதே முதல் squad வந்தார்......
"நீங்க upper berth எடுத்துக்கிறீங்களா ......"

Thank you .....நான் சொன்னேன்.

இப்போ இவர் எனக்கு நல்லவராகவே தெரிந்தார் ...
எனக்கு berth தந்ததால் அல்ல. அவர்களுக்கு கொடுத்த பணியை அவர்கள் சரியாக செய்வதால்.

அந்த squad இருவரும் குமரி மாவடத்துக்காரர்கள்....ஒருவர் கபடி வீரர். இன்னொருவர் Atheletic  .....
ரயில் நட்பில் கிடைத்த அனுபவம் புதியதாய் இருந்தது இந்தத் தடவை ...... 

No comments:

Post a Comment