Friday, October 28, 2011

எங்க வீட்டுக்கு போண் வந்த கதை

1979 அல்லது 80-ம் வருடம்.கடுக்கரையில் தொலைபேசி ஒரு வீட்டில் கூட கிடையாது. பெருமாள் கோயில் பக்கம் உள்ள ரைஸ்மில்லில் மாத்திரம் உண்டு.ஓணர் இருக்கும் போது மட்டுமே வெளியாட்கள் காசு கொடுத்துப் பேசலாம். பூதப்பாண்டி Exchange. Dial phone. நாகர்கோவிலுக்கு Trunk call book பண்ணி தான் பேசணும்.பக்கத்து ஊரான நயினார் தோப்பில் ஒரு வீட்டில் தொலைபேசி இருந்தது.

போண் இருந்தும் இல்லா நிலைமை. நான் அங்கு போய் போணில் பேச விரும்புவதில்லை. ஒரு நாள் எனது HOD க்கு இரவு பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானே தான் பேச வேண்டும் என்பதால் ரைஸ்மில்லுக்குப் போனேன். ஓணர் இருந்தார். ஓணர் எனக்கு சொந்தம் தான். அத்தான் மைத்துன உறவு.

போண் வேணுமே. நாரூலுக்குப் பேசணுமே....என நான் கேட்க அவரோ நம்பர சொல்லு மாப்பிள என்றார். போண இப்படி கொஞ்சம் எங்கிட்ட தாருங்கோ நானே பேசுகேனே என்றேன்.

போணைத் தரவே இல்லை. எனக்கு போண் பண்ணாமலேயே போயிரலாமா எனத் தோணியது.
வேறெங்க போய் பேச....வழி இல்லை...பேசிவிட்டு காசையும் கொடுத்துவிட்டு கடுப்புடன் வீட்டுக்கு வந்தேன்.

அப்பாவிடம் போய் போண் வீட்டில் வைக்க சம்மதம் கேட்டேன். அப்பாவுக்கு இஷ்டம் இல்லை.

எனக்கு மன உறுத்தல். போண நம்மிடம் தந்தா என்னா....தேஞ்சா போயிரும்....

ஊரில் ஒரு போஸ்ட் ஆபீஸ் உண்டு. திருமலையாண்டி தான் அதன் பொறுப்பாளர்.அவரிடம் போய்,“ நம்ம ஆபீஸ்ல போண் வைக்க என்ன செய்யணும்....யாரைப் போய் பாக்கணும்...”
எல்லா விவரங்களையும் கேட்டேன்.

நாகர்கோவில் அதிகாரிக்கு விளக்கமாக வின்ணப்பம் அனுப்பி விட்டு நேரடியாகவும் போய் பாத்தேன். பிரச்சனை ஒண்ணுமே இல்லை....போண் வச்சுரலாம்.... ஆனா இப்பம் Instrument stockil இல்லை என்றார்கள்.

திருநெல்வேலியில் இருந்து தான் instrument வரணும். அந்த செக்ஸனில் இருப்பவர் ஒழுகினசேரியில் இருந்து கணபதியாபிள்ளை எனவும் தெரிந்து கொண்டேன்.

யார் இந்த கணபதியா பிள்ளை ? கடுக்கரை வடக்குத்தெரு பப்புவின் தங்கச்சியின் மாப்பிள்ளைதான் இவர்....அவருக்கு ஒரு கடிதம் நானே எழுதினேன். ஒரு வாரத்தில் கடுக்கரை போஸ்டாபீஸ்ல போண் வந்தது.....

போஸ்டாபீஸ் அலுவலக நேரம் மத்தியானத்தோடு முடிஞ்சுரும்.... அந்த நேரத்துக்கு அப்புறம்
பழைய குருடி கதவைத் திறடி கதை தான்....

MINI CLUB -ல் போண் வச்சுரலாம் எனப் plan போட்டேன். கிருஷ்ணன் , “ அது வேண்டாண்ணெ .... நீ தான் பணம் கட்டணும்..அதுக்கு உங்க வீட்லயே வச்சுரலாமே”

அப்பா சம்மதிக்க மாட்டாங்களே ......

அப்பம் என் தங்கச்சிக்கு குழந்தை பிறந்து வீட்ல இருந்தா.சிசேரியன் மூலம் தான் பிரசவம்.
வீட்ல அப்பா இல்ல...நானும் இல்லை.....தங்கச்சிக்கு strich போட்ட இடத்தில் வயிற்றில் ரத்தக் கசிவு இருந்தது...குளிக்கும்போது பாத்து பயந்துட்டா...

அம்மையும் என் மனைவியும் ஒரு Taxi பிடிக்க படாது பாடு பட்டார்கள்.....ஒரு போண் இருந்தால் இந்தப் பிரச்சினை உண்டா.......ஒருவழியாக அப்பாவின் அனுமதி கிடைத்தது.

வீட்டில் போண் வைக்க வின்ணப்பித்தேன். பூதப்பாண்டி exchange-இருந்து வந்து பாத்தாங்க. அந்தச் சமயத்திலல்லாம் எந்த ரூம்ல வைக்கணும் என் முன்கூட்டியே சொல்லணும்.

அப்பாவின் ரூமில தான் வைக்கணும்னு சொன்னேன்.

அதன் படியே போண் வந்தது. போண் உள்ள முதல் வீடு எங்க வீடு.
எங்களுக்கு மட்டும் அல்ல ......எல்லோருக்குமே பயன்பட்டது....

எனது Telephone number: 63

No comments:

Post a Comment