Wednesday, July 20, 2011

தாழாக்குடியில் வாழும் ஒரு பெரியவர்

2003 November தினமணியில் வந்த செய்தி.......ராமன்பிள்ளை
______________________________________________________________

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஊதியமின்றி நூலகத்தை பராமரிப்பதோடு அப்பகுதியை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பதற்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார் தாழாக்குடியை சேர்ந்த பி.ராமன்பிள்ளை.

1992-ல் ஓய்வு பெற்றபின் சமுதாயசேவை செய்ய விரும்பினார்.சேதமுற்ற நூல்களைத் தன் சொந்த முயற்சியில் சீர் செய்தார். சுமார் 3000 நூல்களைக் கொண்ட நூலகத்தை அழகுபடுத்தி அனைவரது பாராட்டையும் இவர் பெற்றார். ஊர் சார்பில் வழங்கப்பட்டு வரும் நெல்லை விற்று அதனை நூலக பராமரிப்புக்காக செலவு செய்து வருகிறார்.

இப்பகுதியில் படித்து வரும் பள்ளி மாணவ மாணவிகழுக்கு இலவசமாகவே கல்வி கற்றுத் தருகிறார். நூலகத்தை மையமாகக் கொண்டு கிராம வளர்ச்சி மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மன்றத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குளுக்களும் ஆடவர் குழுக்களும் உள்ளன.இந்த குழுக்களின் வரவு செலவு கணக்குகளையும் இவரே பராமரித்து வருகிறார்.

நூலகப்பணிகழுக்கிடையே ஆசிரியர் ஸ்ரீ மெய்கண்டான் எழுதிய ‘சிவஞான போதம்’ என்ற நூலுக்கு 350 பக்கங்களை விளக்கவுரையையும் எளிய நடையில் இவர் எழுதி முடித்துள்ளார்

No comments:

Post a Comment