Thursday, October 13, 2011

17 வயதில் திருமணம்

1973-ம் வருடம். நான் பணியில் சேர்ந்த வருடம்.வேண்டா வெறுப்பால் அப்பா சொல்லி விட்டார் என்பதற்காக மாத்திரமே வேலைக்கு வந்த நேரம்.முதல் நாள் கல்லூரி முதல்வரைப் போய் பார்த்தேன். President-ஐப் பாத்துட்டு வா.

முதல் நாளே வகுப்புக்குப் போன நான் துறைத்தலைவரால் பாராட்டப்பட்டேன். வருடம் ஒன்று ஓடியது.என்னை P.U.C F Batch-க்கு Group Tutor -ஆக போட்டார்கள்.

கீரிப்பாறையில் இருந்து ஒரு பையன் என் வகுப்புக்கு வருவான்.மற்ற வகுப்புக்கு போகாமல் இருந்தது என் கவனத்துக்கு வந்தது.நான் அவனை அழைத்துக் கேட்டதில் அவனது பதிலில் திருப்தி இல்லாமல் வீட்டில் இருந்து அப்பாவைக் கூட்டிக்கொண்டு வரச்சொன்னேன். அடுத்தநாள் அப்பாவை அழைத்து வராமல் அம்மாவை அழைத்து வந்தான்.
பையனை வகுப்புக்கு போகச் சொல்லி விட்டு அவன் அம்மையிடம் பேசினேன்.நான் வாரத்துக்கு ஒரு முறை உங்களை வந்து சந்திக்கிறேன் எனச் சொல்லி அப்படியே செய்தாள்.

டிசம்பர் மாதம் முடிந்த பின் பையன் வகுப்புக்கு வரவில்லை.தாயாரும் வரவில்லை. கடிதம் எழுதி போட்டேன். தாயார் வந்தாள்....

அவள் என்னிடம், “ உங்களுக்குக் கல்யாணம் ஆயிற்றா”

இல்லை என்றேன். 17 வயதில் திருமணம்

”உங்கள் மாணவன்....அதான் என் மகனுக்கு... கல்யாணம். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான்.அவனுக்கு ஜனுவரியில் கல்யாணம்....” எனக்கூறி கடிதமும் தந்தாள்.

அதன் பிறகு அவனைக் கண்டேன்.அவனும் கண்டான்.....பாத்தும் பாக்காததுபோல் போய்விட்டான்.

No comments:

Post a Comment