Friday, June 29, 2012

ராஜேந்திரன் சொன்ன உண்மை நிகழ்வு தொடர்ச்சி...3

“ நாங்க ரெண்டுபேரும் உங்க வீட்டுக்கு வந்தோம்.... நீங்க அண்ணைக்கு இல்ல....”
 அவர். “ நீங்க ஒண்ணு செய்யுங்கோ..... போய் அவளைக் கூட்டிட்டுப் போய் அந்த பயலுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருங்கோ... இப்பமே போங்கோ... நான் இங்கேயே இருக்கேன்” என்று சொன்னார்.

“அதுக்கு நாங்க ஏன் இவ்வளவு தூரம் கஷ்டப்படணும் . முறையா கல்யாணம் நடக்கதுக்குல்லா உங்கள்ட்ட பேச வந்திருக்கோம்”சொன்னான் ராஜேந்திரன்.

“ நீங்க யாரு ஓய் அவளுக்கு மாப்பிள்ளை பாக்கதுக்கு....... ஆமாம்... யாருண்ணெ எனக்குத் தெரியாது....அவன் எனக்கு எழுத்து எழுதுகான்.... அன்புள்ள மாமாவுக்கு-ன்னு நான் ஆஸ்பத்திரியில் இருந்தப்போ கடவுள் புண்ணியத்தில சீக்கிரம் குணமாகணும்......” அவர் கத்தினார்.
” இதில என்னய்யா தப்பு .......” இது ராஜேந்திரன்..

எந்த முறைல அவன் எனக்கு மருமகன்........பேச்சு தாறுமாறாக போய்க் கொண்டிருந்தது..

அவர், “ நான் உங்ககிட்ட இவ்வளவு நேரமும் பேசிக்கிட்டிருந்தேன்லா... ஒரு தடவை கூட நான் அவள் பெயரையோ அல்லது மகளென்றோ சொல்லவில்லை..... ஆனால்  எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கு..... அவள் தாய் மாமன்லாம் இருக்கான்...... அவன்லாம் என் முகத்துல காரல்லா துப்புவான்......”
“நாங்கள்லாம் யாருண்ணு நினச்சிகிட்டு இப்படி பேசுறீரு.... அவர் காலேஜ் வாத்தியாரு...... நானும்.....” ராஜேந்திரன் சொல்லி முடிக்கல்ல......

அவர்,” நீ கடுக்கரை சுப்பையண்ணன் மகன் தானே...... ஒங்கிட்ட நான் பேச எனக்கு என்ன இருக்கு..... நான் இண்ணைக்கே கடுக்கரைக்குப் போய் சுப்பையண்ணனை பாத்து பேசுகேன்.”

”சரி போய் பாருங்கோ..... நான் அப்பாட்ட சொல்லிகிட்டுதானெ உங்க கிட்டேயே வந்து பேசுகேன்..... நீங்க ரெம்ப நல்ல குணம்னுலா சொன்னா பாத்தா அப்படித் தெரியல்லையே!.....
 நான் அந்தப்பையனப் பாத்திருக்கேன்..... ராஜா மாதிரி அழகாய் இருக்கான்..  நீரு நாஞ்சில் நாட்ல எப்படியோ......அவன் அவங்க ஊர்ல பெரிய குடும்பத்துப்பிள்ள.....அவங்களுக்கும் குடும்பமானம்லா உண்டு... அதனால தான் உங்க சம்மதத்துக்கு காத்துக்கிட்டிருக்காங்க......இந்த கல்யாணம் மாத்திரம் நடந்தா உம்ம மாதிரி யோகக்காரன் யாருமில்ல..... உமக்குச் சொன்னா மண்டைல ஏறவும் மாட்டேங்கு...... என்ன செய்ய....சாந்திக்கு தலையெழுத்து நல்லாயிருந்தா திருமணம் நடக்கும்... இல்லாட்டா எப்படியோ அவங்க அவங்க விதி போல நடக்கட்டும்.....” ராஜேந்திரனும் சத்தம் போட்டுச் சொன்னான்.

“ வாங்க tea  குடிக்கலாம்.......” சற்று அமைதியாக பேசினார்.

தாய் மாமன், ராஜேந்திரன் பேச்சில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு
பேசியதால் மனம் சமாதானம் அடைந்தார்.

சரச்சந்திரன் வீட்டிற்கு இரண்டு குடும்பத்தில் உள்ளவர்களும் வந்தனர்.
பையனைப் பார்ததபின் நடராஜபிள்ளையின் பேச்சில் நல்ல மாற்றம்  ஏற்பட்டது.....
 ந்கழ்ச்சியை ஆரம்பிக்கும்போது பிள்ளையாரைத்தான் வணங்குவோம். சத்சங்கம் முடிவுறும்போது ஓம் சாந்தி...சாந்தி... என்று முடிப்போம்.
கணேஷும் சாந்தியும் தெய்வக் குழந்தைகளே.....

திருமணம் நல்லபடியே முடிந்து இன்றோடு 2 1 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இரண்டு பிள்ளைகள்....... இணை பிரியாமல் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்......
முடிக்கும் முன்பு நான் சொல்லியே ஆக வேண்டியது ஒன்றிருக்கிறது....இதனைச் சொன்ன ராஜேந்திரன் மிகவும் ரசனையோடு கூறினான்..... என்னால் அந்த ரசனையை எழுத்தில் கொண்டு வரமுடியவில்லை........

மன்னித்தருள்க.....

No comments:

Post a Comment