Thursday, July 5, 2012

ராஜேந்திரன் சொன்ன உண்மை நிகழ்வு தொடர்ச்சி...4

அவசர அவசரமாக முந்தைய வரிகள் முடிக்கப்பட்டு நான் வெளியூர் சென்று செவ்வாய்கிழமைக் காலையில் என் இருப்பிடத்துக்கு வந்தேன்.
எனது மகன் முருகன் நீங்க எழுதிய “உண்மை நிகழ்வி”ன் முடிவு தெளிவாக எழுதாதது போல் இருக்கிறதே..... மெதுவாகச் சென்ற ரயில் திடீரென வேகமாய் செல்வது போன்று இருந்தது எனச் சொன்னான்.

எனக்கு அவன் சொன்னது சரியெனப் பட்டது. நான் எழுதாமல் விட்டு விட்டதை எழுதுவது அவன் கேட்டதால் தான்.........
 முருகனிடம் சொன்னது ............
நடராஜபிள்ளை ராஜேந்திரனிடம் ," நீங்கள் சொல்வதை நானும் என் மனைவியும் ஏற்றுக்கொண்டாலும் என் மைத்துனன் அதான் அவளின் தம்பி சம்மதிக்கவே மாட்டான் ...... என் மனதுக்கும் அவ்வளவாக இஷ்டம் இல்ல ... நீ கூட எனக்கு வேண்டி பேசமாட்டேங்குறியே ......."

"அவரிடம் நான் பேசட்டுமா "  ராஜேந்திரன் கேட்டான் .

"சரி! நாளைக்கு நீங்க இதே இடத்துக்கு  நீங்க வாங்க  அவரையும்  வரச்சொல்கிறேன்...."

சொன்னபடி ராஜேந்திரனும்  சரச்சந்திரனும் போய் நின்றார்கள் ......
சற்று தூரத்தில் அத்தானும் மைத்துனனும் வந்து கொண்டிருந்தார்கள் .......

அவர்கள் அருகே வந்தார்கள் ........சற்று நேரம் ராஜேந்திரனையே உற்றுப் பார்த்த படியே ......," ஆ..... இது யாரு நம்ம  ஆறும்பிள்ளைல்லா .....நாம இரண்டு பேரும் பி..யூ சி படிசசோம்லா .....ஓம் பிரண்டு ' டத்தி'இப்போ எங்கிருக்கான் ..."

இருவரும் தனியே போய் பேசினார்கள் ........

"இந்தத் திருமணம் நடக்காது ......ஏனென்றால் சாந்தியின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை ..... நான் சம்மதிச்சா அவரு உன் மகளாய் இருந்தால் சம்மதிப்பாயா  என்று என்னிடம் கோபப்படுவார் ..... அதனாலே  எப்படியாவது இத  நிறுத்து ....."

ராஜேந்திரன் அவரிடம் ," எந்தக் காலத்துல நீ இருக்க ......அவங்க இருவரும் உங்க சம்மதத்தோட இந்த ஊரில நடத்தணும்னு ஆசைப்படறாங்க .....  உங்க மனசுப்படி அவளது இஷ்டம் இல்லாமல் நடந்தாக் கூட அவள் வாழ்க்கை நல்லா இருக்குமா ....நல்லா இருக்காது.....நரகமாகவே இருக்கும் ..... கொஞ்சம்  யோசித்துப் பாருங்கோ ......... சாந்தியின் நல்ல வாழ்க்கைக்காக  தயவு  செய்து நான்   சொல்வதைக் கேளுங்கோ ..........."  .சொன்னான் .

அவங்க  நால்வரம் ஒரு கடையில் போய் இருந்து tea குடித்துக் கொண்டே பேசிகொண்டிருந்தார்கள் .....

நடராஜபிள்ளையின் மைத்துனன் அவரைப் பார்த்து,," ஆறும்பி ள்ளை சொல்வது சரி   என எனக்குப்  படுகிறது......  பெத்த கடனுக்காக நாம் கல்யாணத்தை நடத்திருவோம்..... அதுக்கப்புறம் நாம வேணும்னா  போணும் .... இல்லாட்டா போகாண்டாம் ......."

எல்லோரும் சமாதானமாக பேசி , இரு குடுமபத்தினர்களும் ஒரு பொது இடத்தில் சந்திக்க முடிவெடுத்தார்கள் .

 ராஜேந்திரன் ,"       எங்க  வீட்ல வச்சு பேசலாம் ," என்றான்..

தயவு செய்து அடுத்த பிளாக்கில் பார்க்கவும்  .........
    

No comments:

Post a Comment