Thursday, July 5, 2012

ராஜேந்திரன் சொன்ன.............. 5

"வேண்டாம் .....வேண்டாம் .... அந்தத்தெருவில  எனக்குத் தெரிந்த ஆளு இருக்காரு .... அதனால  சரசந்திரன்  வீட்ல வச்சுப் பேசலாம் ...." என்று  சொன்னார் நடராஜபிள்ளை ....
ஒரு தேதியில் சந்திக்க முடிவெடுத்து ,அந்த நாளில் கணேசுடன் அவனது அப்பாவும் வந்தார்கள் .
ராஜேந்திரன் ஒரு   செயரில் இருந்தான்.. நடராஜபிள்ளை ராஜேந்திரனைப் பார்த்தபடியே ,கணேசையும் அவனது அப்பாவைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தார் ..


அவர் ," நான் கல்யாணத்துக்கான செலவைக்  கொடுத்திருகேன் ..... அவங்களே  கல்யாணத்தை  நடத்தட்டும் ....."

இதற்கு கணேஷ் வீட்டார் சம்மதிக்கவில்லை .

ராஜேந்திரன் ,அவரிடம்," என்ன  நீங்க என்னைப்  பாத்தே பேசிட்டிருக்கீங்க ..... கொஞ்சம் திரும்பிப் பாருங்க .....கணேஷ்  அங்கே இருக்காம்லா ...." சொன்னான்..

லேசாக தன்  முகத்தை சற்று திருப்பி ,கணேஷைப் பார்த்தார்.

இறுக்கமான அவரது  முகம் தளர்ந்தது . கடுகடுப்பாய் இருந்த முகம் மென்மையாய் மாறியது. இதெல்லாம் நடந்தது  அவரையும்  மீறி அவரது
 மனம் செயல் பட்டதால் தான்..

கணேஷின் அழகும் பணிவும் அவரின் மனத்தைக் கட்டிப் போட்டன..

அதன் பிறகு நடராஜபிள்ளையின் பேச்சில் செயலில் ஒரு பெரிய மாற்றமே  தெரிந்தது ....

சாந்தியின் வாழ்க்கையும் கணேஷுடன் வசந்தமாய் தொடங்கியது.....

இருபது வருடங்களுக்கு அப்புறம்   இன்றைய தேதியில்   அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நான் கேட்டேன் ராஜேந்திரனிடம்  ..........

இரு குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் என்னும் ஊரில் வாழ்ந்து  வருகிறார்கள்..

சிக்கல் கோவிலின் தர்மகர்த்தாக்களில்  கணேஷும் ஒருவர்..... மிக அதிக செல்வாக்குள்ள ஒரு நபராய்  இருக்கிறார்.
நடராஜபிள்ளையும்  கணேஷும் மாமனார் மருமகன் உறவைப் பாதுகாத்தே வருகிறார்கள்..
எல்லாம்  கொடுத்த ஆண்டவன் முதல் குழந்தையை சற்று ஊனமாய் படைத்து விட்டான்.
அதனால் நிலை குலையாமல் இனி வேறொரு பிள்ளை வேண்டாம் என உறுதியான முடிவில் இருந்தாலும்  ஆண்டுகள் பல கழிந்தபின் ஒரு குழந்தையை எக்குறையும் இல்லாமல் கொடுத்தான் ஆண்டவன்  .
இப்படியொரு மனமொத்த தம்பதிகளை காண்பது மிகவும் அரியது என்று அவர்களை அறிந்தவர்கள் எல்லோருமே சொல்லும்படியாக வாழ்ந்து வருகிறார்கள் ........
நாமும் வாழ்த்துவோம்....... வாழ்க பல்லாண்டு  என.........

No comments:

Post a Comment