ரயிலில் பயணம் செய்யும்போது பல அனுபவங்கள் பாடமாய் அமைவதுண்டு .
தாம்பரம் ரயில் வந்தடைந்ததும் ,நாங்கள் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு தம்பதியினர் வந்து அமர்ந்தனர். அவர் வரும்போதே ஒரு பாடலை மெல்லிய குரலில் பாடிகொண்டே வந்தார்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். "ஒரு TV நிகழ்ச்சியைப் பற்றி பேசும்போது ,நான் பின்னால் இருந்ததால் குரல் எனக்கு
சரியாக கேட்கவில்லை...." அவள் அவரிடம் சொன்னாள் .
எவ்வளவு நேரம் பேசாமல் இருப்பது ?நாமே பேசுவோம் .....
நானே அவரிடம் பேச ஆரம்பித்தேன்.
'நீங்கள் நாகர்கோவிலுக்குத்தானே போகிறீர்கள்' என நான் கேட்க அவர் ,ஆமாம் என்றார் .
என்னை எங்காவது பாத்திருக்கிறீர்களா என்று என்னைக் கேட்க ,நான் அவரிடம்,' இல்ல......நீங்க போன் பேசும்போது ,"பிள்ளையார் கோவில் பக்கம் காலைல வந்துரு" என சொன்னீங்க ......
அதனால நாகர்கோவில் தான் என நினைத்துக் கொண்டேன் ......
உங்க பெயர் சந்திரனா ? .......எப்படிச்சொன்னேன் ....
அவருக்கு ஆச்சரியம் ...
அதனையும் நீங்க போனில் பேசும்போது தான் கேட்டேன் என்று சொன்னேன்
அவர் கம்பளத்தில் பத்தி,குங்கும கடை ......பிச்சி ஸ்டோர்ஸ் ...... வைத்திருக்கிறேன்.நாங்க இப்பம் ஒரு நிகழ்ச்சிக்கு போயிற்று வாறோம் .... கோபுரம் மார்க்கு குங்குமம் கம்பெனி நடத்தும் நிகழ்ச்சி .... கூடுதலாக விற்ற தால் எங்களை அழைத்து கௌரவித்தார்கள் ...52 பேர் கலந்து கொண்டோம் ...அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி நடந்தது.
,தங்க லாட்ஜ் ,சாப்பாடு,போய் வர AC ticket எல்லாம் கம்பனி செலவுதான்.
"எங்களுக்கு வெள்ளியில் விளக்கு பரிசாக தந்தார்கள்....
என்மகள் திருமணத்துக்கு கொடுத்த வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே பரிசாக கிடைத்தது தான்."
"நான் ,என்ன உங்க மகளுக்கு கல்யாணம் ஆயிற்றா ...... நீங்க பாக்கதுக்கு சின்னப் பையன் மாதிரியல்லா இருக்கியோ !"
"அப்படியா ..... நான் சின்ன பையன் மாதிரியா இருக்கேன். எங்க அண்ணன் மகளுக்கு கல்யாணம் நடந்தபோது ,எல்லோரும் என்னைப் பாத்து
உங்க தம்பியின் மகளுக்கா கல்யாணம் என்று கேட்டார்கள்.என் தலை முடி வெள்ளையா இருக்கில்லா .... "
"இல்ல..... சின்னப் பையன் போலதான் நீங்க இருக்கியோ ...... உங்களை பார்த்தும் நீங்க இருவரும் பாடகர்கள் என நினைத்துக் கொண்டேன். " இது நான்.
அவர் ," எனக்கு ஒரு பையன் இருக்கான். B.tech படிச்சுட்டு இருக்கான்.....
நாங்க இருவரும் காலைல கடைக்கு வருவோம். நான் மாவட்டம் முழுவதும் வேனில் பத்தி ,குங்குமம் கொடுத்து விட்டு வருவேன்.கடையில் வேலைக்கு ஆள் ஒன்றும் கிடையாது"
.
நான் சற்று வெளியே போன போது ,அவர் என்னருகே வந்து ,"நீங்க சொன்னது சரிதான்.ஆனால் என் மனைவி பாடகி இல்லை. கல்யாணத்துக்கு முன் கதா காலட்சேபத்துக்கு போவது உண்டு. திருவாடுதுறை ஆதினத்தில் அவள் ஒரு புலவர்."
