Monday, March 19, 2012

என் பெயரை மறந்த குறத்தியறை பள்ளியில் படித்த தாஸ்.......

மாலையில் 3 மணிக்குப் போன மின்சாரம் எப்போ வரும் ? தெரியாது....ஆனால் போகும்போது சொல்லாமல் கொள்ளாமல் போய்விடும்.......வெயிலின் தாக்கம் சற்று கூடுதல்........மணி 5.30......வீட்டில் இருக்க முடியவில்லை......நடந்தது போலும் இருக்கும் கடைக்குப் போனது மாதிரியும் இருக்கும் என்றெண்ணி வெளியே கிளம்பினேன்.....ஒரு பையையும் கையில் எடுத்துக் கொண்டேன்...பைக்கும் காசு கேப்பானே....

சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, “ கடுக்கர ....கடுக்கர....” என சத்தம் வந்தது..... எங்கிருந்து யார் இப்படி ......?  ஒரு கடையில் இருந்து ஒரு ஆள் என்னை நோக்கி என்னருகே வந்தார்.

“உங்க பேரு தெரியல்ல ....அதான் அப்படிக் கூப்பிட்டேன்......” என்றார்

எரிச்சலுடன் இருந்த நான் அவரைத் தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள்வில்லை... நிக்காமல் அந்த இடத்தை விட்டு போக சற்று நகர முயன்றேன்....

“உங்க அண்ணன் இப்போ எங்கே இருக்கான்.”  கேட்டான்

 “கடுக்கரையில் இருக்கான்”

‘என்னத் தெரியல்லியா?’

நான், “ தாஸ் தானே நீ.... மாணவர் தலைவர் தேர்தல்ல உன்னை எதுத்து நிண்ணது என் அத்தான் சிவதாணு ......எல்லாமே ஞாபகம் இருக்கு...” என்றேன்.

 “ நான் அவனைத்தான் ஒன் அன்ணன்னு நினச்சுகிட்டு கேட்டேன்” என்றான்

“அப்படியா.... அத்தான் இப்போ இல்ல.....” என்று சொன்னேன்......

தாஸுக்கு வயது 68 .... வழுக்கைத்தலை. பாக்க 75 வயதுக்கு மேலான தோற்றம்....

அவன் சொன்னது...... அவனுக்கு இரண்டு பிள்ளைகள்..... மூத்தவள் பெண்.....அவளுக்கு 5 பெண் பிள்ளைகள்......பின் ஒரு மகன்........

மகன் கோட்டயத்தில் ஏசி மெக்கானிக்காக இருக்கான்......நல்ல படிக்கல்ல....ஒரே அசத்து..... சொன்னால் ஒண்ணும் கேக்க மாட்டான்......வீட்டுக்கு வந்தாலும் அவன் பேசினாலும் நான் பேச மாட்டேன்.....ஆனால் அவன் மிகவும் வசதியாய் இருக்கான்...... அவனுக்குள்ள சொத்தை தனது அக்காளுக்கே கொடுத்து விட்டான்.................

“நல்ல பையன் தானெ .ஏன் பேசாமல் இருக்க” நான் கேட்டேன்.......

“இப்போ ஊரில் உள்ள வீட்டை விற்று அவனது அம்மைக்கு ருபாய் கொடுக்க சம்மதிச்சிருக்கான்...... அவ கீழ விழுந்து ஆஸ்பத்திரியில் இருக்கா........”

“ உனக்கு நல்லது தானே செய்திருக்கான்... .....” இது நான்.

“அவன் கல்யாணம் செய்திருக்கும் பெண் வேறு ஜாதிப் பொண்ணு...... கல்யாணத்துக்கும் கூட நாங்க போகல்ல..... அவன் கூப்பிடல்ல....... எப்படி அவன் கிட்ட பேச முடியும்......அவனுக்கு இப்போ 90 ஏக்கர் சொத்து இருக்கு......18 கடை இருக்கு.....மாமனார் இல்ல....... நாங்கள் கோட்டயத்துக்குப் போனதே கிடையாது....”

 “நான் அவனிடம் ஒரு பைசா வாங்கமாட்டேன்......”

“அதெல்லாம் சரி.... நீ இப்ப என்ன செய்துட்டிருக்கெ......” என்று கேட்டதும்

அவன் “ ஒரு தெம்பு புடிச்சவன்ற வேல பாத்துக்கிட்டுருக்கேன்...” என்றான்.

”புடிக்கல்லண்ணா அந்த ஆளுகிட்ட ஏன் வேலை பாக்குற....”

அப்படிப்பட்ட ஆள்ட்டதானெ பணம் நெறைய இருக்கு......என்ன செய்ய.....விதி.... இன்னும் எத்தனை நாளோ ....போகிற நாள் போகட்டும்......

மிகவும் அன்பாய் குறத்தியறை பள்ளியில் படித்த அனைவரையும்
 பெயர் சொல்லி விசாரித்தான்....அவன் சொன்ன பெயர்கள் அத்தனையும் வகுப்பில் படித்த பெண்களின் பெயர்களே.....

கடைசி வரை என்னிடம் என் பெயரையே கேட்கவில்லை....

 அவனைப் பொறுத்தளவில் என் பெயர் ’கடுக்கர’ தானோ என்னவோ

No comments:

Post a Comment