பேச்சு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
நாங்கள் வெள்ளாளர்கள். நீங்க யாரு ? அவர் கேட்டார்.
நான், " நாங்களும் உங்க ஆள்தான்...... உங்க மனைவி தாலியை மஞ்சள் கயிற்றில் போட்டிருக் கிறாங்களே ...திருநெல்வேலியா?" கேட்டேன்.
இல்லையில்லை இந்த ஊர்தான். கொட்டாரம் தான் எங்க ஊர் ..
நான் என்னைப் பற்றி சொன்னதும் அவர் கடுக்கரையில் இருந்த ஒருவரைப் பற்றி பெருமையாகக் கூ றி தெரியுமா ?என்று கேட்டார்.
என்மனைவி ," குங்குமத்தை நெற்றியில் வைத்தால் , நெற்றியில் கருப்பு தழும்பு ஏற்படுகே..... நல்ல குங்குமம் எது.."கேட்டாள் .
கோபுரம் மார்க்கு குங்குமம் தான் நல்லகுங்குமம் என்றாள் .
"தாலியை கயிற்றில் தான் போடவேண்டும். திருமணமான புதிதில் நான் சின்னப் பெண்ணாக இருந்தேன் . தங்க செயினில்தான் தாலி போட்டிருந்தேன் .ஆனாலும் என்னை கல்யாணம் ஆயிற்றா என்றுதான் என்னைக் கேட்டார்கள்."
"அதன்பிறகுதான் நான் மஞ்சள் கயிற்றில் தாலி கட்ட ஆரம்பித்தேன்.இந்து மதம்
எதை சொல்கிறதோ அதையே நான் செய்கிறேன்.
நான் வருடத்துக்கு ஒரு முறை கயிறை மாற்றுவேன்."என்றாள் . நெற்றி வகிடில் குங்குமத்தை வைப்பதுவும் எனது பழக்கம் என்றும் சொன்னாள் .
காலையில் ரயில் நாகர்கோவில் வந்தது.....ரயில் நண்பர்கள் பிரியா விடைபெறும்
நேரமும் வந்தது . வணக்கம் சொல்லி விட்டு வந்தோம்....
தாம்பரம் ரயில் வந்தடைந்ததும் ,நாங்கள் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு தம்பதியினர் வந்து அமர்ந்தனர். அவர் வரும்போதே ஒரு பாடலை மெல்லிய குரலில் பாடிகொண்டே வந்தார்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். "ஒரு TV நிகழ்ச்சியைப் பற்றி பேசும்போது ,நான் பின்னால் இருந்ததால் குரல் எனக்கு
சரியாக கேட்கவில்லை...." அவள் அவரிடம் சொன்னாள் .
எவ்வளவு நேரம் பேசாமல் இருப்பது ?நாமே பேசுவோம் .....
நானே அவரிடம் பேச ஆரம்பித்தேன்.
'நீங்கள் நாகர்கோவிலுக்குத்தானே போகிறீர்கள்' என நான் கேட்க அவர் ,ஆமாம் என்றார் .
என்னை எங்காவது பாத்திருக்கிறீர்களா என்று என்னைக் கேட்க ,நான் அவரிடம்,' இல்ல......நீங்க போன் பேசும்போது ,"பிள்ளையார் கோவில் பக்கம் காலைல வந்துரு" என சொன்னீங்க ......
அதனால நாகர்கோவில் தான் என நினைத்துக் கொண்டேன் ......
உங்க பெயர் சந்திரனா ? .......எப்படிச்சொன்னேன் ....
அவருக்கு ஆச்சரியம் ...
அதனையும் நீங்க போனில் பேசும்போது தான் கேட்டேன் என்று சொன்னேன்
அவர் கம்பளத்தில் பத்தி,குங்கும கடை ......பிச்சி ஸ்டோர்ஸ் ...... வைத்திருக்கிறேன்.நாங்க இப்பம் ஒரு நிகழ்ச்சிக்கு போயிற்று வாறோம் .... கோபுரம் மார்க்கு குங்குமம் கம்பெனி நடத்தும் நிகழ்ச்சி .... கூடுதலாக விற்ற தால் எங்களை அழைத்து கௌரவித்தார்கள் ...52 பேர் கலந்து கொண்டோம் ...அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி நடந்தது.
,தங்க லாட்ஜ் ,சாப்பாடு,போய் வர AC ticket எல்லாம் கம்பனி செலவுதான்.
"எங்களுக்கு வெள்ளியில் விளக்கு பரிசாக தந்தார்கள்....
என்மகள் திருமணத்துக்கு கொடுத்த வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே பரிசாக கிடைத்தது தான்."
"நான் ,என்ன உங்க மகளுக்கு கல்யாணம் ஆயிற்றா ...... நீங்க பாக்கதுக்கு சின்னப் பையன் மாதிரியல்லா இருக்கியோ !"
"அப்படியா ..... நான் சின்ன பையன் மாதிரியா இருக்கேன். எங்க அண்ணன் மகளுக்கு கல்யாணம் நடந்தபோது ,எல்லோரும் என்னைப் பாத்து
உங்க தம்பியின் மகளுக்கா கல்யாணம் என்று கேட்டார்கள்.என் தலை முடி வெள்ளையா இருக்கில்லா .... "
"இல்ல..... சின்னப் பையன் போலதான் நீங்க இருக்கியோ ...... உங்களை பார்த்தும் நீங்க இருவரும் பாடகர்கள் என நினைத்துக் கொண்டேன். " இது நான்.
அவர் ," எனக்கு ஒரு பையன் இருக்கான். B.tech படிச்சுட்டு இருக்கான்.....
நாங்க இருவரும் காலைல கடைக்கு வருவோம். நான் மாவட்டம் முழுவதும் வேனில் பத்தி ,குங்குமம் கொடுத்து விட்டு வருவேன்.கடையில் வேலைக்கு ஆள் ஒன்றும் கிடையாது"
.
நான் சற்று வெளியே போன போது ,அவர் என்னருகே வந்து ,"நீங்க சொன்னது சரிதான்.ஆனால் என் மனைவி பாடகி இல்லை. கல்யாணத்துக்கு முன் கதா காலட்சேபத்துக்கு போவது உண்டு. திருவாடுதுறை ஆதினத்தில் அவள் ஒரு புலவர்."
பேச்சு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
நாங்கள் வெள்ளாளர்கள். நீங்க யாரு ? அவர் கேட்டார்.
நான், " நாங்களும் உங்க ஆள்தான்...... உங்க மனைவி தாலியை மஞ்சள் கயிற்றில் போட்டிருக் கிறாங்களே ...திருநெல்வேலியா?" கேட்டேன்.
இல்லையில்லை இந்த ஊர்தான். கொட்டாரம் தான் எங்க ஊர் ..
நான் என்னைப் பற்றி சொன்னதும் அவர் கடுக்கரையில் இருந்த ஒருவரைப் பற்றி பெருமையாகக் கூ றி தெரியுமா ?என்று கேட்டார்.
என்மனைவி ," குங்குமத்தை நெற்றியில் வைத்தால் , நெற்றியில் கருப்பு தழும்பு ஏற்படுகே..... நல்ல குங்குமம் எது.."கேட்டாள் .
கோபுரம் மார்க்கு குங்குமம் தான் நல்லகுங்குமம் என்றாள் .
"தாலியை கயிற்றில் தான் போடவேண்டும். திருமணமான புதிதில் நான் சின்னப் பெண்ணாக இருந்தேன் . தங்க செயினில்தான் தாலி போட்டிருந்தேன் .ஆனாலும் என்னை கல்யாணம் ஆயிற்றா என்றுதான் என்னைக் கேட்டார்கள்."
"அதன்பிறகுதான் நான் மஞ்சள் கயிற்றில் தாலி கட்ட ஆரம்பித்தேன்.இந்து மதம்
எதை சொல்கிறதோ அதையே நான் செய்கிறேன்.
நான் வருடத்துக்கு ஒரு முறை கயிறை மாற்றுவேன்."என்றாள் . நெற்றி வகிடில் குங்குமத்தை வைப்பதுவும் எனது பழக்கம் என்றும் சொன்னாள் .
காலையில் ரயில் நாகர்கோவில் வந்தது.....ரயில் நண்பர்கள் பிரியா விடைபெறும்
நேரமும் வந்தது . வணக்கம் சொல்லி விட்டு வந்தோம்....
No comments:
Post a Comment